Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடன் பிறப்பே..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tn_20090428002.jpg

சூடு பிடித்துள்ள இந்திய தேர்தல் மற்றைய மானிலங்களை விட தமிழ்நாட்டு தேர்தல்களம் வழைமையை விட சற்று அதிகமாகவே சூடாகக்காணப்படுகின்றது..காரண

ம் ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு பின்னர் மீண்டும் பெரியதொரு ஈழத்தமிழ் ஆதரவும்.. அதே நேரம் மீண்டும் தனித்தமிழீழம் என்கிற பேச்சுக்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக அரசியல்வாதிகளால் உச்சரிக்கப்படுகின்றது.ஈழத்த

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு அலசல்.

இப்படியான ஈழத்தமிழனின் ஏமாற்றங்கள்தான் தனித்தமிழீழம் என்று அதிரடி அறிக்கைவிட்ட ஜெயலலிதா மீதான எதிர்பார்ப்பாக மாறியிருக்கின்றது.. ஏனெனில் நெடிய பாலைவனத்தில் கொடிய வெய்யிலில் கால்வலிக்க நடந்தகொண்டிருக்கும் ஈழத்தமிழனிற்கு தூரத்தே தெரியும் ஒற்றை மரமாய் தெரிகிறார் ஜெயலலிதா.. அது ஆலமரமா?? அத்தி மரமா என்கிற கவலையெல்லாம் அவனிற்கில்லை..காரணம் அவனிற்கு தெரியும் அது இளைப்பாறும் இடமே தவிர அவனது இலக்கு அதுவல்ல..அவரும் தேர்தலில் வென்றதும்.. ஈழமா?? அது எங்கேயிருக்கிறது என்று கேட்கலாம்.. ஏனென்றால் அரசியல்வாதிகளின் பேச்சுக்களிலும் தேர்தல் வாங்குறுதிகளிலும் அதிகம் பாதிக்கப்பட்ட இனம் ஈழத்தமிழினம் என்பதால் எமக்கு அதன் அனுபவங்கள் அதிகமே...1976ம் ஆண்டே எமது அரசியல்வாதிகள் தமிழீழத்தனியரசு என்று வட்டுக்கோட்டையில் முழங்கியபோது எங்கள் கட்டைவிரலைக்கீறி இரத்தத்திலகமிட்டு எங்கள் ஒட்டுமொத்த நம்பிக்கைகளையும் வாக்குகளாக அள்ளிக்கொடுத்து வழியெங்கும் கூடிநின்று கொண்டாடி கொழும்பிற்கு வழியனுப்பிவைத்துவிட்டு.. தமிழீழத்தனியசின் எல்லைகளை கரித்துண்டால் கோயில் மடங்களிலும் மதவுகளிலும் கீறி வைத்துவிட்டு கொழும்பிற்கு போனவர்களின் வருகையையும் எம்மை மறந்து ஆ வென்று பார்தபடி இருக்கவே.. வாய்க்குள் புகுந்த இலையான் எங்கள் நினைவுகளை மீண்டும் கொண்டுவந்ததால்...

அதிலும் மேலுள்ள வசனங்கள் என்னை மீண்டும் மதவில் இருக்க வைத்துவிட்டது?

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை தமிழ்நாட்டில் தீக்குளித்து பதின்னான்கு தமிழ் உயிர்கள் , ஈழத்திற்காக தியாகம் செய்துள்ளார்கள் .

அவர்கள் எல்லோரும் ஒரு கட்சியை சார்ந்தவர்களல்ல .

எல்லோரிடமும் ஈழத்தமிழன் இவ்வளவு இன்னல் படுகின்றானே ....... என்கின்ற ஆதங்கம் தான் இருந்து , தாம் கையாலாதகர் களாகிவிட்டோமே ..... என்னும் விரக்தியில் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள் .

இதற்காக தன்னும் அந்த அரசியல் தலைமைகள் இறங்கி வந்தனவா ? இல்லையே .........

ஈழத்தில் அழிந்து போகும் தமிழினத்தை காப்பதிலிமா ........ அரசியல் , ஏட்டிக்குப் போட்டி , லாவணி , கவிதை , கச்சேரி , கடிதம் , தந்தி , தூதுவர் பேச்சுவார்த்தை , உண்ணாவிரதம் எனும் போது யாருக்குத்தான் கோபம் வராது .

இவர்களின் அரசியலால் கொல்லப்பட்ட உயிர்கள் திரும்ப வருமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.