Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரெலியா கன்பராவில் 23 தூதுவராலயத்தின் முன்பு நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று 4ம் திகதி 3 பேருந்துக்களிலும் , பல மகிழுந்துகளிலும் சிட்னியில் காலை 6 ,7 மணியளவில் இருந்து கன்பராவை நோக்கி தமிழர்கள் புறப்பட்டார்கள். 11 மணியளவில் பிரான்சு தூதுவராலயத்துக்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு நிகழ்வில் கிட்டத்தட்ட 800க்கு மேற்பட்ட மக்கள் சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்க்கொள்ளும் கொடுமைகளை பதாதைகள், கோசங்கள் மூலம் தெரிவித்துக் கொண்டு நடந்து சென்று அவுஸ்திரெலியா பாராளுமன்றத்திற்கு முன்பாக மாலை 4 மணிக்கு நிறைவு செய்தார்கள்.

சிறிலங்கா அரசுக்கு எதிராக அண்மைக்காலங்களில் குரல் கொடுக்கும் மெக்சிக்கோ, தமிழின அழிப்புக்கு துணை போகும் சீனா மற்றும் துருக்கி, இஸ்ரேல் தூதுவராலயங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களைச் சந்திக்க வரவில்லை. ஸ்வீடன் நாட்டுத்தூதுவராலயத்தினர் தமிழர்களைச் சந்திப்பதாக முன்பு உறுதியளித்தாலும், தமிழர்கள் செல்லும் போது அங்கு முக்கிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் தமிழர்களைச் சந்திக்கவில்லை.

ஜேர்மனி,ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை உள்ளே வந்து சந்திக்க நேற்று வேறு ஒரு நேரத்தை வழங்கினார்கள். அமெரிக்கா தூதுவராலயத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் தமிழர்களின் பிரதிநிதிகளிடமிருந்து மகஜர்கள், சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் கொடுமைகளை விளக்கும் இறுவெட்டினைப் பெற்றுக்கொண்டார்கள்.

பிரான்சு, நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து,மலேசியா, தாய்வான், தென்கொரியா, பெல்ஜியம், ஜப்பான், தென்னாபிரிக்கா, இந்தியா, பிரித்தானியா, நியூசிலாந்து, கனடா நாட்டுப் பிரதிநிதிகள் தமிழ்மக்களைச் சந்தித்து மகஜர்கள், இறுவெட்டினைப் பெற்று தமிழர்களின் பிரதிநிதிகளுடன் உரையாற்றினார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவின் தலைநகரில் ஆர்ப்பாட்டப் பேரணி: 800-க்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு

தாயகத்தில் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அனுபவிக்கும் கொடுமைகளையும் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க் குற்றங்களையும் தமிழ் மக்களின் அவாக்களையும் உலக நாடுகளின் மனச்சாட்சியை தட்டும் வகையில் அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

தலைநகர் கன்பராவில் 800-க்கும் அதிகமான தமிழர்கள் கலந்துகொண்ட இப்பேரணி மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

இதில் பல பாகங்களில் இருந்தும் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்

சிட்னி, மெல்பேர்ண் ஆகிய பகுதிகளில் இருந்து தொடருந்து, வானூர்தி மற்றும் பொதுப் போக்குவரத்துக்கள் மூலம் முதல்நாளே புறப்பட்டு வந்த மக்கள் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 12:30 நிமிடத்தில் இருந்து பிரான்ஸ் தூதரகத்துக்கு அருகாமையில் ஒன்றுகூடினர்.

பேரணியில் கலந்துகொண்ட அனைத்து தமிழ் மக்களின் கைகளிலும் தமிழீழத் தேசியக் கொடிகளும் அவுஸ்திரேலிய தேசியக் கொடிகளும் மற்றும் தமிழீழத் தேசியக் கொடி தாங்கிய பதாகைகளும், சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையை சித்தரிக்கும் பதாகைகளையும் வதை வதைமுகாம்களில் மக்கள்படும் துன்பங்களை சித்தரிக்கும் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

"உலகே தமிழர்களை காப்பாற்று"

"சிறிலங்கா தமிழர்கள் மீதான படுகொலையை நிறுத்து"

"சிறிலங்கா அரசின் போர் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்"

போன்ற முழக்கங்களை எழுப்பியவாறும் பேரணியில் சென்றனர்.

