Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாகர்கோயிலில் ஆலயம் மற்றும் வீடுகள் சேதம் தரைமட்டம்: ஆலய நிர்வாகஸ்தர்கள் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாகர்கோயிலில் ஆலயம் மற்றும் வீடுகள் சேதம் தரைமட்டம்: ஆலய நிர்வாகஸ்தர்கள் தகவல்

யாழ். வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயமாக உள்ள நாகர்கோயில் பகுதியில் உள்ள பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தை நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட படைத்தரப்பு அனுமதி வழங்கியிருந்ததின் பேரில் ஆலய நிர்வாகஸ்தர்கள் குழு படையினரால் அழைத்துச் செல்லப்பட்டது.

இப்பிரதேசத்திலிருந்து கடந்த 2000 ம் ஆண்டு மக்கள் வெளியேறிய பின்னர் அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது. இதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகளில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் மாத்திரம் இரண்டொரு தடவை ஆலயத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னர் சுமார் 4 வருடங்களின் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே போர் இடம்பெற்ற முன்னரங்கப் பகுதியாக இந்த நாகர்கோயில் கிராமம் அமைந்திருந்தது. குறித்த ஆலயத்தைப் பார்வையிட கடந்த 4 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றைய தினம் அப்பகுதி உதவி அரசாங்க அதிபர் உட்பட ஆலய பரிபாலகர் குழுவொன்று அழைத்துச் செல்லப்பட்டது.

அங்கு சென்று ஆலயத்தைப் பார்வையிட்ட நிர்வாகஸ்தர்கள் குழு ஆலயம் வழிபாட்டிற்கு உகந்ததாக இல்லையெனவும், கட்டிடங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருந்த விக்கிரகங்கள் முழுமையாக நிலைகுலைக்கப்பட்டு அதற்கு கீழ் ஸ்தாபனம் செய்திருந்த தங்கத் தகடுகள் யாவும் படையினரால் சூறையாடப்பட்டுள்ளதாகவும், ஆலய கண்டாமணியும் ஆலயவளவிற்குள் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

நாகதம்பிரான் ஆலயத்தைப் பார்வையிட்டு பூஜை, வழிபாட்டை ஆரம்பிக்கும் நோக்கத்துடனேயே இக்குழு சென்றது. ஆனால் ஆலயத்தைப் பார்த்தவுடன் அவர்கள் எல்லோருடைய முகத்திலும் ஏமாற்றத்தையே காண முடிந்ததாக சென்றவர்கள் எமது தளத்திற்குத் தெரிவித்துள்ளதுடன் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் நடாத்தியே பூஜை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்வதென்றால் சுமார் ஒரு கோடி ரூபா வரை தேவைப்படும் எனவும், இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் ஊடாக யாழ். அரசாங்க அதிபரிடம் நிதி உதவியை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாகர்கோயில் கிராமத்திலிருந்த நூற்றுக் கணக்கான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக வீதியோரங்களில் இருந்த வீடுகள் யாவும் முற்றாக இடித்து வேறு இடங்களுக்கு இடிபாடுகள் யாவும் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். நாகர்கோவில் மகா வித்தியாலயம் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்துவதற்காக படைத்தரப்பு முன்னரங்கப் பகுதிகளில் மிக உயரமான மண் அரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மண் அரண்களை அமைப்பதற்கு அங்கிருந்த வீடுகளைத் தகர்த்து கட்டிட இடிபாடுகளை பயன்படுத்தியிருக்கலாம் என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் இந்தப் பகுதியில் மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பாக படைத்தரப்பினர் எந்தவொரு உறுதிமொழியையும் வழங்கவில்லை எனவும், நாகர்கோவில் கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆலயங்கள், வீடுகள் என்பவற்றைப் பார்வையிட முடியாதளவிற்கு மண் அரண்கள் உயரமாக அமைக்கப்பட்டிருந்ததினால் சேதங்களை அறியமுடியவில்லை எனவும் தெரிவித்தனர்.

http://www.meenagam.org/?p=5784

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தங்கதகடுகளை களவாட அதை உடைத்திருக்க மாட்டார்கள். புத்தமதம் அதற்குள் புதைந்திருக்கின்றதா என்ற அகழ்வாராய்ச்சிக்கே அதை தோண்டியிருப்பார்கள். ஆராய்ச்சியகள் என்பது வரவேற்க படவேண்டியவைதானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.