Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரணத்தை வென்ற மாவீரன்

Featured Replies

pirabakaranpage1.jpg

மரணத்தை வென்ற மாவீரன்

தமிழீழ விடுதலைப் போராட் டத்தின் அச்சாணியாக திகழ்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்பது உலகறிந்த உண்மை. தமிழீழ மக்களுக்கு விடுதலை உணர் வூட்டி தியாக வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் துணிவினை யும் தீரத்தையும் அவர்கள் பெற வழிகாட்டியவர் பிரபாகரன்.

சிங்கள அரசின் ஆசை வார்த்தை களுக்கோ அல்லது பதவி சபலங் களுக்கோ ஒரு சிறிதும் இரையாகாமல் இலட்சிய உறுதியோடு களத்தில் நிற்பவர் பிரபாகரன் மட்டுமே. எத்தனையோ போராளிக்குழுக்களின் தலைவர்கள் எல்லாம் விலைபோய்விட்ட பிறகுகூட தனது மக்களையும் மண்ணையும் காட்டிக்கொடுக்க அவர் ஒருபோதும் முன்வந்தது இல்லை. எனவேதான் அவரைத் தீர்த்துக்கட்டினால் விடுதலைப் போரையே முடிவுக்குக் கொண்டுவந்து விடலாம் என சிங்கள அரசு பலமுறை திட்டமிட்டது. சிங்கள அரசு மட்டுமல்ல இந்திய "ரா" உளவுத்துறையும் அவரை ஒழித்துக்கட்ட பலமுயற்சிகளை செய்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பலமுறை செய்திகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. சிங்கள ஊட கங்களும் பத்திரிகைகளும் மட்டுமல்ல, இந்திய ஊடகங்களும் பத்திரிகைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு அத்தகைய செய்திகளை வெளியிட்டு மகிழ்ந்தன. ஒவ்வொரு முறையும் அவர் முன்னிலும் வலிமையோடு எழுந்து நின்றார்.

1984

1984ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி அதிர்ச்சியான செய்தி ஒன்று பத்திரிகைகளில் வெளியானது. சிங்கள இராணுவம் பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக அச்செய்திகள் கூறின. இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் உலகெங்கிலும் பெரும் பரபரப்பும் பதைப்பும் ஏற்பட்டன. அன்றிரவு நானும் எனது குடும்பத்தினரும் உறங்க முடியவில்லை. அளவற்ற கவலையில் ஆழ்ந்திருந்தோம். மறுநாள் காலை ஒரு இன்ப அதிர்ச்சி எங்களை எதிர்கொண்டது. மதுரையில் உள்ள எனது வீட்டிற்கு முன்னாள் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து சிரித்த முகத்துடன் பிரபாகரன் இறங்கி வந்தார். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியால் திகைத்தனர். புன்னகையுடன் உள்ளே வந்த பிரபாகரன் சிறுமியான எனது மகள் உமாவை இழுத்து அணைத்துக்கொண்டு "மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல" என்றார். அடுத்த நிமிடம் எல்லோரும் கலகலவென நகைத்தோம்.

1989

25-7-89 அன்று மற்றொரு திடுக்கிடும் செய்தி வெளியிடப்பட்டது. புலிகள் இயக்கத் துணைத் தலைவர் மாத்தையாவிற்கும் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும

  • கருத்துக்கள உறவுகள்

pirabakaranpage1.jpg

இப்படியெல்லாம் பிரபாகரன் இறந்துவிட்டதாக பல்வேறு செய்திகளை தொடர்ந்து பரப்புவதில் சிங்கள அரசும் இந்திய "ரா" உளவுத்துறையும் ஈடுபட்டு வந்திருக்கின்றன. ஆனால் இச்செய்திகள் சிறிது காலத்திலேயே பொய்த்துவிட்டன. பிரபாகரனை கொலை செய்ய திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனாலும் எல்லாவற்றிலிருந்தும் அவர் தப்பினார். மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்.

http://www.thenseide.com/

இந்திய அரசும் இலங்கையரசும் பலதரம் கொன்றுபோட்ட தலைவன் மரணத்தை மட்டுமல்ல மனிதவுலகுக்கே அடையாளமாக விளங்கியவர்.

1987ல் செப்டம்பர் 14, 15 தேதி களில் எனக்கு தீட்சித்திடம் இருந்து போன் வந்தது. "இந்திய அமைதிப் படையுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரபாகரன் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிடுங்கள். இல்லையென்றால் அவரை நீங்கள் கைதுசெய்தாவது இந்திய அரசிடம் ஒப்படையுங்கள், என்றார் தீட்சித். அதிர்ச்சியடைந்த நான். எனது மேலதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்கிடம் பேசிவிட்டு எனது பதிலை தெரிவிக்கிறேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். தீபேந்தர் சிங்கிடம் பேசியபோது அவரும் ஆவேசம் அடைந்து "தீட்சித்திடம் சொல்லுங்கள் நம்முடைய இராணுவம் ஒருபோதும் முதுகில் சுடுகிற கோழையல்ல. அதிலும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதன்படி வெள்ளைக்கொடியின் கீழ் ஒருவரை சுட்டுக்கொல்வது நமக்கு எந்தவகையிலும் அழகல்ல" என்றார்.

http://www.thenseide.com/

வெள்ளைக்கொடியின் கீழ் சுட்டுக்கொல்லும் முதுகில் குத்துவது நேர்மையில்லையென்ற இந்திய அதிகாரியின் அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டதன் பேரில் அரசியல் போராளிகள் யுத்தவிதிகளை மீறிய அநாகரீகத்தைப் புரிந்ததை இந்த அதிகாரிகள் வெளியில் சொல்வார்களா ?

துரோகம் எந்த வடிவிலும் வரலாம் என்பதற்கு இறுதிநாட்களில் களத்தில் நிகழ்ந்தவையே சாட்சி.

கனவுகாண வைப்பதென்று தென்செய்தியும் முடிவெடுத்துவிட்டது. கனவுகளால் காலத்தை வெல்லும் கனவுகளுக்கு தயாராக வேண்டுமா ?

தலைவர் பற்றி ஒன்று மட்டும் நிச்சயம். அவர் உலகில் பல தமிழ் பேசும் நெஞ்சங்களை வென்றவர். அதுவே அவரின் பெரும் பலமாக உருவெடுத்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.