பிரான்ஸ் தூதரத்துக்கு அருகாமையில் புறப்பட்ட பேரணியானது பிரான்ஸ், மலேசியா, டென்மார்க், நோர்வே, தென்கொரியா, ஜப்பான், பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, கனடா, இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, சுவீடன், சீனா, மெக்சிக்கோ ஆகிய நாட்டு தூதரகங்கள் வழியே முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் நகர்ந்து சென்றது.

பிரான்ஸ், மலேசியா, டென்மார்க், தென் கொரியா, நோர்வே, பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, கனடா, இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, சுவீடன், சீனா, மெக்சிக்கோ ஆகிய நாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்த இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் அவர்களுக்கு வதைமுகாம்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள மனிதப் பேரவலத்தையும் அங்கு தமிழ் மக்கள் நாளாந்தம் அனுபவிக்கின்ற கொடூரங்களையும் எடுத்துக்கூறினர்.

- உடனடியாக மனித உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்

- சிறிலங்கா இராணுவ தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் முன்னின்று பாதுகாப்பு கொடுக்கவேண்டும்

- அவர்களை தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்

- தமிழின அழிப்பிற்கு உரிய விசாரணைகள் ஜக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள இந்த நாட்டு அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்

ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு தூதரக அதிகாரிகளிடம் கையளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், மிகக்கொடூரமான சூழ்நிலைக்கு முகம் கொடுத்து வரும் தமிழ் மக்களை எண்ணும்போது கவலையளிப்பதாகவும் இங்கு தமக்கு வழங்கப்பட்ட மனுவை தமது அரசிடம் சேர்ப்பிப்பதற்கு உடனடியான நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இளையோர் அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தனர்.

நியூசிலாந்து தூதரக பிரதிநிதி கிராட் ரிச்சாட் பேரணியில் கலந்துகொண்ட மக்களின் முன்பாக வந்து உரையாற்றினார்.

நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சரின் அறிக்கையை இளையோர் அமைப்பின் பிரதிநிதிகளிடம் கையளித்தார்,

அந்த அறிக்கையில், உடனடியாக மனித உரிமை அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்; தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் ஆகியன வலியுறுத்தப்பட்டிருந்தது.

சீனா, மெக்சிக்கோ, சுவீடன் ஆகிய நாட்டு தூதரக பிரதிநிதிகள் வெளியே வந்து இளையோர் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கோ மனுவை பெற்றுக்கொள்ளவோ மறுத்து விட்டார்கள்.

இறுதியில் பேரணியானது நாடாளுமன்ற முன்றலில் முடிவடைந்தது.

பேரணி தொடர்பாக பேரணியில் கலந்துகொண்ட தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், சிறிலங்கா பேரினவாத அரசின் இன அழிப்பு உச்சமடைந்து எல்லை மீறிப்போயுள்ள இன்றைய நிலையில் அவுஸ்திரேலியாவும் அனைத்துலக சமூகமும் வாய் மூடி மௌனித்திருக்க முடியாது என சுட்டிக்காட்டினார்.

நாம் விழிப்புடன் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கு தொடர்ந்து எடுத்து சொல்வதன் மூலம் அவர்கள் எமது மக்களுக்கான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்பதே இப்பேரணியின் நோக்கம்; ஒவ்வொரு நாட்டின் மனசாட்சியை தொடர்ந்து தட்டி எழுப்பி எமது மக்களுக்கு நடந்த அநீதியை எடுத்துக்காட்டுவதுடன் மூலமே அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்த எமது மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத்தர முடியும்; எமது மக்களின் வாழ்க்கை இயல்புக்கு திரும்பும் வரை நாம் தொடர்ந்து போராடங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எமது இனத்திற்கு விடிவு கிட்டும்வரை தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியோடு "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" எனக்கூறி மாபெரும் உணர்வெழுச்சியோடு பேரணி நிறைவடைந்தது.

- http://www.puthinam.com/full.php?2b39VXD4b...3c1d12cc4QjY5be

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.