Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றுத் தவறைப் புரிந்து கொள்ளாமல் பிராயச்சித்தம் செய்வது சாத்தியமாகுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாற்றுத் தவறைப் புரிந்து கொள்ளாமல் பிராயச்சித்தம் செய்வது சாத்தியமாகுமா?

"மரபுவழி இராணுவ யுத்தத்திலேயே இலங்கை அரசுக்கு வெற்றி கிட்டியிருக்கின்றது. ஆனால் நிரந் தர சமாதானத்தை எட்டுவதற்கு அது வெகு தொலை வில் உள்ளது" இவ்வாறு நினைவூட்டியிருக்கின்றார் நோர்வே அமைச்சரும், இலங்கை இனப்பிரச்சினைக் கான அமைதி முயற்சிகளின் போது நோர்வே சார்பில் பிரதான அனுசரணைப்பணி வகித்தவருமான எரிக் சொல்ஹெய்ம்.

"தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கான நீதி யான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை இலங்கை இனி முன்னெடுக்கத் தவறுமானால் தமது அபிலா ஷைகளை எட்டுவதற்கான தமிழர்களின் போராட்டம் புதிய வடிவம் எடுக்கும்." என்றும் அவர் எச்சரித்திருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலை மையை அழித்தொழித்த வெற்றிக் களிப்பில் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்து இருக்கும் தென்னிலங்கைத் தலைமைக்கு, சமரசத்தின் சரி யான பக்கத்தை எடுத்துரைக்கும் இத்தகைய சர்வ தேசத்தின் குரல் காதில் விழுமா என்பது தெரியவில்லை.

இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போன்ற ஆயுதம் தாங் கிய போராட்ட அமைப்புகளின் தோற்றமும், வளர்ச்சி யும் சுயாதீனமாக நிகழ்ந்தவையல்ல. பிரபாகரனின் தலை மையோ அல்லது அவரது போராட்ட வழிமுறை களோ தனி மனிதப் பிறழ்வுகளால் பிறந்த வையல்ல.

தனித்துவமான ஓர் இனம் மீது தொடர்ச்சியாகத் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறையின் விளைவாகப் பிறப்பெடுத்ததே அந்த ஆயுத எதிர்ப்புப் போராட்ட வழிமுறை என்பது மறுக்க முடியாததாகும்.

அதுவும் கூட நேரடியாக அந்த வடிவத்தில் பிறந் தது அல்ல. அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நீதி, நியாயமான உரிமைகள் வேண்டியும், சமரசத்துடன் கூடிய கௌரவ வாழ்வைத் தேடியும் தமிழ் மக்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகக் காந்தீயப் பாதையில் சாத்வீக நெறியில் அஹிம்சைப் பாதையில் நடத் திய அறவழிவயப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்து வந்த பேரினவாத ஆட்சிப் பீடங்களால், ஆயுத முனை யில் பலாத்காரக் கரங்கொண்டு அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு வந்த சூழலில் வரலாற்றின் பிறப்பாக்கமாகவே ஆயுதம் தாங்கிய போராட்ட மார்க்கத்திற்குத் தமிழினம் தள்ளப்பட்டது.

அந்த ஆயுதப் போராட்ட மார்க்கத்தை அடியோடு நசுக்கி, அழித்துவிட்டோம் என இப்போது மார்தட்டும் தென்னிலங்கைத் தலைமைகள், அந்த மார்க்கத்திற் குத் தமிழர்களைத் தள்ளிச் சென்ற நியாயங்களைப் புரிந்துகொண்டு, அவற்றை வெளிப்படுத்தி, அத்தகைய சூழ்நிலை ஏற்படாமல் நியாயம் செய்வோம், நீதியாக நடந்துகொள்வோம் என்று அறிவிக்க இன்ன மும் முன்வரவில்லை என்பது இப்போதும் கவனிக் கத்தக்க விடயமாக முன்னேநிற்கின்றது.

வரலாற்று ரீதியாகத் தமது தாயக மண்ணில் தமக்கு இருக்கும் பாரதீனப்படுத்தமுடியாத உரிமை களை வேண்டி, இத்தீவில் தமிழர் தரப்பில் நடத்தப் பட்ட ஆயுதப் போராட்டத்தை "பயங்கரவாதம்" என் றும் "பிரிவினை வாதம்" என்றும் தெளிவாக வலியு றுத்தும் தென்னிலங்கை, அந்தப் பயங்கரவாதத்தை யும் பிரிவினைவாதத்தையும் தான் வெற்றிகரமாக முறியடித்து விட்டதாகப் பிரகடனப் படுத்தும் இச்சமயத்தில் கூட, அவை பிறப்பெடுக்கக் காரணமாக இருந்த அடிப்படைக் காரணிகளையும், சூழல்களை யும் புரிந்துகொண்டதாகவோ, அல்லது புரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவோ தயாராக இல்லை என்பது இயல்பாகவே வெளிப்படுகின்றது.

அப்படிப் புரிந்து கொள்ளாத நிலையில் அல்லது புரிந்து கொள்ள முன்வராத நிலையில் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்றும் "உள்நாட்டில் இணக்கம் கண்டு உருவாக்கப்பட்ட யோசனைத் திட் டம்" என்றும் வாய்ப்பந்தல் போடுவதில் அர்த்தம் ஏதும் இல்லை.

அத்தகைய முயற்சிகள் இப்பத்தியில் நாம் ஏற் கனவே சுட்டிக்காட்டியமை போன்று நோயின் மூலத் துக்கு அடிப்படைக் காரணிக்கு வைத்தியம் செய்வதை விடுத்து, அந்த நோயின் குணங்குறிக்கு வெளிப்பாட்டு வடிவத்துக்கு வைத்தியம் செய்யும் எத்தனமாகவே இருக்கும்.

