Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடுகடந்த தமிழீழ அரசு,சர்வதேச ரீதியில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமாயின், அது சிறிலங்கா அரசு முகங்கொடுக்கக்கூடிய காத்திரமான அமைப்பாக திகழக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஷிஹான் பேரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தொடர்பான கருத்துக்களின் பிண்ணனியினை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இம் மக்களிடையே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வெகுவாக ஆதரவு காணப்படுகிறது.தற்போது விடுதலைப்புலிகள் இல்லை என சொல்லப்படும் நிலையில், அவர்கள் இலங்கையில் தமக்கென ஒரு பாகம் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.

இந்த தருணத்தில் தமிழ் சமூகத்தில் தலைமைத்துவ வெற்றிடம் காணப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். துரதிஷ்ட்ட வசமாக பெரும்பாலான தமிழ் தலைமைகள் இன்று உயிருடன் இல்லை.இச்சமூகத்தின் தலைமைத்துவத்தில் தற்போது வெற்றிடம் காணப்படுகிறது. இந்த தருணத்தில் தமிழ் கட்சிகளும் பலவீனமடைந்துள்ளன.

அந்த வகையில் பலம் வாய்ந்ததாக தொடர்ந்தும் காணப்பட்ட புலம்பெயர் தமிழ் சமூகமானது, தனது பாகத்தினை முன்னெடுப்பதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்திருக்கிறது.

துரதிஷ்ட்ட வசமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, சிங்கள தேசிய வாதத்திற்கு தீணி போடுவதாக அமைந்து விடக்கூடும். சிங்கள மக்கள் மத்தியில் தமிழீழம் தொடர்பான அச்சவுணர்வை ஏற்படுத்த விளைகின்றவர்களுக்கு, வாய்ப்பாகி விடக்கூடும். ஏனெனின் 'தமிழீழமே' சிங்கள மக்களின் பாரிய அச்சவுணர்வாக இருக்கிறது. ஏனெனின் நாடு பிளவு பட்டுவிடும் என அவர்கள் கருதுகின்றார்கள்.

அந்த அச்சவுணர்வே என்ன விலைகொடுத்தாயினும் வெற்றிபெற வேண்டும் என்ற மனப்பாங்கினை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அத்துடன் தமிழ் மக்களோடு எந்த வித விட்டுக்கொடுப்புக்கும் போய்விடக்கூடாது என்ற வாதத்துக்கும், இம்மனப்பாங்கு வலு சேர்க்கிறது. 'நாடுகடந்த நிலையினால தமிழீழ அரசாங்கம்' என்பது, அந்த சிங்கள மக்களின் அச்ச உணர்வுக்கு தீணி போடும் என நான் கருதுகின்றேன். சிங்கள தேசிய வாதிகளும் அந்த அச்ச உணர்வை தூண்டுவதற்கு துணையாக அமைந்து விடும். இது தவிர்க்கப்பட முடியாதது என நான் கருதுகின்றேன். நாடுகடந்த நிலையினால அரசாங்கம், அமைக்கப்படுமிடத்து, அவ் அமைப்பானது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு, அழுத்தம் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகத்துக்கு பிரச்சாரங்களை செய்யக்கூடும். அத்தோடு அந்த 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்', சிறிலங்கா அரசாங்கம் முகங்கொடுக்கக்கூடிய காத்திரமான அமைப்பாக இருக்குமென சிஹான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகர்ண, 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது பற்றி பேசுபவர்கள் 'மனப்பிரம்மை' பிடித்தவர்களாக இருப்பார்கள் எனவும், அவர்கள் சிறந்த மனநல மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டுமெனவும் கூறியுள்ளார். மேலும் 'சிலருக்கு சர்வதேச புலனாய்வுத்துறையினரிடம் இருந்து தப்பிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளர்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-06-17-11-57-17

.

