Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யூத வழியில் தமிழீழம் - பூங்குழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யூத வழியில் தமிழீழம்

- பூங்குழலி

1939 - ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர் களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆண்டு. அதற்கான முதல் படியாக அய்ரோப்பாவில் இருந்த யூதர்கள் ஒட்டுமொத்தமாக பொது சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த முகாம்களில் இருந்தவர் களுக்கு என்ன நேர்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும், கண்மூடித்த னமான படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின. இந்த தடுப்பு முகாம்கள்தான் - பின்னர் இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக ஹிட்லரின் நாஜிப் படையினர், யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை நடத்தி முடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. ஹோலோகாஸ்ட் என்றால் "ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டது" என்று பொருள். அதுதான் யூத இனப் படுகொலையைக் குறிக்கும் சொல்லாக இன்றும் வழங்கப்படுகிறது.

1945 வரை நீண்ட இரண்டாம் உலகப் போரில் மிக அதிக அழிவுக்குண்டான இனம் யூத இனம். ஆனால் மூன்றே ஆண்டுகளில், அதாவது மே 14 1948-ஆம் ஆண்டு யூதர்கள் தங்களின் மரபு வழித் தாய் நாடான இஸ்ரேலின் விடுதலையை அறிவித்தனர். எண்ணிக்கையில் யூதர்களை விட மிக அதிகம் உள்ள, அரபிய நாடுகள் இஸ்ரேலின் விடுதலைக்கு எதிராக அணி திரண்டு போரிட்ட போது, அதனை எதிர்த்து "விடுதலைக்கான போரை" நடத்தி யூதர்கள் வெற்றி கண்டனர்.

எப்படி அது அவர்களுக்கு சாத்தியப்பட்டது?

ஏறத்தாழ 3000 ஆண்டுகள் வரலாற்றினை உடைய யூத இனத்தினர், அவர்களின் சொந்த மண்ணான இஸ்ரேல் மீதான உரிமையினை சிறிது சிறிதாக இழந்தனர். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங் கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இஸ்ரேல் மாறியது. அதுவும் இஸ்ரேல் என்ற பெயரில் அல்ல. பாலஸ்தீனம் என்ற பெயரில். மண்ணை இழந்து, மண் ணின் மீதான உரிமைகளை இழந்து, தங்கள் தாய் மண் ணின் மரபு வழிப் பெயரான இஸ்ரேல் என்பதும் மறைந்து பாலஸ்தீனமான நிலையில், வரலாற்றின் தொடர்ந்த காலக்கட்டங்களில் பல்லாயிரக்கணக்கான யூத மக்கள் இஸ்ரேலைவிட்டு அய்ரோப்பாவிற்கும், வடக்கு ஆப்ரிக்காவிற்கும், பிற நாடுகளுக்கும் குடி பெயர்ந்தனர்.

எங்கு சென்றாலும் அவர்கள் அந்நாட்டு மக்க ளுடன் இணைந்த ஒரு வாழ்வை அமைத்துக் கொண்ட போதிலும், சிலவற்றை விட்டுக் கொடுக்காது இருப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டனர்.

முதலாவதாக, எந்த நாட்டில் எந்தச் சூழலில் வாழ்ந்த போதும் தங்களின் மொழியான ஹீப்ருவை அவர்கள் மறக்கவில்லை. தங்கள் குழந்தைகள் என்ன கற்ற போதிலும் கண்டிப்பாக தங்களின் மொழியைக் கற்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்றனர். மொழி தங்களின் அடையாளம். தங்கள் இனத்திற்கான குறியீடு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

இரண்டாவதாக, தங்களின் மத நம்பிக்கையையும், மத பழக்க வழக்கங்களையும் மிகக் கண்டிப்பாகப் பின்பற்றினர்.

மூன்றாவதாக, தங்கள் இனத்தின் வரலாற்றினை, பெருமிதம் பொங்கவும், தங்கள் இனம் சந்தித்த அவலங் களை மறைக்காமலும் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தனர். வரலாற்றினை அறியாமல் உணர் வூட்ட இயலாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

நான்காவதாக, பொருளாதார ரீதியாக தங்களை மிக அழுத்தமாக வளர்த்துக் கொண்டனர். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரத்தில் யூதர் களுக்கு மிக முக்கியப் பங்கு இருந்தது. கடும் உழைப் பின் மூலமும் திட்டமிடுதல் மூலமும் இதனை அவர்கள் சாதித்தனர்.

