Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிகப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் - ஐநா - காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலை புலிகளுக்கெதிரான இறுதிகட்ட தாக்குதலில் 20000-கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக ஐநாவின் ரகசிய அறிக்கை உறுதிப்படுத்துகிறது

கடைசி சில தினங்களில்தான் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டதாக அந்த ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. "மறைக்கப்பட்ட படுகொலைகளை" நடத்தியதாக ராணுவம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வானிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளிடம் இருந்து அறிந்து கொண்ட கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை, அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட மிக அதிகம்.

மோதல் தவிர்ப்பு பிரதேசத்தில் இருந்து சமீபத்தில் வந்த பணியாளர்கள், "இந்த எண்ணிக்கை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது" என்று கூறினர்.

மோதல் பிரதேசங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியேறிய பிறகும், பாதுகாப்பு வளைய பகுதிகளில் சுமார் 100000 மக்கள் இருந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. கடந்த மே மாதமும் அவர்கள் அங்கேதான் இருந்துள்ளார்கள். போர் முடியும் தருவ்வையில் 88000 makkal வெளியேறியதாக ஐநா அறிவித்துள்ளது. அப்படியானால் மீதமுள்ள 12000 மக்கள் எங்கே?

கூட்டி கழித்து பார்க்கும்போது, கடந்த ஏப்ரல் மாதம் வரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 7000+ + கணக்கில் வராமல் இருந்த மக்கள் 12000.= 20000+.

ஆனால் தமிழர்களிடம் இருந்து வரும் தகவல்களின் படி, மே மாத ஆரம்பத்தில் பாதுகாப்பு வளைய பிரதேசத்தில் இருந்த மக்களின் எண்ணிக்கை, ஐநா தெரிவித்த எண்ணிக்கையை காட்டிலும் பல மடங்கு அதிகம் என்கின்றன. சுமார் 120000-kkum அதிகமான மக்கள் இருந்ததாக சொல்கின்றன. உணவு தட்டுப்பாட்டின் பொது , காஞ்சி ஊற்றி வந்த தமிழர் புனர் வாழ்வு கழகம், பாதுகாப்பு வலயத்தில் இருந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 165000 என்று சொல்கிறது.

தமிழ் உணர்வாளர்கள் கேட்பதெல்லாம், போரின் கடைசி வாரம் வரை அங்கு அல்லல்படும் மக்களுக்கு உணவு வழங்கி வந்த ஐநா பணியாளர்களிடம் இருந்து சரியான விபரங்கள் ஏன் பெறப்படவில்லை என்பதாகும்.

( சுமார் 50,௦௦௦-க்கும் அதிகமான மக்கள் கடைசி வாரத்தில் மட்டும் கொல்லப்பட்டார்கள் என்று அவர்கள் உண்மையை சொல்லிவிட்டால்?)

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் பிரபாகரனும் அவர் தலமையிலான விடுதலைப் புலிகள் இயக்கமுமே இந்திய ஆளும் வர்க்கத்திற்கு வேண்டப்படாதவர்களாகவும், அகற்றப்பட வேண்டியவர்களாகவும் இருந்து வந்தனர். இன்று இவை இரண்டுமே அழிக்கப்பட்டு விட்டன. ஆகவே இந்தியா இனியாவது சிங்களத்துக்குக் காவடி தூக்கும் தனது வேலையை நிறுத்திவிட்டு தமிழரின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தருமா? அப்படியில்லை என்றால் இவ்வளவு அவசரப்பட்டு ஈழத்தமிழர்கள் கடந்த 60 வருட காலமாக கஷ்ட்டப்பட்டு சிறுகச் சிறுக கட்டியெழுப்பிய அவர்களது தாயக விடுதலைப் போராட்டத்தை அழித்தது ஏன்? தமிழரின் ஏக பிரதிநிதிகளாகவும், அவர்களின் ஒரே காப்பரணாகவும் இதுவரை இருந்துவந்த புலிகளை அழித்து தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட இந்தியக் காங்கிரஸ் அரசும் அதன் தலமையும் தமிழர்களை நட்டாற்றில் விட்டு விட்டுப் போவது எந்த விதத்தில் நியாயம்? இரு நாட்களுக்கு முன்னால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை செய்த போர்க்குற்றங்களுக்காக விசாரனை நடத்தவென சில நாடுகள் முன்மொழிந்த வாக்கெடுப்பில் இந்தியா முன்னின்று அதைத் தோற்கடித்து இலங்கை அரசுக்கு மேலும் பண உதவிகள் வழங்குவதற்கான தீர்மானத்தை வெற்றிபெறச் செய்ய கடுமையாக பிரச்சாரம் செய்ததும் எதைக் குறிக்கிறது? பிரபாகரனைக் கொன்று விட்டீர்கள், அவரின் புலிகளையும் முற்றாக அழித்து விட்டீர்கள்...இன்னுமேன் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்ப்படுகிறீர்கள்? ஆகவே இந்தியாவின் பிரச்சனை புலிகளோடு அல்ல, மாறாக சுதந்திரம் கேட்கும் தமிழரோடுதான் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்?!

உங்கள் தென்புறக் கொல்லைக்குள் சீனன் ரகசியமாக பாரிய துறைமுகம் ஒன்றைக் கட்டி வருகிறான். பாக்கிஸ்த்தானியன் சிங்கல ராணுவத்தில் பல நிலைகளில் ஊடுருவியுள்ளான். இவையெல்லாம் இந்தியாவின் நண்மைக்குத்தான் என்று நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறோமா? சீனன் துறைமுகம் கட்டுவது இந்தியக் கப்பல்கள் தரித்துப் போவதற்கல்ல, பாக்கிஸ்த்தன் காரன் இலங்கையில் பணிபுரிவது இந்தியாவுக்கு வலுச்சேர்க்கவல்ல. இந்து சமுத்திர ஆதிக்கப் போட்டியில் சீனா இந்தியாவின் தெற்கில் கால்பதித்து விட்டான். நாம் இன்றும் ஒரு சின்னஞ்சிறிய இனத்தை அழிக்க ராஜதந்திர வழிகளிலும், ராணுவத் தொழிநுட்ப வழிகளிலும் கடுமையாக ஈடுபட்டிருக்கிறோம். இந்திய இறையாண்மை பற்றிப் பேசும் எனது சொந்தங்களே , எமது இறையாண்மை பறிபோவது ஈழத்தமிழனிடமா அல்லது எம்மைச் சுற்றி வலை விரிக்கும் சிவப்புச் சீனாவிடமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அழிக்கப்பட்டார்கள், பிரபாகரன் கொல்லப்பட்டான் என்று செய்தி வந்த போதெல்லாம் அதற்குப் பாராட்டும், புகழ்மாலையும் சொல்ல ஓடோடி வந்த எனது தமிழ்ச் சொந்தங்களே, இன்று 20,000 ஈழத்தமிழர்கள் போரின் இறுதி நாட்களில் சிங்களத்தால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள

சிங்களவரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி எமது உரமையை வென்றெடுப்பதற்கான காலம் கனிந்து வருகின்றது.

போர் உச்சம் பெற்று இருந்த வேளையில் புலம் பெயர்ந்து வாழும் மக்களை தெருக்கு இறங்கி போராடுமாறு தாயகத்தில் இருந்து தொடர்சியாக கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இங்கு போராட்டம் செய்வதற்கு தடையாக இருந்த நபர்கள் இன்று அஞ்சலி செலுத்தி அதிகாரத்தை கையில் எடுக்க அலைகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.