Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்மநாதனின் கைது தொடர்பில் அனைத்துலக விசாரணை வேண்டும்: வலியுறுத்துகிறது பிரித்தானிய தமிழ் பேரவை

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனின் கடத்தல் மற்றும் சட்டத்துக்கு முரணான நாடு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசுகள், அரச நிறுவனங்கள், முகவர் அமைப்புக்கள் அனைத்துலகச் சட்டங்களை மீறியுள்ளமை குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு:

ஜனநாயக நாடு என்ற தனது இறுமாப்பை சிறிலங்கா அரசு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்துலக சட்டம் ஒழுங்குகளால் கட்டுப்படுத்தப்படாத ஓர் அரசாக அது தோன்றுகிறது.

சட்டவிரோத கடத்தல், காணாமல் போகச் செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காததுடன் மனித உரிமைகளை மீறுதல் போன்ற சிறிலங்கா அரசின் செயல்கள் இப்போது அனைத்துலக எல்லைகள் வரைக்கும் முன்னேறியுள்ளன.

சிறிலங்காப் படைகள் தமது நாட்டுக்குள் அனைத்துலகச் சட்டங்களை மதித்ததும் கிடையாது, மரியாதை கொடுத்ததும் கிடையாது. இப்போது அனைத்துலக மட்டத்திலும் அதனைப் பின்பற்ற அந்நாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது.

செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டது தொடர்பாக அண்மைக் காலங்களில் வெளியான செய்திகள், அனைத்துலக சட்டங்களை ஒரு சிறிதும் மதிக்காது விடுவதற்கு தனக்கு இருக்கும் சக்தியை மீண்டும் ஒரு தடவை சிறிலங்கா வெளிக்காட்டுவதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் போன்றே தோன்றுகிறது.

பத்மநாதனின் கைதும் தடுத்து வைப்பும், சிறிலங்காவுக்கு வெளியேயும் சட்ட ரீதியான நீதி வழங்கும் நடைமுறையை விட்டு அந்நாடு விலகிச்செல்ல முடியும் என்பதை நிரூபிப்பதாக இருப்பது பெருமளவு கவலைகளைக் கிளப்பியுள்ளது.

பத்மநாதனின் சட்டவிரோதமான கடத்தல் மற்றும் நீதிக்குப் புறம்பாக சிறிலங்காவுக்கு அவர் மாற்றப்பட்டமை, ஜனநாயகத்தை நம்புபவர்ககளுக்கும் ஜெனீவா பிரகடனத்தின் பங்காளிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால். சட்டத்திற்கு முரணான இத்தகைய கைதுகள், ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தின் பிரிவு மூன்றுக்கு முரணானது. இந்தப் பிரிவின் கீழ், சித்திரவதை செய்யப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது என நம்பப்படும் எந்த ஒரு நபரும் நாடு கடத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் எங்கு உயிர்த்து எழுந்து வந்தாலும் அதனை அழித்தொழிக்கும் வலு சிறிங்காவுக்கு உள்ளது என அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கருத்து கூறினார் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவிக்கிறது. அனைத்துலக நாடுகளின் முழுமையான ஆதரவுடனேயே பத்மநாதனின் கைது சாத்தியமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சமூகம், பொதுநலவாய நாடுகள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை போன்றன இந்த விடயத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்கம் அமைதியானது, பட்டப்பகலில் நடத்தப்படும் கடத்தல் போன்ற புத்திசாலித்தனமான செயற்பாடுகளை வஞ்சக அரசுகள் எல்லை தாண்டி விரிவுபடுத்துவதை இயல்பிலேயே அனுமதிக்கின்றது.

இப்படிப்பட்ட புதிய முன்னுதாரணம் உருவாக்கப்பட்டு விட்டால், அனைத்துலக சட்டங்கள், ஒப்பந்தங்கள், பிரகடனங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் திரும்ப எழுதவேண்டிய நிலை ஏற்படும்.

கடந்த காலங்களில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவை சிறிலங்கா அரசு திறம்படப் பெற்றுள்ளது. பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டியது என்று அனைத்துலகம் ஏற்றுக்கொண்டதன் காரணத்தால், 3 லட்சம் மக்களை நாசி பாணி முகாம்களில் அடைத்து வைத்திருப்பதை நிறுத்துமாறு அனைத்துலக சமூகம் விடுத்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க சிறிலங்கா மறுத்து வருகின்றது.

அனைத்துலக சமூகம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் அமைதியானது சிறிலங்கா அரசு தற்போது தேர்ந்து எடுத்துள்ள அணுமுறையை ஏற்றுக்கொள்வதாக வழங்கப்படும் சமிக்ஞை என்றே கருதவேண்டியுள்ளது.

ஏனைய நாடுகள் அனைத்துலக சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபை பிரகடனங்களையும் தூக்கி எறிந்து விடுவதற்கும் ஒதுக்கி விடுவதற்கும் இத்தகைய முன்னுதாரணங்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்துவிடும்.

அனைத்துலக ஊடகங்கள் வழக்கமாக இந்த மாதிரியான விடயங்களில் அதிக அக்கறை காட்டும். ஆனால் பத்மநாதன் கைது விடயம் ஊடகங்களால் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.