இவை எல்லாம், இரண்டாம் உலகப் போருக்கு முன். இரண்டாம் உலகப் போரில் தங்கள் இனத்தின் மீது மிகப் பெரிய இனப் படுகொலை நடந்தேறிய போது, அது உலகெங்கும் உள்ள யூத மக்களை கடும் அதிர்ச் சிக்குள்ளாக்கியது என்பதில் வியப்பில்லை. ஆனால் அந்த அதிர்ச்சி அவர்களை உறையச் செய்துவிட வில்லை. மாறாக அவர்களுக்குள் ஒரு உறுதியை ஏற்படுத்தியது.

உலகின் எந்த மூலையில் வாழும் யூதன் ஆனா லும், அவனுடைய வாழ்க்கைச் சூழல் எதுவாக இருந் தாலும், அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எத்த கையதாக இருந்தாலும், ஒன்றில் அவர்கள் ஒத்த கருத் தினை- உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தனர்.

"யூதர்களுக்கு என ஒரு நாடு வேண்டும். அது அவர்களின் மரபு வழி தாய் நாடான இஸ்ரேலாக இருக்க வேண்டும்"

இதுவே அவர்களின் ஒரே இலட்சியமாக இருந்தது. இந்த இலட்சியத்தை அடைவதற்கான வழிகளை அவர்கள் திட்டமிட்டனர்.

முதலாவதாக, இரண்டாம் உலகப் போர் மற்றும் இனப் படுகொலையினால் சீர் கெட்டிருந்த தங்களின் பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொண்டனர். இரண்டாம் உலகப் போருக்கும் முன் பொருளாதார வளம் பெற்றிருந்த போதிலும் செய்யாத ஒன்றை தற் போது திட்டமிட்டு செய்தனர். தங்களின் பொருளாதார நிலையினைக் கொண்டு தாங்கள் வாழும் நாட்டின் அதிகார வர்க்கத்தின் நட்பைப் பெற்றனர். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது அதிகாரத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாக மாறினர்.

இரண்டாவதாக, உலகெங்கும் பல நாடுகளில் வாழும் யூத மக்களிடையே ஓர் அடிப்படை ஒருங் கிணைவை ஏற்படுத்தினர். ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு கருத்து இருக்கலாம். ஆனால் இலட்சியம் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒருங்கிணைவு எத்தனை பலமாக இருந்தது என்றால், உலகெங்கும் இருந்த அத் தனை யூதர்களும், ஒரே திசையில் சிந்தித்தனர். ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே திசையில் அடியெடுத்து வைத்தனர்.

இந்த இரண்டின் அடிப்படையிலும் அறிவுப் பூர்வமாக காய்கள் நகர்த்தி, மூன்றே ஆண்டுகளில் தங்கள் நாட்டின் விடுதலையை அறிவிக்கும் அளவிற்கு பலம் பெற்றனர். அவர்களின் "விடுதலைக்கான போர்", நாட்டு விடுதலையை அறிவித்தப் பிறகே நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

நாட்டின் விடுதலையை தன்னிச்சையாக அறி விப்பது என்பது விளையாட்டு அல்ல. அது கேலிக் கூத்தாகப் போகாமல் இருக்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் ஒரு நாடாவது இந்த விடுதலையை அங்கீகரிக்க வேண்டும். அந்த நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.

இந்த இடத்தில் தான் யூத மக்கள், அவர்கள் வெளியேறி வாழ்ந்த நாடுகளில் பெற்றிருந்த பொரு ளாதார பலமும், அதிகார மட்டத்தில் பெற்றிருந்த செல் வாக்கும் பயன்படுத்தப்பட்டன. பல நாடுகள் இஸ்ரேலையும், அதன் விடுதலையையும் அங்கீகரித்தன.

இதன் விளைவாக, யூதர்களுக்கென ஒரு நாடு, இஸ்ரேல், மீண்டும் பிறந்தது.

யூதர்களைப் போலவே தமிழர்களும் 3000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டவர்கள். அவர்களைப் போலவே மரபு வழியாக தங்களுக்கென நிலப் பகுதிகள் இருந்தும், அவற்றை ஆண்ட வரலாறு இருந்தும், இன்று அதன் மீது உரிமை அற்றவர்களாக நிற்கின்றனர். "இஸ்ரேல்" என்ற தொன்மைப் பெயர் உலக வழக்கிலிருந்து மறைந்து பாலஸ்தீனம் ஆனது போலவே, "தமிழீழம்" என்ற தமிழர்களின் தாய் நிலத்தின் தொன்மைப் பெயரும் உலக வழக்கிலிருந்து மறைந்து சிறிலங்கா என்ற பெயரே வழங்கப்படுகிறது. யூதர்களைப் போலவே இன்று தமிழர்களும், மண்ணை இழந்தவர்களாக, மண்ணின் மீதான உரிமையை இழந்தவர்களாக உலகெங்கிலும் சிதறி வாழ்கின்றனர்.