இதேவேளை, இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகர்ண, 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது பற்றி பேசுபவர்கள் 'மனப்பிரம்மை' பிடித்தவர்களாக இருப்பார்கள் எனவும், அவர்கள் சிறந்த மனநல மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டுமெனவும் கூறியுள்ளார். மேலும் 'சிலருக்கு சர்வதேச புலனாய்வுத்துறையினரிடம் இருந்து தப்பிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளர்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-06-17-11-57-17

கருனாவை பிரதமராக்கி ,தமிழர் சமந்தஸ்துடன் வாழ்கிறார்கள் என்று மகிந்த அரசு பிரசாரம் செய்தாலும் செய்யும்.தமிழரின் தாயககோட்பாட்டிலும் பார்க்க இது இலகுவானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் அமைக்க வழிவகைகளுக்காக செல்லும் பாதையில் நாங்கள் எடுக்கவேண்டிய பெரிய முள்ளு ஒன்று உள்ளது. இந்த முள்ளை உடைக்கும் வரை பாதை கஸ்டமாகத்தான் இருக்கும். அயல்நாட்டை மாநில நாடுகளாகத் துண்டு போடும் வேலையில் தமிழர்கள் மற்றும் அண்டை; நாடுகளுக்கு உதவும் வரையில் ஒரு குழு பணயம் செய்யவேண்டும். சீனாவுக்கும் பாகிஸ்த்தானுக்கும் நாம் துணைபோவது மிகவும் முக்கியமான விடயங்களில் ஒன்று. பாகிஸ்த்தானோ சீனாவோ சிறீலங்காவிற்கு தமிழரை அழிக்கவேண்டுமென்று இலங்கைககுத் துணைபோகவில்லை என்பதை யதார்த்தமாக தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் இலங்கையின் காலம் காலமாக பாலியல் நண்பர்கள். அவர்களை நாம் குறைகூறமுடியாது. அவர்கள் சரியோ பிழையோ உதவி செய்யத்தான் செய்வார்கள். இந்தியாவைப் பொறுத்த மட்டில் தமிழர்களைப் போராட்ட வடிவில் உருவாக்கி போராடச்செய்து எங்களுக்கெதிராகவே செயற்பட்டு எங்களை அழித்தவர்கள் இவர்கள் தான். இவர்களின் துரோகத்தனம் இன்று நேற்றல்ல நேரு காலவரலாற்றிலேயே உள்ளது. அதற்கின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமானால் இலங்கையை மாநில அரசாக்கவேண்டும் என்பது தான் இவர்கள் இலட்சியம். அந்த இலட்சியத்துடன் தான் இவர்கள் நடை போடுகின்றார்கள். தமிழனுக்கு உரிமை என்பது இந்தியாவின் பித்தலாட்டப்பேச்சு. மீண்டும் மீண்டும் முட்டாள்கள் ஆவதைத் தவிருங்கள். இனியும் நாங்கள் முட்டாள்கள் அல்ல என்பதைக் காட்டுவோம்.

இப்பாறாங்கல்லை நகர்த்தினால் தான் நாங்கள் இலகுவாக நகரமுடியும். அதன் பின் எங்கள் பாதையில் கற்களும் இருக்காது முட்களும் இருக்காது. அப்படி இருந்தாலும் அதை உடைக்க பெரிய கூட்டமே உங்களுக்கு உண்டு. இது ஒரு பாரிய வேலை எங்களுக்கு உண்டு என்பதை எவரும் மறக்கவேண்டாம்.

கருனாவை பிரதமராக்கி ,தமிழர் சமந்தஸ்துடன் வாழ்கிறார்கள் என்று மகிந்த அரசு பிரசாரம் செய்தாலும் செய்யும்.தமிழரின் தாயககோட்பாட்டிலும் பார்க்க இது இலகுவானது.

பிரதமர் ஆசைதான் கதிர்காமருக்கு முக்தி குடுத்தது இவருக்கும் சிங்கள அரசுமுலம் முக்தி கிடைக்க கடவுளை வேண்டுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.