Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !

Featured Replies

"ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணைநின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்!" என்ற தலைப்பில் பா.ம.க ராமதாசின் வன்னிய சொந்தங்களுக்காக நடத்தப்படும் தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம் 10.06.2009 புதனன்று சென்னை அண்ணா கலையரங்கத்தில் ஒரு மாலை நேரக் கருத்தரங்கை நடத்தியது. மாபெரும் கருத்தரங்கமென்றாலும் உள்ளே சுமார் 250 தலைகளே இருந்தன. ஓவியர் வீர.சந்தானம் தலைமை வகிக்க, புதுவை செயமூர்த்தி என்ன பிழை செய்தோமென்ற பாடலைப் பாட கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் பச்சியப்பன் கவிதை வாசிக்க கருத்தரங்கம் தொடங்கியது. யார் யார் என்ன தலைப்பில் பேசினார்கள் என்பதை அந்த அழைப்பிதழில் உள்ளபடியே கீழே தருகிறோம்

தமிழகச் சக்திகள்- அய்யா பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

இந்திய அரசின் நிலைப்பாடு- திரு. எம்.ஜி. தேவசகாயம், இ.ஆ.பி.(பணிநிறைவு)

ஊடகங்கள்- தோழர் தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

போர்க்குற்றவாளிகள்- வழக்கறிஞர் சுரேஷ், தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழநாடு-புதுவை.

இந்திய வெளியுறவுக் கொள்கை- தோழர் இராசேந்திர சோழன், ஆசிரியர், மண்மொழி, திங்களிதழ்.

சர்வதேசச் சக்திகள்- மருத்துவர் நா.எழிலன், அமைப்பாளர், இளைஞர் இயக்கம்

நிறைவுரை தமிழினப் போராளி மருத்துவர் அய்யா ச.இராமதாசு

நன்றி கவிஞர் விஜேந்திரா, சென்னை மாவட்டச் செயலாளர், தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்.

இந்த தலைப்புக்களைப் பார்த்த பிறகு ஏதோ பயங்கரமான ஆய்வு நடந்திருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் ஜெ தலைமையிலான கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்ததைப் பற்றி ஒரு மூச்சு அழுதுவிட்டு தமிழர்களை திட்டி விட்டு ஈழத்திற்காக தாங்கள் என்னவெல்லாம் சாதித்தோம் என ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்து கொள்ளத்தான்.

பேசியோர் அனைவரும் சதீஸ்நாயர், விஜய நம்பியார், ஏ.கோபிநாத், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் உள்ளிட்ட கேரள மலையாளிகள்தான் இதற்கெல்லாம் காரணம் என திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துப் பேசினர். இந்த மலையாள பூச்சாண்டி பற்றி வினவில் தனியாகவே ஒரு பதிவு எழுதுவோம்.

கூட்டத்தலைவர் வீரசந்தானம், நெடுமாறனை பேச அழைக்கும் போது, "பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என விடை தெரியாது தமிழகமே தவித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு விடை தந்து நம்பிக்கையூட்ட அய்யாவை பேச அழைக்கிறேன்" என்றார்.

