Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் மனைவியும் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொலை

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு சில நிமிட நேரத்திலேயே சிங்களப் பெண்மணியான அவரது மனைவியையும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் சிறிலங்காப் படை சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவனும் கடந்த திங்கட்கிழமை (18.05.09) அதிகாலை 5:45 நிமிடம் வரை செய்மதி தொலைபேசி ஊடாக வெளித் தொடர்பில் இருந்தனர்.

அப்போது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து விடுமாறு அவர்கள் இருவரும் வற்புறுத்தலாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின்பே மூன்றாம் தரப்பு ஒன்றினால் இந்த அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் முன்னேறி வந்த சிறிலங்கா படையினரிடம் அவர்கள் இருவரும் சரணடைந்தனர்.

இவை எல்லாம் நடைபெறும்போது நடேசனின் மனைவியான திருமதி விஜித்ரா நடேசனும் அவர்களுடன் கூடவே இருந்தார்.

பின்பு, அவர்கள் இருவரும் சரணடையும் போது அந்த பகுதியில் இருந்து வெளியேறிய பொதுமக்களுடன் தானும் வெளியேறி சிறிலங்கா படையினரிடம் தன்னை ஒரு சிங்களப் பெண் என அவர் அறிமுகம் செய்தார்.

அந்த நேரத்திலேயே சரணடைந்த நடேசனையும் புலித்தேவனையும் சிறிலங்கா படையினர் சுட்டுக்கொன்றனர்.

அப்போது, துடித்து அழுது கதறிய நடேசனின் மனைவி, தனது கணவர் உட்பட அரசியல்துறையைச் சேர்ந்தவர்கள் சரணடைந்தபோது அவர்களைச் சுட்டுக்கொன்றது மிகவும் கொடூரமான ஒரு தவறு என சிறிலங்கா படையினருடன் கத்தி வாக்குவாதப்பட்டார் என அப்போது அந்த இடத்தில் இருந்த பாதுகாப்புக் கருதி தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு சிங்கள செய்தியாளர் தெரிவித்திருக்கின்றார்.

நடேசனின் மனைவி ஒரு சிங்களப் பெண்மணியாக இருந்ததால், அவர் சிங்கள மொழியிலேயே படையினருடன் வாக்குவாதப்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் உச்சக்கட்டத்தையடைந்தபோது சிறிலங்கா படையினர் நடேசனின் மனைவியை நோக்கி சரமாரியாகச் சுட்டனர் எனவும் அப்போது அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்ததாகவும் அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்தார்.

நடேசன் முன்னர் சிறிலங்கா காவல்துறையில் பணிபுரிந்தவர். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள நாரஹேன்பிட்டி காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் அங்கு பணிபுரிந்த விஜித்திராவை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.

விஜித்திரா, சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மாத்தறையைச் சேர்ந்தவர்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாத தமிழர் இனப் படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும் அவரது மனைவியும் அங்கேயே வசித்து வந்தனர்.

அந்தக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்ட நடேசன், தமிழ்நாட்டில் தங்கியிருந்து 1987 வரை அரசியல் பணிகள் செய்து வந்தார்.

1990 இல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன் அவர்கள், 1991 இல் தமிழீழ காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆரம்பித்த போது அதன் உருவாக்க பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

நடேசனின் மனைவி விஜித்ரா ஒரு சிங்களப் பெண்மணியாக இருந்தபோதிலும் கூட, நடேசனின் அனைத்துப் பணிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்ததுடன், தமிழ் மக்கள் பட்டு வந்த நெருக்கடிகளிலும் துன்பங்களிலும் ஒரு பங்காளியாக அவர்களுடனேயே வாழ்ந்து வந்தார் என்பது சொல்லப்படவேண்டியது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுத...

உங்கள் வீரத்தையா...

உங்கள் தியாகத்தையா...

உங்கள் குடும்ப ஒழுக்கத்தையா...

உங்கள் தேசப்பற்றையா...

உங்களின் மக்கள் மீதான பற்றுதலையா...

எதை எழுத...

எதை எழுத...

ஆனால் மறக்கமாட்டோம் நாம்

மன்னிக்கமாட்டோம் நாம்

மண்டியிடமாட்டோம் நாம்

உம்மால் எழுப்பப்பட்வர் நாம்

துயில மாட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கிடந்து அழுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் நம்பி மோசம் போனவன் ஈழத்தமிழன்.

அதில் பின்னின்று முதுகில் குத்துபவன் அரைகுறைத்தமிழன்.

உதாரணத்திற்கு கொலைஞன் கருணாநிதி அடுத்தது ஈழத்து கருணாநிதி

தம்பி ஈழத்துகருணா? "குருதிப்புனல்" படம் பாத்தனியே??????????????????

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து சினிமாவுடன் இதை ஒத்துப்பார்க்கவேண்டாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இனத்துக்காக உயிரையும் துச்சமென நினைத்த வீரர்கள் இவர்கள் இவர்களை எமது தமிழினம் என்றுமே மறவாது இவர்களை அடித்தளமாககொண்டு எமது தேசத்ததை நாம் கட்டியெலுப்புவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து சினிமாவுடன் இதை ஒத்துப்பார்க்கவேண்டாம்

எனக்கும் சினிமாவுக்கும் வெகுதூரம்.

ஒருசில கருத்துக்களின் பொழிப்புரை எல்லோருக்கும் பகிரங்கமாக விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை.மன்னிக்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.