Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சிறுபான்மை மக்களின் அடையாளங்களை கொண்ட கட்சிகளை ஓரம் கட்ட புதிய தேர்தல் சட்டவிதிகள்

Featured Replies

இலங்கையில் சிறுபான்மையினரின் அடையாளங்களுடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ள கட்சிகளை அழித்தொழித்து, அவற்றை தேசிய நீரோட்டத்தில் உள்ள பிரதான கட்சிகளுடன் கலந்துவிடுவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு தொடங்கியுள்ளது.

புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம் இதனை மேற்கொள்வதற்கான முயற்சிகள் ஏற்கனவே பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளன.

அரசியல் கட்சிகள் தமது மத அல்லது இன அடையாளங்கள் தொடர்பில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறும் சட்ட விதிமுறைகள் இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகமாகும் என அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் பிரதம கொறடாவுமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

தேர்தல் சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் தினேஷ் குணவர்த்தன பதவி வகித்து வருகிறார்.

புதிய தேர்தல் சட்டத் திருத்தங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், புதிய விதிகளை பின்பற்றத் தவறும் சட்சிகளின் அங்கீகாரத்தை இல்லாது செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட உள்ளது என்றும் கூறினார்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட, தமது பெயரில் மத அல்லது இன அடையாளங்களைக் கொண்டிருக்கும் கட்சிகள் தமது பதிவுகளை மீளாய்வு செய்யுமாறு கோரப்படும். புதிய சட்டம் நடைமுறைக்கு வந்து ஒருவருட காலத்திற்குள் கட்சிகள் அதனைச் செய்ய வேண்டும். புதிய விதிமுறைகளுக்கு இணக்கமாக வரவில்லை எனில் அக்கட்சிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் நீக்கப்பட்டுவிடும் என்றார் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் சிறுபான்மைக் கட்சிகள் முழுமையாகப் பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. ஏனெனில் புதிய விதிகளின் கீழ், கட்சிகள் தமது பெயரில் தமிழ், முஸ்லிம், ஈழம் என்பன போன்ற பெயர்களை உள்ளடக்கியிருக்க முடியாது. இந்தப் பெயர்கள் அனைத்தும் மத மற்றும் இன அடையாளங்களைக் கொண்டவை.

புதிய சட்டத்தின் கீழ் தமது பெயர்களை மாற்ற மறுக்கும் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். கட்சிகள் பெயரை மாற்றினால் அவை தமது தனித்துவ அடையாளங்களை இழந்து சிறிலங்கா தேசிய நீரோட்டத்தில் கரைந்து மறைந்துவிடும். இதனையே அரசு எதிர்பார்க்கின்றது.

தற்போது அனேகமாக அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் தமது பெயரில் இன அடையாளத்தைக் கொண்டுள்ளன. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் விடுதலை முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்கள் என தனித் தமிழர் அடையாளத்தைக் கொண்ட கட்சிகளின் பெயர்கள் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் மாற்றப்படவேண்டும்.

அதேபோன்று தனது பெயரில் மத மற்றும் இன அடையாளத்தைக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பெயரை மாற்றவேண்டிய நிலை ஏற்படும்.

சிறுபான்மையினரின் அரசியல் அடையாளங்களை இல்லாது செய்யும் அரச நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இதனைப் பார்க்க வேண்டும் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். போர் முடிந்ததாக நாட்டு மக்களுக்கு அறிவித்து உரையாற்றிய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்த நாட்டில் இனி சிறுபான்மையினர் என்ற அடையாளம் இருக்காது என்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள, அரசில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகளை அவற்றின் சொந்தச் சின்னத்தில் போட்டியிட விடாமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடுமாறு அரச தலைவர் வற்புறுத்தி, அதனைச் செயற்படுத்தியும் வருகிறார் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

தேர்தல் ஆணையாளரது கருத்துப்படி, சிறிலங்காவில் 60 பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. அவற்றில 20 கட்சிகளே செயற்படுகின்றன.

புதிய சட்டத்தின் கீழ், தொடர்ச்சியாக இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு உறுப்பினரைக்கூடப் பெறமுடியாத கட்சிகள் தமது பதிவை நீடிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் கூறினார்.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை புதிய சட்டம் உறுதிப்படுத்துவதுடன், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஒன்றின் பெயரை ஒத்த பெயரைக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய கட்சிகளின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்படும் என்றார் அவர்.

பிரதான கட்சிகளில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சிகள் தொடங்கப்படுவதைத் தடுப்பதற்கே இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்துசென்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) என்ற கட்சியை நடத்திவரும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயற்பாடுகளை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த விதி எனவும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.