Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மனியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது கவனிப்பார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யேர்மனியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது கவனிப்பார்களா?

அண்மையில் என் நண்பரொருவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவர்களது இளைய மகள் அழுது கொண்டிருந்தாள். என்னவென்று விசாரித்த பொழுது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதாவது எதிர்வரும் 13.06.2009 அன்று தமிழாலயத்தில் செயன்முறைக்கான ஆண்டிறுதிச் சோதினை நடைபெற உள்ளதாகவும் அதே நாளில் பரதநாட்டியத்திற்கான சோதினையும் நடைபெற உள்ளதாலும் அந்தச் சிறுமி அடிவேண்டி அழுதவாறு தாயிடம் கூறியவாறு இருந்தாள், தான் தமிழ் படிப்பதா அல்லது நடனம் படிப்பதா என்று சொல்லுங்கோ அம்மா…. ஏனிந்த நிலையென்று வினவியதில் வந்த கேள்விகளே இவை:

பொறுப்புவாய்(த்)ந்தவர்களால் ஏன் இது தொடர்பாகச் சரியான விடயங்களை இனங்கண்டு செய்ய முடியாதுள்ளதா? மாணவர்களுக்காகச் சோதினையா? சோதினைக்காக மாணவர்களா? சிறுவர்களுக்கு ஏனிந்தச் சோதனை? சிறுவர்கள் பெற்றோரிடம் படும் அவஸ்த்தையை யாராவது உணர்வீர்களா? கல்வி நடவடிக்கைகளும் கலை பண்பாட்டு நடவடிக்கைகளும் இணைந்ததாக இல்லையா? எப்போது தனித்தனியானது? சில மாணவர்கள் 200கிலோ மீற்றர் பயணம் செய்து சோதினைக்குச் செல்லும் நிலைகூட உள்ளது. இவர்களது நிலை என்ன? இரண்டு சோதனைகளிலும் எப்படிப் பங்குபற்றுவது என்று சிந்திக்க முன்வரமாட்டார்களா என்பதே எனது ஆதங்கமாக உள்ளது. எனக்கு அந்தச் சிறுமியைப் பார்த்தபோது, பொறுப்புவாயந்தோரின் பொறுப்பற்ற தன்மையால் இது போல எத்தனை சிறுவர்கள் துன்பப்படுகிறார்களோ என்ற எண்ணமே மேலோங்கியது. இரண்டு துறைசார் (தமிழ்மொழி – நடனம்) சோதனைகளையும் வெவ்வேறு இடங்களில் ஓரேநாளில் வைப்பதை தவிர்க்க முடியாதா? இதுபோன்ற செயற்பாடுகள் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதோடு நீண்டகால அடிப்படையில் பயனற்றதாகிவிடும்.

பாவம் சிறுவர்களை சோதிக்காது சோதனையை வைக்குமாறு கேட்க வேண்டுமேயென்ற எண்ணமானது யேர்மனியிலுள்ள பலரிடமும் இருக்கலாம்.

இந்த வருடம் வேறு பல நடவடிக்கைக்காக ஏழு எட்டு வாரமாக பள்ளிக்கூடமே நடைபெறவில்லை அதுக்குள்ள பரீட்சை வைக்கினம். அப்படிப் பார்த்தால் பரீட்சைக்காகத்தான் பிள்ளைகள். கொஞ்சம் பொறுங்கோவன்

எனித்தானே இருக்கிது கோல்மால்களும் குழப்பங்களும்.---

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வருடம் வேறு பல நடவடிக்கைக்காக ஏழு எட்டு வாரமாக பள்ளிக்கூடமே நடைபெறவில்லை அதுக்குள்ள பரீட்சை வைக்கினம். அப்படிப் பார்த்தால் பரீட்சைக்காகத்தான் பிள்ளைகள். கொஞ்சம் பொறுங்கோவன்

எனித்தானே இருக்கிது கோல்மால்களும் குழப்பங்களும்.---

உண்மை சிற்பியவர்களே! பதுங்கியிருந்த சருகுபுலிகளின் தொல்லை எந்தக் குழப்பத்தை விளைவிக்குமோ என்ற ஐயமானது எனக்குமுள்ளது. எனவே விழிப்புடன் இருப்பது அவசியமானது. எமது தலைவனின் உழைப்பிலே வளர்ந்த அனைத்து நிறுவனங்களும் மக்களுக்கானது என்பதை அனைவரும் அறியாமலில்லை. என்றாலும் ஒரு எச்சரிக்கை தேவையானதே.

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது கவனிப்பார்களா?

சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து முடிவெடுக்கலாமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து முடிவெடுக்கலாமே

உங்களது பார்வைசரியானதே.

கதைக்கமுடியுமென்றாலல்லவோ. ஒருவர் சாதாரணமான விடயத்தை எதேச்சையாகக் கேட்டாலே ஓ இவன் எதிரானவன் என்று சொல்லிவிடும் பாரம்பரயம் கொண்டதல்லவா எமது நிலையாக உள்ளது. சில செயற்பாட்டுத் தளங்கள் தங்களது சொந்தக் கழுத்தறுப்புகளுக்கானதொரு களமாக உள்ளமையினையும் மறுக்க முடியாதுள்ளது. அதாவது ஏதாவது ஒரு கட்டத்தில் அவர் என்னிடம் நியாயம் கேட்டவர். ஏதாவது ஒரு கட்டத்தில் கணக்குக் கேட்டவர். என்று........... பல உள்ளது.

விலை போய்விட்டர் என்று நினைப்பினம் என்று சொல்கின்றீர்களா ? :rolleyes::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

விலை போய்விட்டர் என்று நினைப்பினம் என்று சொல்கின்றீர்களா ? :rolleyes::lol::lol::lol:

ஆஆஆஆஆஆஆ.............இதென்ன எல்லொரும் விலைபோற மாதிரிகிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.