Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பத்மநாதன் சட்டத்தை மீறியிருந்தால் சட்ட நியமங்களுக்கு அமைவாகவே நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும்: உருத்திரகுமாரன்

Featured Replies

செல்வராஜா பத்மநாதன் சட்டங்கள் எதனையும் மீறியிருந்தால், சட்ட நியமங்களுக்கு அமைவாக நாடு கடத்தலுக்கான ஆணையைப் பெற்று அவரைக் கையேற்பதே சரியான முறையாக இருந்திருக்கும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளத் விசுவநாதன் உருத்திரகுமாரன், "பத்மநாதனின் பெயர் இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாயின், எவ்வகையான கைது நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்ட ஒழுங்கு நடைமுறைகளுக்கும் அனைத்துலக சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

பத்மநாதன் சட்டத்தை மீறியிருந்தால் சட்ட நியமங்களுக்கு அமைவாகவே நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும்

PTGTE requests Malaysian Govt to announce details surrounding the abduction of KP

Edited by தேசம்

"செல்வராஜா பத்மநாதன் சட்டங்கள் எதனையும் மீறியிருந்தால், சட்ட நியமங்களுக்கு அமைவாக நாடு கடத்தலுக்கான ஆணையைப் பெற்று அவரைக் கையேற்பதே சரியான முறையாக இருந்திருக்கும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன், "பத்மநாதனின் பெயர் இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாயின், எவ்வகையான கைது நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்ட ஒழுங்கு நடைமுறைகளுக்கும் அனைத்துலக சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இது தொடர்பாக உருத்திரகுமாரன் நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய அரசியல் இராஜதந்திரப் பாதையை தலைமை தாங்கி வழிநடத்தி வந்த செல்வராஜா பத்மநாதன், ஓகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டு, சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டதாக, சிறிலங்கா அதிகாரிகளை ஆதாரம் காட்டி சிறிலங்கா மற்றும் அனைத்துலக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் எல்லைக்குள் இவ்வாறான கைது நடைபெற்றது என்பதை தாய்லாந்து அரசு மறுத்துள்ளது. மேலும் பத்மநாதன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வைத்து கடத்தப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் உட்பட தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு தரப்புக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கோலாலம்பூரில் உள்ள 'ரியூன்' விடுதியில் இக்கடத்தல் நடத்தப்பட்டதாக நாம் அறிகின்றோம்.

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கை சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத்துறையினரால் மலேசிய பாதுகாப்பு அல்லது புலனாய்வு நிறுவனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவே நாம் கருதுகின்றோம்.

செல்வராஜா பத்மநாதனின் பெயர் இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாயின், அனைத்துலக அரசுகள் அவற்றின் துறைகளினால் மேற்கொள்ளப்படும் எவ்வகையான கைது நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்ட ஒழுங்கு நடைமுறைகளுக்கும் அனைத்துலக சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாம் தீர்க்கமாக நம்புகின்றோம்.

செல்வராஜா பத்மநாதன், சித்திரவதைகளுக்கு எதிரான சட்டமுறையின் மூன்றாம் சரத்துக்கு அமைய பாதுகாப்பு உரிமை உடையவர். அதன்படி எந்தவொரு நாட்டிலும் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் சாத்தியம் இருந்தால், அந்த நாட்டுக்கு அவர் எடுத்துச் செல்லப்படுதல் தடை செய்யப்படுகின்றது.

இந்த இடத்தில் அனைத்துலக நடைமுறைகள் தமிழர் விடயத்தில் மீளவும் சட்ட நியமங்களை மீறியதையே காண்கின்றோம்.

பத்மநாதன் சட்டங்கள் எதனையும் மீறியிருந்தால், சட்ட நியமங்களுக்கு அப்பாற்பட்டு சூறையாடும் கூட்டங்கள், காடையர் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் போன்று இயங்கி அவரை சிறைப்பிடிப்பதற்குப் பதிலாக நாடு கடத்தலுக்கான ஆணையைப் பெற்று அவரைக் கையேற்பதே சரியான முறையாக இருந்திருக்கும்.

செல்வராஜா பத்மநாதன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் மீள் உருவாக்க முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டத்தினை அரசியல், இராஜதந்திர அணுகுமுறைகளை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம்.

இப்பணியில் அவர் பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்தபோதும் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான நீதியான அரசியல் எதிர்காலம் நோக்கிய நகர்வினை நம்பிக்கையுடனும் தீவிர மன உறுதியுடனும் முன்னெடுத்து வந்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசினை மக்கள் வாக்களிப்பின் மூலம் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான அடிமட்டத்தில் இருந்து உருவாகும் ஒரு ஜனநாயக நிறுவனமாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு மக்கள் ஆட்சி வழியானதொரு தலைமைத்துவத்தை கட்டி எழுப்புவதை அவர் ஆதரித்தார்.

பத்மநாதனை வழிப்பறிக் கும்பலினது பாணியில் கைப்பற்றியவர்கள், புதிதாக தொடங்கப்பட்ட அரசியல் மீள் உருவாக்க முயற்சியை தடுக்கவே விரும்புகின்றனர். ஆயினும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான தமிழீழ தேசிய செயற்திட்டம் ஒரு தனிமனிதனின் ஆற்றல் அர்பணிப்பில் மட்டும் தங்கியிருப்பதற்கு இல்லை என்பதால் எண்ணில் அடங்காத பற்று உறுதி மிக்க பலரது உழைப்பின் மூலம் இத்திட்டம் வெற்றி கிட்டும் வரை தொடரும் என்பது உறுதி.

பத்மநாதன் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் கடத்தப்பட்டிருப்பின் அக்கடத்தல் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு மலேசிய அரசினை உலகு எங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பாக நாம் வேண்டுகின்றோம்.

மலேசிய அரசிடம் இது விடயத்தில் தகவல் ஏதும் இல்லை எனில் நடந்தேறிய இந்த சட்டவிரோத கடத்தல் தொடர்பான விசாரணைகளை மலேசிய அரசு முன்னெடுக்க வேண்டும் என நாம் உறுதியாக வேண்டி நிற்கின்றோம்.

பத்மநாதன் சிறிலங்கா அரசு கூறுவதுபோன்று கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தால் அனைத்துலக நியமங்களுக்கு அமைய அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் அவருக்கு வேண்டிய சட்ட அறிவுரைகளைப் பெறுவதற்கு உரிய வாய்ப்பினை ஏற்படுத்தவும் அனைத்துலக சமூகம் இதில் தலையிட வேண்டும் எனவும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

சிறிலங்கா அரச ஏலவே மூன்று லட்சம் தமிழ் மக்களை நாசி முகாம் வகையிலான வதைமுகாம்களில் காலவரை இன்றி தடுத்து வைத்திருப்பதையும் இது விடயத்தில் கவனத்தில் கொண்டுவர விரும்புகின்றோம்.

பத்மநாதனின் உயிர்ப்பாதுகாப்பு தொடர்பாக அஞ்சுவது போலவே, இந்த மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் நாம் அஞ்சுகின்றோம்.

இதனால், இந்த மூன்று லட்சம் மக்களின் பரிதாப நிலைக்கு விரைவில் தீர்வு காண்பதிலும் பத்மநாதன் எல்லாவித அனைத்துலக விழுமியங்களுக்கு அமைய பாதுகாப்பினைப் பெறுவதையும் உறுதிப்படுத்துமாறு அனைததுலக சமூகத்தை வேண்டி நிற்கின்றோம்."

இவ்வாறு உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.