Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்தியப் படையைச் சேர்ந்த 500 பேர் விரைவில் வருவார்கள்: சரத் பொன்சேகா தகவல்

Featured Replies

தற்போது போர் முடிவடைந்துவிட்ட நிலையில் படையினர் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பணி இலகுவானது ஒன்றல்ல. இதற்கு நீண்டகாலம் எடுக்கும். இந்தப் பணியில் எமக்கு உதவுவதற்கு இந்தியப் படையினர் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் 500 பேர் இங்கு வரவுள்ளனர் என கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரியாகப் பதவியேற்றுக்கொண்ட ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை புதிய பதவிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

இந்தியப் படையைச் சேர்ந்தவர்கள் எப்போது வருவார்கள் என்பதையிட்டு திட்டவட்டமாக அவர் எதுவும் தெரிவிக்காத போதிலும், கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இந்தியப் படையினரின் உதவிகள் அவசியமானவையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் கண்ணிவெடிகளை அகற்றும் அனுபவத்தைப்பெற்ற பல குழுக்கள் ஏற்கனவே வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டடுள்ளன. இவ்வாறு அனுப்பப்பட்ட கண்ணிவெடி அகற்றும் குழுக்கள் அனைத்தும் தனியார் துறையைச் சேர்ந்தவை எனவும் இதற்காக இராணுவத்தின் பிரிவுகள் எதனையும் அனுப்பும் உத்தேசம் எதுவும் புதுடில்லிக்கு இல்லை என இந்திய அதிகாரிகள் முன்னர் அறிவித்திருந்த போதிலும், இதற்காக இந்தியப் படையினர் வரவுள்ள தகவல் தற்போதுதான் வெளியிடப்பட்டிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அரச சார்பற்ற அமைப்புக்கள் செய்ததைவிட அரச படையினர் பத்து மடங்கு அதிகமாகச் செய்திருப்பதாகத் தெரிவித்த சரத் பொன்சேகா, தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்டதால் படையில் உள்ள அனைத்து கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா இங்கு மேலும் முக்கியமாகத் தெரிவித்தாவது:

"கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது இலகுவான விடயமல்ல. சேற்று நீர், சதுப்பு நிலங்கள், வயல்வெளி போன்ற இடங்களில் இதற்கான கருவிகளைப் பயன்படுத்த முடியாது. எனவே யார் அவசரப்பட்டாலும், அவர்களின் அவசரத்துக்கு ஏற்ப இதனைச் செய்ய முடியாது. இதற்கு எமக்கு கால அவகாசம் தேவை.

அத்துடன், இந்தியப் படையின் 500 பேரைக் கொண்ட கண்ணிவெடிகளை அகற்றும் அணி ஒன்று விரைவில் இங்கு வரும் என எதிர்பார்க்கின்றோம். எப்படி இருந்தாலும் ஓரிரு நாட்களில் இதனைச் செய்துவிட முடியாது. கால வரையறையையும் சொல்ல முடியாது. ஆனால், கூடிய விரைவில் இந்தப் பணிகளை நிறைவேற்றுவோம்" எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.