புலிகள் இயக்கமும், பிரபாகரன் போன்ற போராட் டத் தலைமையும் பிறப்பெடுக்க உருவாக காரண மாக அமைந்த விடயங்களைத் தொட்டுக்காட்டி, அத்தகைய சூழல் மீண்டும் ஏற்படாத வகையில், நியாயத்தை நிலைநாட்டி, தீர்வை எட்ட முயல்வோம் என்று இந்தக் கட்டத்தில் அரசுத் தலைவர் அறிவித் திருப்பாரேயானால், அது தமிழர்கள் மத்தியில் சற்று நம்பிக்கையைத் தந்திருக்கும்.

அத்தகைய போரியல் சூழல் பிறப்பெடுப்பதற் கான வரலாற்றுக் கட்டாயத்தைத் தாங்களே ஏற்படுத் தினோம் என்ற உண்மையை தென்னிலங்கை புரிந்து,

ஏற்றுக்கொண்டு, அத்தகைய தவறு மீண்டும் நேராமல் பார்த்துக் கொள்வதில் அது உறுதியாக இருப்பதற்கு முன்வந்தால் நல்லிணக்கமும், சமரசமும், சமாதானத் தீர்வும், சகல இனங்களுக்கும் திருப்தி தரும் சகவாழ்வும் இத்தீவில் சாத்தியப்படும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.

[நன்றி - உதயன்]

நன்றி - பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

பழைய செய்தி

வரலாற்று தவறுகள் தொடரும்.சிறிலன்காவின் தலைவிதி அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மாறாத போக்குடன், மனிதத்தைக் கொன்றபடி வெற்று மமதையில் வீழ்ந்த சிறிலங்கா வினையினை அறுக்கும். அதுவரை தமிழினம் ஓயாது என்பதை "திரு எரிக் சோல்கைம்" அவர்களாவது புரிந்து கொண்டுள்ளார். இதனை சிறிலங்கா புறங்காலால் தட்டிவிட்டு தனது வழமையான இன அழிப்பைத் தொடர்கிறது.

அது எதுவரை என்றால், அது கூடத் தமிழர்களின் கரங்களிலே என்பதே நிதர்சனமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வரலாற்றுத் தவறுக்கு எரிக்சொல்கைம் விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க நீதியற்ற உலகம் இலங்கையை

வழிநடத்திச்சென்று ஆயிரமாயிரம் உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. இது என்ன புரியாத புதிரா? சமாதான காலத்தில் புலிகளுக்குத் தெரியாமல திட்டமிடப்பட்ட எரிக்சொல்கைம் - சிறீ லங்கா ஒப்பந்தந்தான் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

(புலிகளில்லாது அமெரிக்காவில் இந்தியப் பிரதிநிதிகளுடனும்; நடந்த பேச்சு வார்த்தையில் திட்டமிடப்பட்ட சதி) என்பதை, சமாதான ஒப்பந்தத்தின் பின்னுள்ள வரலாறுகளை படிப்படியாகப் படித்தால் விளங்கும். மீண்டும் மீண்டும் தலையில் ப+ச்சுற்றும் விளையாட்டு. கூடி இருந்து குழி பறிக்கும் கயவர் கூட்டம். இவரை நம்பிடாதே. இவரை நம்பமுன் இவருக்குப் பின் உள்ள வரலாறுகளை நுட்பமாகவும், அவதானமாகவும் படியுங்கள். அல்லது பின்னொருவேளை 'எரிக்சொல்கைம்முக்குப்பின்" என்ற தலைப்பில் எழுதுகின்றேன். நேருக்கு நேர் மோதுபவனை நம்பலாம். கூடி இருந்து குழி பறிக்கும் கயவர் கூட்டம்.

தங்களை சிறீ லங்கா அரசு தள்ளிவிட்டது என்று சொல்லி நோர்வேயில் நீதி; கேட்ட தமிழனுக்கு பதில் சொல்லி சாடகம் ஆடியவர்கள், மீண்டும் சதியுடன் வருகின்றானோ? இப்போது சிறீ லங்கா அரசாங்கம் தள்ளி வைக்கவில்லையா? தமிமினம் மீண்டும் மீண்டும் ஏமாறிவிடக்கூடாது. என்பதே என் வேண்டுகோள். 'அகத்தின அழகு முகத்தில் தெரியும்" தயவுசெய்து இவருடைய கூற்றை யாரும் நம்பாதீர்கள். நாம் இன்று மீண்டும் 1957 இல் நிற்கின்றோம். எதற்கும் வரலாற்றைத் தட்டிப்பார்ப்பது திகவும் முக்கியம்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வரலாற்றுத் தவறுக்கு எரிக்சொல்கைம் விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க நீதியற்ற உலகம் இலங்கையை

................................

நானும் கூட சில ஊடகங்களில் (குமுதல் ரிப்போர்ட்டர்-இல்) சர்வதேச புலனாய்வு நிறுவனங்களால் நன்றாக திட்டமிடப்பட்டு நார்வே நாட்டு உதவியுடன் புலிகளின் தலைமைக்கு நெருக்கமாக ஒரு துரோகி வைக்கப்பட்டு, அவன் மூலகமாக தலைவரின் அன்றாட அலுவல்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட துரோக நாடகம்தான் கடைசி மூன்று நாட்களில் நடந்தது என்று படித்தேன். எரிக் சொல்கேம் பற்றி விரைவில் எழுதுங்கள், நானும் புரிந்துகொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.