Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிர் உள்ளவரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க போவதாக வைகோ தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது உயிர் உள்ளவரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா தோற்கடித்துள்ளது. இந்த நேரத்திலேயே கருணாநிதியின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக தமிழர்களுக்கு எதிராக சோனியா காந்தி இந்திய மத்திய அரசு மூலம் செய்த துரோகத்தை தடுக்க கருணாநிதி தவறியுள்ளதாகவும் வைகோ குற்றம்சுமத்தியுள்ளார்.

படைப்பாளிகள் எல்லைகளைக் கடந்தவர்கள். பாரதிராஜாவின் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இங்கு உரையாற்றிய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பாரதிராஜா தனி மனிதர் அல்ல எனவும் அவர் தமிழ் திரையுலகின் அடையாளம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியே,எனவும் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை காவற்துறையினர் கைது செய்வதை தடுத்து வருகிறார் எனவும் நெடுமாறன் குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் சி. மகேந்திரன், காவல் துறையினரின் முழு பாதுகாப்புடனேயே பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணமற்றவர் எனவும் மகேந்திரன் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், சுந்தரராஜன், ஆர்.கே.செல்வமணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பாமக மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சென்னை உயர் நீதிமன்ற சட்டத்தரணி கருப்பன் உள்ளிட்டோரர் கலந்து கொண்டனர்

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்... சரி.

:(

:rolleyes:

காது புளிச்சுப்போச்சு கேட்டு கேட்டு-----.என்னசெய்வது எங்களின் அவலத்தில் தமிழ் நாட்டுஅரசியல்வாதிகள் ,அரசியல் லாபம் தேடி பிழைத்துக்கொள்கின்றார்கள்.

ஈழத்தமிழனின் ஈனக்குரல் இந்த உலகத்தில் எவனுக்குமே கேட்கமாட்டேங்குது. டமில் நாட்டு அரசியல்வாதிகளின் சொல்லை மத்திய அரசு மதிப்பதேயில்லை,

உண்மை இப்படி இருக்கும்போது--- இவர்களை நாம் நம்பலமா அடிடா ராமா குத்துக்கரணம் கோஷ்டிதான் இவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காது புளிச்சுப்போச்சு கேட்டு கேட்டு-----.என்னசெய்வது எங்களின் அவலத்தில் தமிழ் நாட்டுஅரசியல்வாதிகள் ,அரசியல் லாபம் தேடி பிழைத்துக்கொள்கின்றார்கள்.

ஈழத்தமிழனின் ஈனக்குரல் இந்த உலகத்தில் எவனுக்குமே கேட்கமாட்டேங்குது. டமில் நாட்டு அரசியல்வாதிகளின் சொல்லை மத்திய அரசு மதிப்பதேயில்லை,

உண்மை இப்படி இருக்கும்போது--- இவர்களை நாம் நம்பலமா அடிடா ராமா குத்துக்கரணம் கோஷ்டிதான் இவர்கள்.

புலம் பெயர்ந்த மக்கள் என்ன செய்கின்றார்களோ அதைவிட தன்னால் இயன்ற அத்தனை வழிகளிலும் முயல்கின்றார் திரு வை.கோ அவர்கள்.

எதற்காக எல்லோர் மீதும் சேறு பூசி மகிழ்கின்றீர்கள்?!!...’வை.கோ எப்போதாவது தன் பேச்சில் இருந்து மாறி இருக்கின்றாரா?!

தமிழ் நாட்டில் எமக்காக குரல் கொடுப்பவர்களை மதிப்பது எமது கடமை.

உண்மையில் நேர்மையாக குரல் கொடுப்பவர்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்குமிருக்கின்றார்கள்.

அவர்கள் விளம்பரம் தேடாமல் அமைதியாக காரியமாற்றுபவர்கள். அவர்களுக்கெல்லாம் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

உண்மைகள் வெளிவரும் வரை காத்திருப்போம்

ஈழ ஆதரவுக் கொள்கையில் எப்பொழுதும் உறுதியாய் இருப்பவர் வைகோ.

நம் தலைவரின் அபிமானத்துக்குரிய இந்திய அரசியல்வாதிகளில் அமரர்.எம்.ஜி.ஆர் ற்கு பின்பு திரு. பழ.நெடுமாறனும் திரு.வைகோ வுந்தான் முதன்மையானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என நினைக்கின்றேன்.

எனவே வைகோ அவர்களின் எந்தவொரு நியாயமான செயற்பாட்டையும் இழிவுபடுத்தாதீர்கள்.

இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.