Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்தியில் கூட்டாட்சி மாநாலத்தில் கூயாட்சி ஆனால் அந்தக் கட்சி இன்று தனது கட்சிச் சின்னத்தில் போட்டியிடக் கூடத் திராணியற்று நிற்கிறது ‐ அபிமன்னசிங்கம் மாணிக்கசோதியின் செவ்வி:

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களுக்கென தனிநாடு அமைப்போம் என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக்குழுக்களில் ஒன்று பின்னர் தமது கொள்கைகளை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாகக் கூறி அமைச்சுப் பதவிகளை பெற்றதுடன் பிரிக்க முடியாத வட கிழக்கு, மத்தியில் கூட்டாட்சி மாநாலத்தில் கூயாட்சி என மக்களுக்குப் பம்மாத்துக் காட்டி வந்தது. ஆனால் அந்தக் கட்சி இன்று தனது கட்சிச் சின்னத்தில் போட்டியிடக் கூடத் திராணியற்று மாநாகர சபையில் கூட தனியாட்சி அமைக்க முடியாது ஆளுங்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து களத்தில் இறங்கியுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் யாழ் மாநாகர சபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் அபிமன்னசிங்கம் மாணிக்கசோதி.

யாழ்ப்பாணம் பஸ்தியான் கொட்டேலில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்றைய தினம் பொதுசன ஐக்கிய முன்னணி அதன் வேட்பாளரான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவரான கைலாசப்பிள்ளை தெய்வேந்திரன் என்பவரை முதன்மை வேட்பாளராகக் கொண்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்தது.

பொதுசன ஐக்கிய முன்னணியின் செயலாளரான கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்த வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். முஸ்லிம் காங்கிரஸ் முகமட் இஸ்மாயில்; முகமட் சாயிர் என்பவரை தலைமை வேட்பாளராகக் கொண்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்தது.

இதேவேளை அபிமன்னசிங்கம் மாணிக்கசோதியை முதன்மை வேட்பாளராகக் கொண்ட சுயேட்சைக்குழுவும் நேற்றைய தினம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தது. இதனை அடுத்து யாழ்ப்பாணம் பஸ்தியான் கொட்டேலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அபிமன்னசிங்கம் மாணிக்கசோதி மேலும் தெரிவிக்கையில் இத் தேர்தலில் போட்டியிடும் அடுத்த கட்சியோ கடந்த தேர்தலில் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக அமைக்கப்பட்ட பல கட்சிகளின் கூட்டாகப் போட்டியிட்டு ஆசனங்களைக் கைப்பற்றி மே மாதம் 11ம் திகதி வரை கொள்கையுடன் செயற்பட்டு இன்று மேய்ப்பார் அற்ற நிலையில் அவிட்டு விட்ட நெல்லிக்காய் மூட்டை போல் திக்குத் திக்காய் சிதறுண்டு போய் ஆளுக்கோர் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றது.

ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கை சென்றிருந்த போது அவரைச் சந்தித்து எமது பிரச்சனைகளை எடுத்து சொல்லக் கூட முடியாதவர்களாக உள்ள கட்சியினர் இன்றோ வன்னி யுத்தத்தை யார் பின்னணியில் இருந்து நடத்தினார்களோ அவர்களைப் போய்ச் சந்திக்கின்றார்கள்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அவல வாழ்வைச் சந்திக்கும் எமது உறவுகளுக்காக புலம்பெயர் மக்களால் வணங்கனாமண் கப்பல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்களைக் கூட இச்சந்திப்பின் மூலம் எமது மக்களுக்குப் பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றியடைவதன் மூலம் என்ன சாதிக்கப் போகின்றார்கள். எனவேதான் கூட்டமைப்பா அல்லது கூத்தமைப்பா எனக் கூற முடியாதுள்ளதுள்ளது.

அடுத்த கட்சியினரோ தமிழர் விடுதலையை தமது பெயரில் பொதித்துள்ள போதிலும் தமிழரை அடிமையாக நடத்தும் அரசாங்கங்களுக்கு ஊன்றுகோலாக செயற்பட்டு அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகின்றது. இக்கட்சியின் சிறப்பம்சமே ஊடகங்கள் ஊடாக பகரங்கக் கடிதங்களை வரைந்து அரசின் ஊது குழலாக செயற்படுவதுதான்.

யாழ் பொது நூலகத்தை எரித்தார்களோ அவர்களும் கூட கோழி அறுத்த கள்ளனும் கூட நின்று உலாவுகின்றான் என்ற பழமொழிக்கமைவாக இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். எனவேதான் தாம் இந்தத் தேர்தலில் எவருடனும் கூட்டுச் சேராமல் சுயேட்சையாகக் களமிறங்கியதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர் இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தமது குழுவானது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின் மாநாகரசபை நிர்வாகத்தினைப் பொறுப்பேற்காது பகிஸ்கரிக்க முடிவு செய்துள்ளது. தமது ஆசனங்கள் எப்போதும் வெறுமையாகவே இருக்கும் எனவும் தமது நோக்கம் என்ன நோக்கத்திற்காக அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்த முற்படுகின்றதோ அதனை முறியடிப்பதே ஆகும் என அவர் தெரிவித்தார்.

