Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த சகோதரர்களின் டில்லி பயணத்தில் பலத்த சந்தேகம்: சோமவன்ச

Featured Replies

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் அரச தலைவரின் செயலாளர் ஆகியோர் இந்தியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட பயணம் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.

அநுராதபுரத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இந்தச் சந்தேகத்தை அவர் கிளப்பினார்.

"விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். எமது தாயகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பாதை இதுதான்" என்ற பொருளில் இந்தப் பொதுக் கூட்டத்தில் சோமவன்ச அமரசிங்க உரையாற்றினார்.

"பசில் ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் இப்போது இந்தியாவில் நிற்கின்றார்கள். இவர்களின் பயணம் தொடர்பாக எதற்காக முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை? செய்திகள் வெளியிடப்படவில்லை. அவர்கள் எங்கு சென்றாலும் அது தொடர்பாக பெருமளவுக்கு செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், இந்தப் பயணம் மட்டும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது ஏன்? இந்தப் பயணம் ஒரு இரகசியப் பயணமாக இருந்தால் தேசத்துக்கு எதிரான துரோகம் ஒன்று இங்கு இடம்பெறலாம்" எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

"அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்த நடைமுறைப்படுத்துவதற்கு நாம் அனுமதி வழங்கப்போவதில்லை. விடுதலைப் புலிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். அதனால், 13 ஆவது திருத்தத்தின் மூலம் இந்த நாடு பிளவுபடுவதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை.

இந்த அரசாங்கமும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் போல அதிகாரப்பரவலாக்கலை நோக்கி தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. உங்களுடைய கொள்கையை மாற்றிக்கொண்டு அதிகாரப்பரவலாக்கல் நடைமுறைப்படுத்துவதாகக் கூறி தேர்தல் ஒன்றைச் சந்திக்குமாறு அரசுக்கு நாம் சவால் விடுகின்றோம்.

அரசாங்கத்தின் அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை முறியடிப்பதற்காக இந்த நாட்டில் உள்ள தேசப்பற்றாளர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம்" எனவும் ஜே.வி.பி.யின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பயணம் ஒரு இரகசியப் பயணமாக இருந்தால் தேசத்துக்கு எதிரான துரோகம் ஒன்று இங்கு இடம்பெறலாம்" எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

சோமவம்சா நீங்கள் சிங்கபடையை உருவாக்கி பிக்கு வேடம் போட்டு ,மகிந்தாவை போட்டுதள்ளிவிடுங்கோ....தமிழனு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.