Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெற்கு ஊடகங்களில் இடம்பிடிக்கும் பிரதான செய்திகள் ‐ விடுதலைப்புலிகள் கைது ‐ ஆயதங்கள் மீட்பு ‐ வெடிமருந்துகள் கைப்பற்றல்: கைதானவர்களிடம் முக்கிய தகவல்கள் பெறப்பட்டுள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளினால் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்படும் க்ளைமோர் குண்டுகளை விநியோகிக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இவர் வழங்கிய தகவலுக்கமைய கைப்பற்றப்பட்ட வாகனத்திலிருந்து அதி சக்திவாய்ந்த 20 க்ளைமோர் குண்டுகளையும் கைப்பற்றியதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கூறினர். கடந்த காலங்களில் கொழும்பின் பல பிரதேசங்களில் வெடிக்கப்பட்ட க்ளைமோர் குண்டுகள், கைதுசெய்யப்பட்டுள்ள நபரினாலேயே விநியோகிக்கப்பட்டவையென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதேபோன்ற அதிசக்திவாய்ந்த 21 க்ளைமோர் குண்டுகளை இதற்கு முன்னர் குறித்த நபர் விநியோகித்துள்ளதாகவும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இராணுவத்தினரின் புலனாய்வுத் தகவல்களுக்கமைய, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் காவல்துறை அதிகாரி வாஸ் குணவரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் விடுதலைப் புலிகளின் இந்த முக்கிய நபர் கொழும்பு, இரத்மலான பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாரதியாக பணியாற்றி வந்துள்ள இந்த நபர், விடுதலைப் புலிகளினால் தெற்கில் வெடிக்கவைக்கப்படுவதற்காக விநியோகிக்கும் க்ளைமோர் குண்டுகளை களஞ்சியப்படுத்தி, மீள் விநியோகித்துவந்தவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக கவால்துறையினர் தெரிவித்துள்ளனர். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமையவே வான் மற்றும் அதில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 20 க்ளைமோர் குண்டுகளை மன்னார் உப்புக்குளம் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் க்ளைமோர் குண்டுகள் அனைத்தும் வாகனங்களில் பொருத்துவதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவை ஒவ்வொன்றும் தலா 6 கிலோகிராம் எடை கொண்டவை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் க்ளைமோர் குண்டுகள் 2007ம் ஆண்டு அந்தப் பிரதேசத்திற்குக் கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டவையெனத் தெரியவந்துள்ளது. குறித்த பிரதேசத்திலிருந்து பெருமளவான க்ளைமோர் குண்டுகள் தெற்குப் பிரதேசத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக லொறியொன்றும், வான் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட வானையே தற்போது காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் 1000 கிலோகிராம் வெடிமருந்துப் பொருட்களுடன் 6 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் தப்பிச் செல்வதற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சுமார் 1000 கிலோகிராம் நிரப்பப்பட்ட 6 தற்கொலைப் படகுகள் இவ்வாறு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கண்டி குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய, வெள்ளமுள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்கு இடைப்பட்ட பிரதேசமொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இந்த வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட படகுகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

998 கிலோகிராம் சீ4 ரக வெடிமருந்து பொருத்தப்பட்ட இந்த ஆறு படகுகளிலிருந்து ஆறு தற்கொலை அங்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆர்.பி.ஜி. ரவைகள் 114, ரி 56 ரக துப்பாக்கியின் ரவைகள் 1000 மற்றும் ரி 56 ரக துப்பாக்கி ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் கடல்வழியாக தப்பிச் செல்லும் போது, இலங்கைக் கடற்படையினர் மீது இவ்வாறு படகுகள் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்த இந்தப் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது போன்றே கைது செய்யப்பட்டுள்ள கே.பீயிடம் இருந்து அரிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளதாகவும் நாளாந்தம் இலங்கை அரசதரப்பை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

http://www.globaltamilnews.net/tamil_news....13126&cat=1

998 கிலோகிராம் சீ4 ரக வெடிமருந்து பொருத்தப்பட்ட இந்த ஆறு படகுகளிலிருந்து ஆறு தற்கொலை அங்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆர்.பி.ஜி. ரவைகள் 114,

RPG ரவைகளா...??? இப்ப அப்பிடியா சொல்லுறாங்க...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

RPG ரவைகளா...??? இப்ப அப்பிடியா சொல்லுறாங்க...

:) :) :)

IMG6624-1250156566.gif

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

RPG ரவைகளா...??? இப்ப அப்பிடியா சொல்லுறாங்க...

நான் , உப்புமா செய்யிற ரவை ஆக்கும் ..... எண்டு நினைச்சுப் போட்டன் . smiley-confused004.gif smiley-dance010.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்டிருக்கிற விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் உதவியுடன் மறைத்து வைக்கப்பட்டிருக்கிற ஆயுதங்களை விரைவில் கண்டு பிடிக்கப்போகிறார்களாம். பிறகென்ன, கொழும்பின் பாதாள உலகக் குழுக்களிடையே நடக்கும் நேரடி மோதல்களையும், மரபு வழிப் போர்களையும் சிங்களவர்கள் கண்டு களிக்கலாம் !!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.