Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடம்பெயர் மக்களுக்கு அமெரிக்கா 15 மில். டொலர் நிதி உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெயர் மக்களுக்கு அமெரிக்கா 15 மில். டொலர் நிதி உதவி

வீரகேசரி இணையம் 8/10/2009 5:04:28 PM -

வடக்கில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் விரைவான மீள்குடியேற்றத்திற்கும், மனிதாபிமான பணிகளுக்கும் உதவும் பொருட்டு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையம் (யு.எஸ்.எய்ட்) வழங்கியுள்ளது.

கோதுமை, அவரை வகைகள், மரக்கறி வகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களும் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. கப்பல் மூலமாக கொண்டுவரப்படும் இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் உலக உணவுத் திட்டம் ஊடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க தூதுரகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையம் , 2008-2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானப் பணிகளுக்காக 59 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் பொருட்டு வழங்கப்பட்ட இந்நிதியுதவியை நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷவிடம் அமெரிக்கப் பிரதித் தூதுவரான ஜேம்ஸ் ஆர். மூர் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான பணிப்பாளர் ரெபேக்கா கான் ஆகியோர் கையளித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ரெபேக்கா கான்,

" மோதல்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவு உதவியை வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையம் ஆதரவு வழங்கும்" எனத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இடம்பெயர்ந்த மக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் அவர்களது சொந்த இடங்களுக்கும், வீடுகளுக்கும் திரும்ப அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எமது நிதி உதவி ஆதரவாக அமையும்.

மக்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பிய பின்னர், நாம் வழங்கும் உதவியின் ஒரு பகுதியாக இப்பங்கீட்டு உணவுப் பொருட்கள் ஆறு மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.

மேலும், இம்மக்கள் தமது வாழ்வாதாரப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பாக 'உழைப்பதற்கு வேண்டிய உணவு ' என்றவாறு நாம் வழங்கும் உணவு ஒரு குறுகிய காலம் வரை பயன்படுத்தப்படலாம்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர்,

" ஐக்கிய அமெரிக்கா வழங்கியுள்ள தாராளமான இந்நிதி உதவி, நெருக்கடியான இக்காலகட்டத்தில் நம் கைகளுக்கெட்டியுள்ளது. உள் நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்குப் பெரிதும் தேவைப்படும் உணவையும் , போஷணையையும் தொடர்ந்து வழங்குவதற்கு இது உலக உணவுத்திட்டத்திற்கு உதவும்.

உலக உணவுத் திட்டத்தின் மிகப் பெரிய நன்கொடை நாடான ஐக்கிய அமெரிக்காவுக்கு நாம் பெரிதும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.

இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு, மனிதாபிமான சமுதாயம் அதன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்காக தோழமையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படுவதை மீளவும் உறுதிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பதினைஞ்சு ரூவாய் காணாது

இன்னும் ஒரு பதினஞ்சை மேலை போட்டு தாருங்கோ

கையோடை நீங்கள் புதிசாய் கண்டுபுடிச்ச நச்சுவாயு குண்டுகள் ஏதும் தந்தாலும் மெத்தப்பெரிய உபகாரம்.

ஏனெண்டால் வன்னியிலை இப்பவும் கொஞ்சம் வில்லங்கமாய்க்கிடக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.