யாழ்க் குடாநாட்டிற்கான ஏ9 வீதி திறக்கப்பட்டு விட்டது, 24 மணிநேரமும் மினசாரம் வழங்கப்படும், மீன்பிடித்தடை நீக்கப்பட்டு விட்டது. எனவே இவற்றையெல்லாம் சேர்த்து எமக்கு வாக்களியுங்கள் எனக் கூறி ஒரு குழு வாக்குக் கோரி புறப்பட்டுள்ளது.

ஆனால் எமது உரிமைக்கான போராட்டம் ஆரம்பமான போது கூட கொழும்புக்கு தினமும் 4 ரெயில்கள் ஓடின, நூற்றுக்கணக்கான லொறிகளும் பஸ் வண்டிகளும் சென்று வந்தன. லக்ஸபான மின்சாரம் எந்தத் தடையும் இன்றி வந்தது. ஆனால் தமிழர் தம் உரிமைகள் மறுக்கப்பட்டதனால்தான் அரசியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டில் வலிகாமம் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் இன்று கூட தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. இவர்களை குடியமர்த்துவதற்காக பெரும் ஆரவாரத்துடன் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு இரண்டு வருடங்களைக் கடந்தும் சாதித்தது எதுவுமே இல்லை. மறுபுறத்தில் வன்னி பெரு நிலப்பரப்பு யாழ் வட கிழக்கின் சமூகத்திற்கு இல்லை. இலங்கை பெரும்பான்மை சமூகத்தின் குடியேற்றத்திற்கு கால் கோலப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கென புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள சாதாரண தரம் கூட சித்தியடையாத 50 ஆயிரம் நபர்களை படையில் சேர்த்து அவர்களை இப்பகுதியில் அவர்களது குடும்பங்களுடன் குடியமர்த்த உள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

அன்று என்ன சிறுபான்மை இனத்திற்கு தரப்படவில்லையோ அவை தொடர்ந்தும் இன்று வரை தரப்படாத நிலையில்தான் இருக்கின்றது. சர்வ சிறுபான்மைக்குழுவின் சார்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளைக் கூட தூக்கியெறிந்த இந்த அரசும் அதன் கூட்டிலுள்ள பேரினவாதக் கட்சிகளும் இன்று 13வது அரசியற் சட்டம் என்றும் 13வது சக என்றும் வாய் கிழியக் கத்தி வருகின்றன. இந்த நிலையில் இலங்கைத் தீவானது தமக்குச் சொந்தமானது எனவும் தமது மொழியும் இலங்கைக்குச் சொந்தமானது. தமக்கு உரிமைகள் உள்ளது எனவும் தாம் சலுகைகளைப் பெற அல்ல , இலங்கைத் தீவில் ஒரு பல்லின ,பல்மத பல கலாச்சாரமுள்ள நாடு. இலங்கைத் தீவில் ஜனநாயம் நிலைநாட்டப்பட வேண்டும் எனக் கருதும் யாழ் பிரதேச சபை மக்கள் தமக்கு வாக்களித்து தம்மை வெற்றி பெற வைக்குமாறு இந்த ஊடகவியலாளர் மகாநாட்டின் போது மாணிக்கசோதி தெரிவித்தார்.

குறிப்பாக புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக அரசு பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் குடாநாட்டு மக்கள் பேச்சு, எழுத்து, அசைவு சுதந்திரமற்றுத்தான் வாழ்கின்றனர். முன்னரைப் போலவே ஆயுதந் தாங்கிய படையினர் எங்கும் காணப்படுகின்றனர். பல வருடங்களாக வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த இன்னும் தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ முடியாத சூழ்நிலைதான் உள்ளன. யாழ்க்குடாநாட்டில் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் தொழில் புர்pவதற்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் எதிர்நோக்கியே வருகின்றனர் எனவும் மாணிக்கசோதி ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.

மூலம் - GTN

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியில் கூட்டாட்சி மாநாலத்தில் கூயாட்சி ஆனால் அந்தக் கட்சி இன்று தனது கட்சிச் சின்னத்தில் போட்டியிடக் கூடத் திராணியற்று நிற்கிறது ‐ அபிமன்னசிங்கம் மாணிக்கசோதியின் செவ்வி:

மகிந்தவின் கோமணத்தினுள்தான் இவர்களின் மனசாட்சியும். இவர்கள் ஏய்த்து வாழும் மக்களாட்சியும்.

கொள்ளை அடிப்பதும், கொலை செய்வதும், கூட்டிக் கொடுப்பதுமே கொள்கைகளாக இருக்கும் கூட்டம் தான் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்று கவலை கொள்ளப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை கூறியுள்ளார்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.