Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை – ரணில் சதூர்யமற்ற நபராக மாறியுள்ளார் ‐ ஊடக அமைச்சர் :

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை முழுமையாக வழங்குவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், 13 ஆவது திருத்தச் சட்ட மூல அமுலாக்களின் ஓர் கட்டமாகவே கிழக்கில் மாகாணசபை உருவாக்கப்பட்டதாகவும், வடக்கில் மாகாணசபை உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தவிர வேறும் அதிகாரங்களை வழங்குவது குறித்து அசராங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது வெற்றிலைச் சின்னத்தில் அரசாங்கம் போட்டியிட உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணிகளை அமைக்காது தனியான ஓர் கட்சியாக போட்டியிடுவதனையே விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளினால் சம்பளம் வழங்கப்படும் சில ஊடகவியலாளர்கள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளமை குறித்து அமைச்சரிடம் வினா எழுப்பிய போது, அது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால பயங்கரவாத தடுப்பு சட்டங்களை நீக்குமாறு கூறுமளவிற்கு ரணில் சதூர்யமற்ற நபராக மாறியுள்ளார் ‐ அனுரபிரிதர்ஷன யாப்பா :

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, யுத்தம் முடிவடைந்துள்ளதால், அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் ஆகியவற்றை நீக்குமாறு கூறுமளவிற்கு, சதூர்யமற்ற நபராக மாறியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அனுரபிரிதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

சமாதானத்தை கட்டியெழுப்ப ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தயராக இல்லை, அவர்கள் யுத்த வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக செயற்படுகின்றனர் எனவும் அனுரபிரிதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பணத்தை செலவிட முடியுமாயின் எவரும் யுத்தத்தை வெற்றிக் கொண்டிருக்க முடியும் என கூறியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல மீண்டும் ஒருமுறை யுத்த வெற்றியை கொச்சைப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர், எவராலும் யுத்தம் செய்ய முடியும் என தெரிவித்து தமது வங்குரோத்து நிலைமை வெளிகாட்டிய கிரியல்ல, இரண்டு வருடங்களுக்கு பின்னர் தான் அவ்வாறு கூறவில்லை என அவர் தெரிவித்ததாகவும் அமைச்சர் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் பல நாடுகள் பணத்தை செலவிட்டு, யுத்தத்தை செய்து வருகின்ற போதிலும் போரை இதுவரை நிறைவுக்கு கொண்டு வர முடியவில்லை. சரியான தலைமைத்துவமும் தெளிவான வேவைத்திட்டமும் இருந்ததன் காரணமாகவே, இலங்கைக்கு யுத்த்தில் வெற்றிப் பெற முடிந்தது எனவும் அனுரபிரியதர்ஷன யாப்பா கூறியுள்ளார்

http://www.globaltamilnews.net/tamil_news....10056&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.