கடந்த மே மாதத்தில், ஈழத்தில் "கடற்கரைப் படு கொலை" என்ற பெயரில் நடந்திருப்பதும் மற்றொரு ஹோலிகாஸ்ட்டே. சொல்லப் போனால் யூதர்கள் மீதான இனப்படுகொலையையும் மிஞ்சிய இனப் படுகொலை நடந்தேறி உள்ளது. அதனை விட மோசமாக எஞ்சி யுள்ள மக்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள் ளனர். ஹிட்லரின் தடுப்பு முகாம்களில் நடந்ததை விட கொடிய சித்ரவதைகளும், உளவியல் கொடுமைகளும் இங்கு நடக்கின்றன.

இந்த மக்களைக் காப்பதிலும், தமிழர்களுக்கு என ஒரு நாடு, தமிழர்களின் மரபு வழித் தாயகமான தமிழீழ நாடு தமிழர்கள் வசப்படுவதிலும் - நமது கடமை என்ன என்பதை ஈழ மண்ணிற்கு வெளியே வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் - யூத வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

இளைய தலைமுறை தமிழர்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நம்முடைய மொழியையும் உண்மை வரலாற்றினையும், அண்மை வரலாற்றினை யும் நாம் எந்த அளவிற்கு அறியத் தந்திருக்கிறோம் என்ற கேள்வியை நாம் எமக்குள் கேட்க வேண்டிய தருணம் இது.

விடுதலைக்கான போர் என்பது ஒரு தலைமுறை இரு தலைமுறைகளோடு நிற்பதில்லை. இறுதி வரை அதே உறுதியுடன் அது எடுத்துச் செல்லப்பட வேண்டு மெனில், வரக் கூடிய ஒவ்வொரு தலைமுறையினரும் வரலாற்றினை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். வரலாற்றினை கற்பிப்பதன் மூலமாக மட்டுமே இன உணர்வினை எழுப்ப இயலும். போராட்ட உணர்வினை விதைக்க இயலும். வழி வழியாக போராட் டத்தை கைமாற்ற முடியும். நாடு விடுதலை பெற்ற பிறகும், நாட்டிற்கான அங்கீகாரம் கிடைத்த பிறகும் நாட்டை கட்டமைப்பதற்கும், அதற்குப் பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு நாட்டினை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கும் வரலாற்று அறிவு மிக முக்கியமானது. அதுவே நாட்டின் மீதான பற்றையும் இனத்தின் மீதான அக்கறையையும் ஏற்படுத்தும். அப்படி இல்லையேல் ஒரு கட்டத்திற்குப் பிறகு, ஈழத்தில் இன அழிப்புப் போரினால் நம் மக்களை இழந்ததைப் போல, மொழியையும் வரலாற்றையும் மறந்த மக்களாக, இன உணர்வு அற்ற மக்களாக, உயிருடன் நம் இளைய தலைமுறையினரை நாம் இழக்க நேரிடும்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள், செயல்முறை வேறுபாடுகள் இருந்த போதிலும், இனம் எதிர் கொண்டு நிற்கும் இந்த சவாலான தருணத்தில், தமிழினத்திற்கான தமிழீழ நாடு பெறுவதே ஒற்றை இலட்சியமாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமக் குள் இருக்கும் வேறுபாடுகள் சகோதரர்களுக்கு இடை யிலானவை. அவற்றை என்று வேண்டுமானாலும் நிதானமாக அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு அதி கபட்ச ஒருங்கிணைவுடன் செயல்பட வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.

இதற்கு மேல் நம் இனத்திற்கு இக்கட்டான தருணம் வேறு ஒன்று வந்து விடாது. அப்படி ஒன்று வந்து விடக் கூடாது எனில் இப்போதே நாம் விழித்தெழ வேண்டும்.

http://www.thenseide.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:huh: நல்ல பதிவு அண்ணை.. உங்கள் கருத்துக்களோடு ஒரு ஒப்பீடு.......

