Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதான 'சனல்4'ஊடகவியலாளர்கள் மூன்று பேரும் நாடு கடத்தப்பட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைதான 'சனல்4'ஊடகவியலாளர்கள் மூன்று பேரும் நாடு கடத்தப்பட்டனர்

வீரகேசரி நாளேடு 5/10/2009 10:18:29 PM -

திருகோணமலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 'சனல்4' தொலைக்காட்சி நிறுவன த்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களும் நேற்று ஞாயிற்றுக் கிழமை நாடு கடத்தப்பட்டனர்.

'செனல் 4' தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களாவர்.

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுடைய முகாம்களின் நிலைமை தொடர்பான சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்தாகக் கூறப்படும் இவர்கள் மூவரும் அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக திருகோணமலை சென்றிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் ஊடக சுகந்திரம் வெளிநாட்டுக்காரனுக்கே இந்தக்கதியென்டால் தமிழ் ஊடகவியலாலனுக்கு

20090510_C4A.jpg

Nick Paton Walsh : Reporter from Channel 4

இலங்கைக்கு நிதியுதவி அளிக்கவேண்டாம்: நாடு கடத்தப்பட்ட "சனல் 4" ஊடகவியலாளர்

சிறிலங்கா அரசாங்கம், வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதில் குறியாக இருப்பதாக, இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய "சனல்4" ஊடகவியலாளர் நிக் பெட்டன் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் ஏராளமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் ஊடகச் சுதந்திரம் என்பது சுத்தமாக இல்லை.

தம்மை நாடுகடத்தியமை கூட, முறையாக செய்திருக்க வேண்டும். ஆனால் தம்மை சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அழைத்து அச்சுறுத்தியதாக நிக் பெட்டன் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா தொடர்பில் எந்த செய்தியினையும் விருப்பப்படி வெளியிட முடியும். ஆனால் அது இலங்கையில் வைத்து இல்லை. வெளிநாடுகளில் வைத்து என தம்மை அவர் அச்சுறுத்தியதாக வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், முகாம்களை புனரமைக்கவும், பராமரிக்கவும் அதிகரித்த அளவு வெளிநாட்டு நிதிகளை எதிர்பார்த்து இருக்கிறது. அவர்கள் எந்த அளவு நிதிகளை திரட்ட முடியுமோ, அந்த அளவுக்கு திரட்ட முற்படுகின்றனர். ஆனால் உண்மையில் இந்த நிதிகள் அங்குள்ள பொது மக்களுக்கு பயன்படுத்தப்படப் போவதில்லை.

தேசிய பாதுகாப்பு என கூறி, இராணுவ முன்னெடுப்புகளுக்காகவே இந்த நிதிகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர், இதனாலேயே இடம்பெயர்ந்த நிலையில் இன்னும் பல வருடங்களாக தமிழ் மக்கள் குடியமர்த்தப்படாமல் இருக்கிறார்கள்.

எனவே தொண்டு நிறுவனங்கள் எதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்யக்கூடாது என பிரித்தானிய ஊடகவியலாளரான வோல்ஸ் கோரியுள்ளார்.

http://www.tamilwin.org/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமது நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் என்ன காரணத்திற்காக நாடு கடத்தப்பட்டார்கள் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென செனல் 4 ஊடக நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

செனல் 4 ஊடக நிறுவனத்தின் ஆசிய பிராந்திய செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோரை இலங்கை அரசாங்கம் கைது செய்து பின்னர் நாடு கடத்தியிருந்தது.

தமது நிறுவன ஊடகவியலாளர்கள் நாடு கடத்தப்பட்டமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என செனல் 4 நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள் சிலரை நாடு கடத்தியதாக அரசாங்க ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வடக்கில் இடம்பெற்றுவரும் போர் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு, முப்படையினரையும் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரித்தானிய தொலைக்காட்சி செய்தியாளர் ஷெட்டல் மோல்ஸ் நிக்கலஸ் ஜேம்ஸ் என்பவரை நேற்று காலை 7.30 அளவில் நாடு கடத்தியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொலைக்காட்சி சேவை வெளியிட்ட செய்திகள் உண்மைக்கு புறம்பானதுடன் காட்சிகளும் வேண்டுமென்றே புனையப்பட்டவை எனவும் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

www.globaltamilnews.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.