Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் ஆயுதக் கையளிப்பு நாடகம்: பின்னணியில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள்

Featured Replies

கிழக்கு மாகாணத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருந்த முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைவதற்கு சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சி ஒரு நாடகம் என்பது இப்போது வெளிப்படையாகியிருக்கின்றது. ஆயுத ஒப்படைப்புக்காக போதுமானளவு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், கையளிக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. அதிலும் பாவனைக்கு உதவாத ஆயுதங்கள் சில மட்டும்தான் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களிடம் மேலும் பெருந்தொகையான ஆயுதங்கள் இருப்பது காவல்துறையினருக்குத் தெரியும். மிகுதியாகவுள்ள ஆயுதங்களைக் களைவதற்கு தேடுதல் நடவடிக்கை ஒன்று முடுக்கிவிடப்படும் என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்ற போதிலும், முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் இடையே இது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் மென்மையான அணுகுமுறை ஒன்றையே இந்த விடயத்தில் அரசாங்கம் கையாளும் என்றே தெரிகின்றது.

அதேவேளையில், இந்த முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் என்பது அரசுக்கு தெரியாதது அல்ல. காவல்துறையின் புலனாய்வுத்துறை மற்றும் இராணுவப் புலனாய்வுத்துறை என்பன இது தொடர்பான தகவல்களை ஏற்கனவே சேகரித்து வைத்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள்தான் இந்த அமைப்புக்களை உருவாக்கி பேணி வந்திருக்கின்றன!

முஸ்லிம் வர்த்தகர்கள் பலரும் தமது வர்த்தக நலன்களுக்காகவும் போட்டி வர்த்தகர்களை அச்சுறுத்துவதற்கும் இவ்வாறான ஆயுதக்குழுக்களை அமைத்திருந்தனர். இதற்குப் பின்னணியில் முஸ்லிம் மதரசாக்களும் சம்மந்தப்பட்டிருந்தன.

தற்போதைய ஆயுதக் கையளிப்பு நடவடிக்கையின் பின்னணியில் கூட முஸ்லிம் மத அமைப்புக்கள் சம்மந்தப்பட்டிருந்தன. காவல்துறையினர் இந்த முஸ்லிம் மத நிறுவனங்களின் மூலமாகவே ஆயுத ஒப்படைப்பு தொடர்பான தகவல்களை அனுப்பிவைத்திருந்தனர்.

காவல்துறை புலனாய்வுத் தகவல்களின்படி 18 முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் செயற்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் காத்தான்குடிப் பகுதியை மையமாக வைத்துத்தான் பெருமளவு ஆயுதக்குழுக்கள் செயற்படுகின்றன. இதனைவிட கிழக்கு மாகாணத்துக்கு வெளியே புத்தளம் பகுதியிலும் ஒரு சில ஆயுதக்குழுக்கள் செயற்படுகின்றன. இந்த ஆயுதக்குழுக்கள் இடையே ஒற்றுமை இல்லை என்பதும் இவற்றிடையே இடையிடையே மோதல்கள் வெடிப்பதும் தெரிந்த செய்திதான்.

அமைச்சர் பதவிகளையும் வகிக்கும் முக்கிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள்தான் சில முஸ்லிம் நாடுகளிடம் இருந்து இவ்வாறான ஆயுதக் குழுக்களை அமைப்பதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் தேவையான நிதியைப் பெற்று வந்திருக்கின்றனர் என்பதும் இரகசியமானதல்ல. அத்துடன், குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் காணிகளில்தான் இவர்களுக்கான ஆயுதப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை புலனாய்வுத் தகவல்கள் அரசாங்கத்திடம் உள்ளது.

சில குழுக்களின் உறுப்பினர்கள் ஆயுதப் பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளபோதிலும் அதனைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்த முடியவில்லை. எது எப்படியிருந்தாலும் சட்டவிரோதமான முறையில் இந்த ஆயுதக்குழுக்களை உருவாக்கி அவர்களுக்குப் பயிற்சி அளித்து ஆயுதங்களைப் பெற்றுக்கொடுப்பதில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிலருடைய பங்களிப்பை மறுக்க முடியாது. இது வெளிப்படையானதும் கூட.

இருந்தபோதிலும், இந்த அரசியல் தலைவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசு தயங்குவது ஏன்? இவர்களுடைய விடயத்தில் அரசாங்கமும் ஒரு மென்மையான போக்கைக் கையாள முற்படுகின்றது என்பதை கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த ஜோர்ஜ் மாஸ்டர், அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பெற்றோர் போன்றவர்களைக் கூட கைது செய்து தடுத்துவைத்துள்ள சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு அவர்கள் உதவினர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்கள் மீது வழக்குத் தொடுக்கத் தயாராகியிருக்கின்றது. புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் கூட தொடர்ந்தும் கைது செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஆயுத மோதல்களுக்கு காரணமாக இருந்த முஸ்லிம் ஆயுதக்குழுக்களை உருவாக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகள் சுதந்திரமாக வலம் வருவதுடன் தொடர்ந்தும் அரசாங்க அதிகாரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடத்தில் சிறிலங்காவின் நீதிச் சமத்துவம் எங்கே போனது?

இந்த ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளின் பின்னணியில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, அரசாங்கமும் கூட சம்மந்தப்பட்டிருக்கின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் ஆயுதக் கையளிப்பு தொடர்பாக அரங்கேற்றப்பட்ட நாடகம் அமைந்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளை அழித்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அனைத்துலக ரீதியாக எழக்கூடிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தில் நடித்த கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா சிறப்பாக நடித்திருந்த போதிலும், கிழக்கு மாகாண பிரதிக் காவல்துறை மா அதிபர் எட்வின் குணதிலக்கதான் இப்போது எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டார்.

"விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டிருப்பதால

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.