Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணங்காமண் பொருட்கள் இன்று காலை கொழும்பு நோக்கி செல்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணங்காமண் பொருட்கள் இன்று காலை கொழும்பு நோக்கி செல்கிறது

காப்டன் அலி கப்பலில் வந்த வணங்காமண் நிவாரணப்பொருட்கள் இன்று(07.07.2009)காலை சென்னையிலிருந்து கொலராடோ கப்பல் மூலம் கொழும்பு நோக்கி புறப்படுகிறது. நாளை இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களுடன், கொலராடோ கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று இலங்கை புறப்படுகிறது.

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, ஐரோப்பிய தமிழர்கள் உணவு, உடை, மருந்து என 884 டன் நிவாரணப் பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அந்த நிவாரணப் பொருட்களை சிறிலங்கா அரசு ஏற்காமல், கப்பலை திருப்பி அனுப்பியது.

இதையடுத்து வணங்காமண் கப்பல், ஜூன் 12ம் தேதி சென்னை துறைமுகத்துக்கு உட்பட்ட கடல் எல்லைக்குள் வந்தது. ‘கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை மாற்று கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சரிடம் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார். இதையடுத்து, கடந்த 3ம் தேதி கப்பலில் இருந்த பொருட்கள், 27 கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டன.

சிசிடிஎல் நிறுவனத்தின் மூலம் நிவாரணப் பொருட்களுடன் கொலராடோ என்ற கப்பல் நேற்று புறப்படுவதாக இருந்தது. ஆனால், கொலராடோ கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கொலராடோ கப்பல் நேற்று மதியம் 2.30 மணிக்கு சென்னை துறைமுகத்துக்கு வந்தது. உடனடியாக நிவாரணப் பொருட்களை கப்பலில் ஏற்றினர். இன்று கொலராடோ கப்பல் இலங்கை செல்கிறது.

இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். இதுகுறித்து சிசிடிஎல் அதிகாரி கூறுகையில், ‘‘கொலராடோ கப்பல் இன்று காலை 8 மணிக்கு இலங்கை புறப்படுகிறது. கப்பலில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய 27 கன்டெய்னர்கள் உட்பட மொத்தம் 650 கன்டெய்னர்கள் இலங்கை செல்கின்றன. வரும் 8ம் தேதி நள்ளிரவு கப்பல் இலங்கை சென்றடையும்’’ என்றார்.

http://www.meenagam.org/?p=5173

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழயோடி புல்லுக்கும் ஆங்காங்கே கசியுமாம்! வணங்கா மண் குழு இனியும் தாமதிக்காது தமது வரவு செலவு கணக்குகளை காட்ட வேண்டும்! காரணம் இங்கே நாம் கொடுத்த நிதியில் உண்மைணில் எத்தனை வீதம் அங்கு போய்சென்றுள்ளது என்பதை அறியப்படுத்த வேண்டும்! என் கணக்குப்படி ஒரு 30வீதம்! இதற்கு மூலகாரணம் இதுதான்!!!! சுண்டங்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்!

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழயோடி புல்லுக்கும் ஆங்காங்கே கசியுமாம்! வணங்கா மண் குழு இனியும் தாமதிக்காது தமது வரவு செலவு கணக்குகளை காட்ட வேண்டும்! காரணம் இங்கே நாம் கொடுத்த நிதியில் உண்மைணில் எத்தனை வீதம் அங்கு போய்சென்றுள்ளது என்பதை அறியப்படுத்த வேண்டும்! என் கணக்குப்படி ஒரு 30வீதம்! இதற்கு மூலகாரணம் இதுதான்!!!! சுண்டங்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்!

நீர் கொடுத்த சுண்டைக்காய் பணம் இதில் முக்கியம் பெறவில்லை. புலம் பெயர் தமிழர் தங்கள் தாய் மக்களுக்காக எதையும் எப்படியும் எந்த தடை வரினும் செய்வார்கள் என்பதை எடுத்து காட்டவே இக்கப்பல் பயணம் தொடங்கியது.

கடலில் தத்தளித்து காலம் தாழ்த்தி இருந்தாலும் இறுதியில் எங்கள் முயற்சி ஒரு வெற்றியே.

எங்கள் மக்களோடு நாங்கள் வைத்திருக்கும் அன்பை வெளிஉலகு அறிய படுத்த கிடைத்த சந்தர்ப்பம்.

வருங்காலத்திலும் அங்கு வரும் அரசியல் தீர்வுக்கும் புலம் பெயர் தமிழரும் ஒரு பங்காளிகளாக சர்வதேசம் கணக்கெடுக்கும்

இறுதி வரை முயற்சி செய்து கொலைக்கு காரணமான இந்தியாவே அப்பொருட்களை வாங்கி கொடுக்கும் அளவுக்கு முயற்சியில் ஈடுபட்ட

வணங்காமண் அமைப்புக்கு வாழ்த்துக்கள்.