அய்யா நெடுமாறனோ, இத்தனை அழிவுகளுக்கும் காரணம் கருணாநிதிதான் என்று ஆரம்பித்தவர்,"அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாங்களெல்லாம் மத்திய மந்திரிகளை மட்டும்தான் ராஜினாமா செய்வது என்று பேசினோம்.ஆனால் கலைஞர்தான் ஒருபடி மேலேபோய் எம்.பி.க்கள் அத்தனைபேரும் ராஜினாமா செய்வார்கள் என அறிவித்தார். ஆனால், பிரணாப் இலங்கை சென்றுவந்தது மனநிறைவு தருகிறது எனக்கூறி, தான் முன்பு கூறியது போல எம்.பிக்களெல்லாம் ராஜினாமா பண்ணத்தேவையில்லை, தில்லி அரசு பார்த்துக்கொள்ளும் என நாடகமாடினார். அன்று மட்டும் அவர் அவ்வாறு முடிவெடுக்காமல், எம்.பிக்களை ராஜினாமா செய்ய வைத்திருந்தால் தில்லி அரசு பயந்திருக்கும். ஒரு இலட்சம் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். இதன் மூலம் வரலாற்றுப்பிழையை கருணாநிதி இழைத்துவிட்டார். மத்திய அரசின் நடவடிக்கையை எப்போதும் இவர் நியாயப்படுத்தியே பேசிவருவதால், தில்லி அரசும் மாநில அரசு நம்பக்கம் இருக்கிறது, எனவே, தமிழக மக்கள் குரலுக்கு நாம் செவிசாய்க்க தேவையில்லை என கருதுகிறது. அதற்கேற்ப கருணாநிதியும் மக்கள் எழுச்சியை ஒடுக்கும் வேலையைத்தான் செய்து வருகிறார்" என்று வழக்கமான கருணாநிதி பழிப்பு புராணத்தை பேசினார்.

ஈழத்திற்கு கருணாநிதி துரோகம் செய்வது எல்லோரும் ஒத்துக்கொள்ளக் கூடியதே. ஆனால் அவர் ராஜினாமா நாடகம் மட்டும் தடைபடாமல் நடந்திருந்தால் ஒரு இலட்சம் ஈழ மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள

வழக்கமான புராணம் பாடி இருக்கிறார் வினவு.

உங்களுக்கு பாமக மீது வெறுப்பு என்பது தெரிந்த விசயம். வேறு எப்படி எழுதுவீங்கள்?

இங்க வந்து எழுதி, இங்கு சிலர் ராமதாசை தூற்றுவதை பார்க்க ஆசை என்று புரிகிறது...

நடத்துங்கள்.. நடத்துங்கள்.

கிடைச்சவன் கேனயன் ஈழத்தமிழன்தானே...

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான புராணம் பாடி இருக்கிறார் வினவு.

உங்களுக்கு பாமக மீது வெறுப்பு என்பது தெரிந்த விசயம். வேறு எப்படி எழுதுவீங்கள்?

இங்க வந்து எழுதி, இங்கு சிலர் ராமதாசை தூற்றுவதை பார்க்க ஆசை என்று புரிகிறது...

நடத்துங்கள்.. நடத்துங்கள்.

கிடைச்சவன் கேனயன் ஈழத்தமிழன்தானே...

உண்மைதான்

ஆரம்பித்தாச்சு

வசை பாட......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவு, ராமதாசின் 'குரங்காட்டம்' எனக்கும் பிடிக்காதுதான். அதே போல் இடது,வலது,வர்க்கம்,பூர்ஷ்வா என்னும் சில வார்த்தைகளிலேயே உலகின் மொத்த பிரச்சினைகளையும் விளங்கிக்கொள்ளும்/விளக்க முற்படும் அறிவும் எனக்கில்லைதான்.

ராமதாஸ் சிரித்துக்கொண்டே 'தமிழன் எங்கே?' என்று கேட்டது மாபெரும் குற்றமா? சரி, நான் சிரிக்காமல் கேட்கிறேன், 'தமிழன் எங்கே?'.

ராமதாஸ் சொன்ன பதிலை தவற வேறு ஏதாவது புது பதில் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்களேன் நானும் தெரிந்துகொள்கிறேன்.

ராமதாசிடம் தொண்ணூறு சதவீதம் வியாபார புத்தியும் பத்து சதவீதம் இன உணர்வும் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், இன உணர்வோடு சொன்னதை மட்டும் கிரகித்துக்கொள்ளுவோமே! ராமதாஸ் கருணாநிதியை போலவோ, சோனியாவைப் போலவோ முதுகில் குத்தவில்லையே? வைகோ, நெடுமாறன், ராமதாஸ் இன்னும் பிற ஈழ உணர்வாளர்கள் பேசுவது எல்லாமே குற்றம்,குறை என்றால் யார் பேசுவது/செய்வதுதான் சரி?