ஜூதர்கள்:

1)எந்த நாட்டில் எந்தச் சூழலில் வாழ்ந்த போதும் தங்களின் மொழியான ஹீப்ருவை அவர்கள் மறக்கவில்லை. தங்கள் குழந்தைகள் என்ன கற்ற போதிலும் கண்டிப்பாக தங்களின் மொழியைக் கற்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்றனர். மொழி தங்களின் அடையாளம். தங்கள் இனத்திற்கான குறியீடு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

2)தங்களின் மத நம்பிக்கையையும், மத பழக்க வழக்கங்களையும் மிகக் கண்டிப்பாகப் பின்பற்றினர்.

3)தங்கள் இனத்தின் வரலாற்றினை, பெருமிதம் பொங்கவும், தங்கள் இனம் சந்தித்த அவலங் களை மறைக்காமலும் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தனர். வரலாற்றினை அறியாமல் உணர் வூட்ட இயலாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

4)பொருளாதார ரீதியாக தங்களை மிக அழுத்தமாக வளர்த்துக் கொண்டனர். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரத்தில் யூதர் களுக்கு மிக முக்கியப் பங்கு இருந்தது. கடும் உழைப் பின் மூலமும் திட்டமிடுதல் மூலமும் இதனை அவர்கள் சாதித்தனர்.

தமிழர்கள்(பெரும்பான்மை):

1)பிழைக்கப்போன நாட்டிற்கேற்ப தங்கள் மொழியான தமிழ் மொழியை மாற்றி அமைத்தார்கள். சிலர் தமிழையே பெருமையாக புறக்கணித்தார்கள். தாங்கள்தான் தமிழை படிக்க வேண்டியதாயிற்று எனவே தங்கள் பிள்ளைகள் அதை நினைக்கவே கூடாது என்று நினைத்தார்கள்.மொழி தங்களின் அடையாளம், தங்கள் இனத்திற்கான குறியீடு என்பதை அவர்கள் உணரவில்லை.

2)"தமிழர்களுடய" மதமே ஒரு குளம்பிய குட்டையாக இருந்ததினால் இதை அவர்கள் கணக்கு எடுக்கவே இல்லை.ஒரு நகை சுவையாகதான் பார்க்கப்பட்டது. கோயில்களுக்கு சென்று புரியாத மொழியில் வழிபாடுகளை கேட்பது,பூசாரிக்கு பிச்சை போடுவது,கடவுளிடம் வேண்டுகோள் வைப்பது, தங்களிடம் உள்ள உடைகள், நகைகள், வாசனை திரிவியங்களை காட்டுவது மட்டுமே எம் மதம் எமக்கு காட்டிய வழியாக இருந்தது.

3)"கல் தோண்று மண் தோண்று முன்தோண்று தமிழே" என்ற தங்கள் உண்மையான வரலாறே முழுமையாக தெரியாத ஒரு இனம் தமிழ் இனம். சிங்கள இனவெறியர்கள் எழுதியதை வைத்துகொன்டு தங்கள் பூர்வீகத்தையே பிழையாக கணித்தவர்கள் .பல இனங்களுக்கு அடிமைப்பட்ட தாழ்வு மனப்பாண்மை காரணம். மேலும், வரலாறு எப்படி இருந்தால் எங்களுக்கு என்ன, நாங்கள் எப்பிடியாவது வெள்ளைகாரனின் நண்பன் ஆகிவிட்டால் போதும் என்று எம் மூதாதையோர் நினைத்து இருந்தார்கள். எம் இனத்திலேயே சாதி பேதங்களை உருவாக்கி தாங்கள் சொகுசாக வாழ்ந்தார்கள்.வரலாற்றினை அறியாமல் உணர் வூட்ட இயலாது என்பதை அவர்கள் உணரவில்லை.(வரலாறுக்கு மீண்டும் உயிர் கொடுத்தவன் எம் தலைவன்)

4)பொருளாதார ரீதியாக தங்களை வளர்த்துக் கொண்டனர். கடும் உழைப் பின் மூலமும் திட்டமிடுதல் மூலமும் தங்கள் சுய நலனுக்கு ஏற்ற மாதிரி சொத்து,பணம் சேர்த்தனர்.சொந்த நாட்டு மக்களுக்கு நன்கொடை 10 டாலர் கொடுப்பதற்கும் 1000 கேல்வி கேட்டு இழுத்தடித்து கொடுப்பார்கள். ஈழபோருக்கு நிதி கேட்டு வருவோரை உழவுத்துறையிடம் காட்டி கொடுப்பார்கள்.தம் தம் நாட்டு அரசியல் ஈடுபாடுகளில் மிகவும் பின்னே உள்ளர்கள். சினிமா படம்போல் ஈழ போராட்டத்தை பார்த்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.