Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுப்பு முகாம் மக்களை விடுவிக்குமாறு கோரி தமிழ் இளைஞர்களின் 300 கிலோ மீற்றர் நடைபயணம்: இன்று 5 ஆவது நாள்

Featured Replies

வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்களையும் விடுவிக்குமாறு கோரியும், அவர்களின் அவலங்களை அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரும் நோக்கத்துடனும் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இருந்து தலைநகரான கன்பராவை நோக்கி 300 கிலோ மீற்றர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள இரு தமிழ் இளைஞர்களும் இன்று காலை ஐந்தாவது நாளாக தமது பயணத்தை உற்சாகமாகத் தொடர்கின்றனர்.

நான்காவது நாளான நேற்றைய நாள் Bowral நகரை வந்தடைந்த இந்த இரு இளைஞர்களும் இரவு அங்கு தங்கியிருந்த பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை பெறிமா (Berrima) நகரை நோக்கிய தமது பயணத்தை உற்சாகமாகத் தொடங்கியிருக்கின்றனர்.

தொடர்ச்சியாக நான்கு நாட்களாக நடந்தமையால் கால்களில் ஏற்பட்ட வேதனையையும் பொருட்படுத்தாமல் இன்று காலை 6 மைல் தொலைவில் உள்ள ஓக்லி ஹில் (Oxley Hill) எனும் இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு இருந்து காலை 10:30 நிமிடமளவில் பெறிமாவை இவர்கள் அடைந்தபோது அப்பகுதி மக்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.

சேரன் சிறீபாலன், விஷ்ணு சிவராஜ் ஆகிய இரண்டு அவுஸ்திரேலிய தமிழ் இளைஞர்களே படையினர் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களினதும் அனைத்துலக சமூகத்தினதும் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த 300 கிலோ மீற்றர் நடைபணயத்தை கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு சிட்னி மாநகரில் இருந்து தொடங்கினார்கள்.

ஒன்பது நாட்களுக்கு நீடிக்கும் இந்த நடைப்பயணத்தின் போது முக்கிய நகரங்கள் ஊடாக பயணிக்கும் இவர்கள், இறுதியாக எதிர்வரும் செவ்வாய்கிழமை கன்பராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை சென்றடைவார்கள்.

'3,00,000 மக்களுக்கான 300 கிலோ மீற்றர்' என்ற அவர்களின் நடைபயணம் அன்றைய நாள் பிற்பகல் 12:30 நிமிடமளவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் வருகையுடன் தொடர்புபட்டதாக சமஷ்டி நாடாளுமன்றத்தில் அன்றைய நாள் பிற்பகல் நேர கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முகாம் நிலைமைகள் தொடர்பாக விவாதிக்கப்படவிருக்கும் இந்த கலந்துரையாடலில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்வர்.

தமது நடைப் பயணத்தின்போது தொடருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கும் செல்லும் இந்த இரு இளைஞர்களும், முகாம்களில் உள்ள மக்களின் அவல நிலையை விளக்கும் பெருமளவு துண்டுப்பிரசுரங்களையும் மக்கள் மத்தியில் விநியோகித்தனர்.

அந்த துண்டுப்பிரசுரங்களில் சிறிலங்கா அரசால் 300 ஆயிரம் மக்கள் அங்கு வதைமுகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும் போதிய உணவு மருத்துவம் இன்றி அல்லற்படுவதும் நாளாந்தம் படையினரின் சித்திரவதைகளுக்கு உள்ளாவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த அவல நிலைக்குள்ளாகியுள்ள அப்பாவி மக்களை உடனடியாக இந்த சித்திரவதைகளில் இருந்து விடுவிக்க அணைத்துலக சமூகத்தின் உதவியையும் அந்த துண்டுப்பிரசுரங்களின் மூலம் கோரிக்கையாக விடப்பட்டுள்ளது.

அந்த துண்டுப்பிரசுரங்களில் அடங்கியுள்ள விடயங்களும் இந்த இளைஞர்களின் போராட்டமும் அவுஸ்திரேலியா வாழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய நாட்டவர்கள் இதனையிட்டு அதிகளவு அக்கறை காட்டுவதுடன், அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இளைஞர்களின் நடைபயணப் போராட்டம் ஊடகங்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. அவுஸ்திரேலிய அரசு நடத்திவரும் எஸ்.பி.எஸ். தொலைக்காட்சி நிறுவனம் தமது செய்தி அறிக்கையில் இதற்குப் பெருமளவு முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தமையையும் காண முடிகின்றது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.