Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 மணி நேரத்துக்குள் 7தற்கொலைத் தாக்குதல்கள் படையினருக்கு பலத்த சேதம்; முன்னகர்வு தீவிரம் - பிரிகேடியர் தெரிவிப்பு

Featured Replies

24 மணி நேரத்துக்குள் 7தற்கொலைத் தாக்குதல்கள் படையினருக்கு பலத்த சேதம்; முன்னகர்வு தீவிரம் - பிரிகேடியர் தெரிவிப்பு

வன்னியில் இராணுவ முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளால் 7 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் படைத்தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தமது முன்னகர்வு முயற்சியை தீவிரப் படுத்திய படையினர் இரட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டுள்ள சுமார் 700 மீற்றர் அளவான பாரிய மண்மேட்டினை கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியதாவது :

தற்கொலைக் குண்டுதாரிகள் நால்வர் மோட்டார் சைக்கிள்களில் வந்து இரண்டு தடவையும் கெப் ரக வாகனத்தில் வந்து ஒரு தடவையும் தாக்குதல்களை நடத்தினர். கடந்த 24 மணிநேரத்தில் 7 தற்கொலைத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தை நோக்கிய முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் படைத்தரப்பில் பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இருப்பினும் புலிகளின் அத்தாக்குதல்களுக்கு மத்தியில் தீவிர முன்னகர்வு முயற்சினை மேற்கொண்ட படையினர் இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரிய மண்மேடொன்றின் ஒருபகுதியினைக் கைப்பற்றியுள்ளனர். 10அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட இந்த மண்மேடானது புலிகளின் பிடியிலுள்ள பொதுமக்கள் தப்பிச் செல்லாதிருக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கியுள்ள பொதுமக்கள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்லாதிருப்பதற்காக வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள அனைத்துப் படகுகளையும் தீயிட்டு எரித்துவிடுமாறு அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

http://www.virakesari.lk/

கடல்சண்டை:ராணுவத்தின் பீரங்கிப் படகை மூழ்கடித்த புலிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பெரிய முயற்சி, கடற்புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள கடற்படையினர் இன்று அதிகாலை 15 'டோறா' பீரங்கிப் படகுகள், 25 'அரோ' படகுகள் மற்றும் 'கூகர்' படகுகளில் தரையிரக்கி தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு கடற்புலிகள் பதிலடி கொடுத்துள்ளன.

இந்த கடும் கடல் சண்டையின் போது, சிங்கள கடற்படையினரின் 'டோறா' பீரங்கிப் படகு ஒன்று முழவதுமாக அழித்து மூழ்கடிக்கப்பட்டதுடன், மூன்று 'அரோ' படகுகளையும் கடல்புலிகள் அழித்துள்ளன.

பல மணி நேரம் நீடித்த இந்த கடும் சண்டைக்கு பின்னர், தங்களது முயற்சி கைகூடாத நிலையில் சிங்களப்படையினர் பின்வாங்கிச்சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த படையினர், இன்று பிற்பகல் கரையோர மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

nakheeran

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கடலிலா? கடற்படையிடம் கடலா? பாதுகாப்பு தரப்பை அதிர வைக்கும் கடற்புலிகள்?

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் பாரிய கடற் சமர் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளதாக ஜீரிஎன்னின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். 70 வரையிலான டோராக்கள் புடை சூழ துருப்புக் காவிக்கப்பலிலிருந்து பாரிய படையிறக்கம் ஒன்றை முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொள்ள முனைந்த கடற்படை மற்றும் ராணுவத்திற்கெதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களைத் தொடுத்ததாக எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நீண்ட நேரம் இடம்பெற்ற மோதலில் இரு தரப்பிலும் ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் குறித்து கள முனையிலிருந்து சுயாதீனத் தகவல்கள் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

எனினும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு விடுதலைப் புலிகளின் கரும்புலி படகுகள் உள்ளிட்ட 6 படகுகள் தம்மால் அழிக்கப்பட்டதாகவும் இதில் 24 கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் அதன் உத்தியோகபூர்வ செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும் தமது கடுமையான தாக்குதலில் அரச கடற்படையினரின் 2 டோரா படகுகள் முற்றாக மூழ்கடிக்கப்பட்டதாகவும் மேலும் சில படகுகள் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தெரிய வருகின்றது. எனினும் இதனை விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புல்மோட்டையிலிருந்து பருத்தித்துறை முனை ஈறாக கடற்புலிகளும் அரச கடற்படையினரும் தொடர் சமர் ஒன்றில் ஈடுபட்டதாக கொழும்பின் பாதுகாப்புத் தரப்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

இந்தச் சமரில் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தொலை தூரத்திற்கு துரத்திச் சென்று தாக்குதல்களை மேற்கொண்டதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

கடற்புலிகள் அரச கடற்படையினரை புல்மோட்டை வரை துரத்திச் சென்று தாக்குதல்களை நடத்தியதாகவும் பின்னர் புல்மோட்டையிலிருந்து பருத்தித்துறை முனை வரை கடற்புலிகளை கடற்படையினர் துரத்தித் தாக்கியதாகவும் கடற்புலிகள் ஆழ்கடலைத் தாண்டிச் சென்றவுடன் கடற்படையினர் பின்வாங்கியதாகவும் தெரிய வருகின்றது.

கடற்புலிகளின் வலு முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அரச பாதுகாப்புத் தரப்பிற்கும் இலங்கை அரசாங்கத்தின் உயர் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் கடற்புலிகளின் இத்தகைய செயற்பாடுகள் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணியிருப்பதாக கொழும்பின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் எவ்வாறு தமது கடல்சார் நடவடிக்கைகளை மிகவும் சாதுரியமாக மேற்கொள்கிறார்கள் என்பது குறித்தும் கடற்புலிகளுக்கான கடற்கலங்கள் ஆயுதங்கள் எரிபொருட்கள் என்பவை எவ்வாறு எங்கிருந்து கிடைக்கப் பெறுகின்றன என்பது குறித்தும் பாதுகாப்புத் தரப்பு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

எது எப்படியிருந்த போதிலும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் யுத்தச் செய்திகளை முழுமையாக இருட்டடிப்புச் செய்வதினாலும் தமது யுத்த செய்திகள் சந்திக்கு வருவது தமது பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கருதுவதனாலும் இவ்வாறான செய்திகளுக்கான மூலங்கள் அல்லது ஆதாரங்களும் மறைக்கப்பட்டுவிடுகின்றன.

http://www.globaltamilnews.net/tamil_news....mp;cat=1#cstart

  • தொடங்கியவர்

புதுமாத்தளன் பகுதியில் சிங்கள படையின் விசேட படையணி விடுதலைப்புலிகளால் தாக்கியழிப்பு

வன்னியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் சிங்கள படையினரின் 60பேர் கொண்ட விசேட படையணி ஒன்று தமிழீழ விடுதலைப்புலிகளினால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான படை வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுமாத்தளன்; பகுதியூடாக விடுதலைப்புலிகளின் மணல் அணையை உடைத்து உள்நுழைய முயன்ற விசேட படையினரே விடுதலைப்புலிகளி;ன் தாக்குதலுக்குள்ளானதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

இந்த முன்நகர்வில் விசேட பயிற்சிகளைக்கொண்ட 60 படையினர் இருந்ததாகவும் அவர் அனைவரும் பின்னர் சடலமாகவே மீட்க்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதல் அச்சமயத்தி;ல் படையினருக்கு பெரும் அதிர்;ச்சியை ஏற்படுத்தியதாகவும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தன.

http://www.swissmurasam.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.