ஒருவேளை, 'புது யுகத்தின் வர்க்கபுரட்சி' ஆரம்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீரா?

"தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான்" என்னும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

Edited by srinivasan chennappan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவு கையில் இம்முறை சிக்கிக்கொண்ட நபர் ராமதாஸ்.

வினவு அவர்கள் யாரை ஆதரிக்கிறார் யாரை எதிர்க்கிறார் என்றே விளங்கவில்லை. எல்லாரையுமே சாடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் வினவு அவர்கட்கு

1990 களிலோ அன்றேல் அதற்கு முன்போ தமிழநாட்டில் வெளிவந்த பதிய ஜனநாயகம,; புதிய கலாச்சாரம் என்கின்ற சஞ்சிகைகளில். "இந்திய சீனப்போரும்" வெளிவராத உண்மைகளும் எனும்தலைப்பில் தொடர்கட்டுரை ஒன்று வெளிவந்ததாக ஞாபகம் இது பற்றி ஏதாவது தகவல்கள் உங்களிடம் இருக்கின்றதா அன்றேல் தற்போது அக்கட்டுரையை தேடிக் கண்டுபிடித்து யாழ் வாசகர்களுக்காக பிரசுரிக்க முடியுமா?

அக்காலத்தில் வெளிவந்த அருமையான கட்டுரைகளில் அவையும் சேரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் ஈழ ஆதரவாளர்களான ,வைகோ வும் நெடுமாறனும் சிறை சென்றபொழுது கூட ஏற்படாத ஈழ உணர்வு

இன்று என்னை போன்றா பாதி தமிழ் நாட்டு தமிழர்களிடம் ஈழத்தை பற்றியும் போறாட்டத்தை பற்றியும் புரிந்துனர்வை ஏர்படுத்தியது

மக்கள் டிவி அதை போய் பினத்தை காட்டி வியாபரம் செய்தார் என்பதை கண்டிக்கிறேன்.

அதை கூட காட்டவிள்ளையே உலக மீடியாக்கல் ,தலைவர் இறந்து விட்டார் என்று வெற்றி கழிப்புடன்

தலைவரின் பினத்தை போன்று காட்டியவர்கல்தான் நல்லவர்களா.

ஒன்றுமே காட்டமல் தமிழக மக்களிடம் இருட்டடிப்பு செய்த சன் டிவியும் கழைஞ்ரும் தான் உங்கள் ஹீரோ என்றால் ,

பொழுதுபோக்கிலும் சாராயத்திலும் மயங்கி கிடக்கும்

மூட தமிழனாகதான் நீங்கள் இருக்கவேண்டும்.

உங்கள் கருத்து கொஞ்சம் உணர்வுடன் இருக்கும் அரசியல் வாதிகளையும அவ்ர்கள் இதை படிக்க நேர்ந்தால் இல்லாமல் செய்துவிடும் .

எம் ஜி ஆர் காலத்தில் கலைஞ்சரை

சந்திக்க மருத்த தேசிய தலைவர் மீது வஞ்சம் கொண்ட கொலஞ்சர் கருனானிதி இன்று வறை தன் பழியை தீர்த்து கொண்டு இருக்கிறான்.

புறிந்து நடப்போம்

பகைக்கவேண்டியவர்களை உறவை அறுப்போம், நம் மீது கொஞ்சமாவது உணர்வு உள்ளவர்களுடன் ,உறவை வளர்ப்போம்.

நண்றி

Edited by anbujaya

இந்த வினவு இடுகைகளை தூக்குவதுதான் நமக்கு நல்லது. தேவையில்லாமல் நம் நேரம் வீணாகிறது இந்த சிங்களவனால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.