நான் கொடுத்த பணத்திற்கு நான் நிறைவடைகிறேன். கணக்கு கேட்க மனம் இல்லை

நீர் கொடுத்த சுண்டைக்காய் பணம் இதில் முக்கியம் பெறவில்லை. புலம் பெயர் தமிழர் தங்கள் தாய் மக்களுக்காக எதையும் எப்படியும் எந்த தடை வரினும் செய்வார்கள் என்பதை எடுத்து காட்டவே இக்கப்பல் பயணம் தொடங்கியது.

கடலில் தத்தளித்து காலம் தாழ்த்தி இருந்தாலும் இறுதியில் எங்கள் முயற்சி ஒரு வெற்றியே.

எங்கள் மக்களோடு நாங்கள் வைத்திருக்கும் அன்பை வெளிஉலகு அறிய படுத்த கிடைத்த சந்தர்ப்பம்.

வருங்காலத்திலும் அங்கு வரும் அரசியல் தீர்வுக்கும் புலம் பெயர் தமிழரும் ஒரு பங்காளிகளாக சர்வதேசம் கணக்கெடுக்கும்

இறுதி வரை முயற்சி செய்து கொலைக்கு காரணமான இந்தியாவே அப்பொருட்களை வாங்கி கொடுக்கும் அளவுக்கு முயற்சியில் ஈடுபட்ட

வணங்காமண் அமைப்புக்கு வாழ்த்துக்கள்.

நான் கொடுத்த பணத்திற்கு நான் நிறைவடைகிறேன். கணக்கு கேட்க மனம் இல்லை

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று இந்த நிலைக்கு வந்தமைக்கு நீர்போன்றவரகள் தான் முக்கிய காரணிகள்! கேள்வி கேட்டால் நக்கலாக பதில் சொல்வது, சளாப்புவது, கேள்வி கேட்காது செம்மறியாட்டு மந்தை nபுhல் போவது! அதனால்தான் ஒரு லட்சம் மக்களை பறிகொடுத்து விட்டு இப்ப புலம்பெயர் மண்ணில் பினாத்துகிறோம்!

மற்றது ஒரு பவுண் என்றாலும் உழைத்து சம்பாதித்த எனக்கு அது முக்கியம்! சிலவேளை கள்ள மட்டையில் எடுத்திருந்தால் எனக்கும் அது சுண்டைக்காய்தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று இந்த நிலைக்கு வந்தமைக்கு நீர்போன்றவரகள் தான் முக்கிய காரணிகள்! கேள்வி கேட்டால் நக்கலாக பதில் சொல்வது, சளாப்புவது, கேள்வி கேட்காது செம்மறியாட்டு மந்தை nபுhல் போவது! அதனால்தான் ஒரு லட்சம் மக்களை பறிகொடுத்து விட்டு இப்ப புலம்பெயர் மண்ணில் பினாத்துகிறோம்!

மற்றது ஒரு பவுண் என்றாலும் உழைத்து சம்பாதித்த எனக்கு அது முக்கியம்! சிலவேளை கள்ள மட்டையில் எடுத்திருந்தால் எனக்கும் அது சுண்டைக்காய்தான்!

Bond007 gave me this link. (Some dangerous LIARS are here)

http://thesamnet.co.uk/?p=13707

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று இந்த நிலைக்கு வந்தமைக்கு நீர்போன்றவரகள் தான் முக்கிய காரணிகள்! கேள்வி கேட்டால் நக்கலாக பதில் சொல்வது, சளாப்புவது, கேள்வி கேட்காது செம்மறியாட்டு மந்தை nபுhல் போவது! அதனால்தான் ஒரு லட்சம் மக்களை பறிகொடுத்து விட்டு இப்ப புலம்பெயர் மண்ணில் பினாத்துகிறோம்!

மற்றது ஒரு பவுண் என்றாலும் உழைத்து சம்பாதித்த எனக்கு அது முக்கியம்! சிலவேளை கள்ள மட்டையில் எடுத்திருந்தால் எனக்கும் அது சுண்டைக்காய்தான்!

20002 ம் ஆண்டுக்கு முன் அமைப்பு ஒழுங்காக இருந்தது. அதற்கு பிறகு வந்த ஒப்பந்தம் திறந்து விட்டு எல்லாரும் கேள்வி கேட்டு நடு ரோட்டில் கொண்டு வந்து விட்டியள்.

2002 ம் ஆண்டுக்கு முன் கேள்வி கேட்காமல் இருந்த போது செய்த செயல்கள், வீரம் எல்லாம் 2002 ம் ஆண்டுக்கு பின் உங்கள் கேள்வி கேட்க வேணும் என்ற வித்தையால்

எல்லாம் உடைந்து றோட்டுக்கு வந்து விட்டோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.