Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறுதி யுத்தத்தில் 24,100 படையினர் பலி! - சிங்கள ஊடகம்

Featured Replies

இறுதி யுத்தத்தில் 24,100 படையினர் பலி! - சிங்கள ஊடகம்

தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக இறுதியாக சிறிலங்கா அரசாங்கம் 2006 இல் மாவிலாற்றில் ஆரம்பித்த படை நடவடிக்கைகளில் இருந்து இறுதிப்படை நடவடிக்கைகள்வரை சிறி லங்கா இராணுவத்தில் 24 100 இராணுவத்தினர் பலியாகியிருப்பதாகவும், (இதில் தப்பியோடியோர் -காணாமற்போனோர் பட்டியல் உள்ளடக்கப்படவில்லை) இராணுவப் பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் இந்த எண்ணிக்கைகளை தலைகீழாக மாற்றியே சிறி லங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக சிங்கள அமைப்பொன்றை ஆதாரமாகக்காட்டி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் ஆரம்பம் முதலே தமது இழப்புக்களை சிறி லங்கா இராணுவத்தினர் மிகையாக குறைத்தே செய்திகளை வெளியிட்டுவருவதாக சிங்கள மக்களுக்கே புரியும் எனவும், அவர்கள் வாழை மரக்குற்றிகளை தமது பிள்ளைகளின் சடலம் என்று சொல்லப்பட்டே இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே மாவிலாறு மற்றும் கிழக்கு மாகாண விடுவிப்பின்போது 2 900 இராணுவத்தினரும், வடக்கு கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1300 இராணுவத்தினரும் (கபறனை தாக்குதல் உட்பட), மன்னார் பிரதேசங்களில் எற்பட்ட மோதல்களின்போது 3100 இராணுவத்தினரும், மாங்குளம் பிரதேச மீட்பின்போது 2500 பேரும், மல்லாவி, துணுக்காய் பகுதிகளின் மீட்பின்போது 3500 பேரும், பின்னர் நடந்த இடை மோதல்களில் 1700 பேரும் பூனகரி மோதல்களின்போது 4200 பேரும், கிளிநொச்சி கைப்பற்றுதலில் 2600 பேரும், பின்னர் விடுதலைப்புலிகளின் கிளிநொச்சி ஊடறுப்புத்தாக்குதலில், 2300 பேரும், விடுதலைப்புலிகளின் குளம் உடைப்புத்தாக்குதலில் 3300 பேரும் பின்னர் இடம்பெற்ற இறுதித்தாக்குதலில் மிகுதி இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தமது தரப்பு இழப்புக்கள் பற்றி குறிப்பிட்ட சிறி லங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, இறுதிமோதல்களில் 6200 படையினர் மட்டுமே பலியானதாகவும், இத்தனைநாள் இடம்பெற்றமோதல்களில் சுமார் 22 அயிரம் வரையான படைவீரர்களே இறந்துள்ளதாக தெரிவித்தமை மிகவும் கேலிக்குரியதெனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/1981/54/24-100/d,view.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.