Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பும் புலம்பெயர் தமிழ் சமூகமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பும் புலம்பெயர் தமிழ் சமூகமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்

[14 - August - 2009]

* அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் பிளேக் அழைப்பு

இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் தற்போதைய மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் இலங்கையில் அமெரிக்க விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ஜேம்ஸ் மூரே ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் 16 பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள தமிழ் சமூகத்தின் கவலைகள், எதிர்பார்ப்புகள் குறித்து கேட்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை மற்றும் இலங்கையின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்புக் கிட்டியமை தொடர்பாக பிளேக்கும் மூரேயும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

2009 இல் மனிதாபிமான உதவியாக 56 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது. முகாம் நிலை வரம் தொடர்பாக சில முன்னேற்றங்களை இலங்கை கண்டிருப்பதாகவும் இடம்பெயர்ந்தவர்களை பதிவு செய்தல், மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கு அனுமதி வழங்குவதை விரிவுபடுத்தல் போன்றவற்றை இலங்கை மேற்கொண்டுள்ள போதும் செய்வதற்கு இன்னமும் அதிகளவில் இருப்பதாக உதவி அமைச்சர் ரொபட் பிளேக்கும் மூரேயும் கூறியுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாகவும் துரிதமாகவும் இருப்பிடங்களுக்குத் திரும்பவேண்டும் என்றும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தொடர்ந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இடம்பெயர்ந்த மக்களைப் பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் நடமாடும் சுதந்திரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.

அதேநேரம், பிளேக்கும் மூரேயும் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கம் இறுதியான சமாதானத்தை வென்றெடுக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சகல தரப்பினருடனும் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் நீதியை மேம்படுத்த வேண்டுமெனவும் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தமிழர்கள் உட்பட சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறும் அதிகாரப் பகிர்வு தொடர்பான புதிய பொறிமுறையை ஏற்படுத்த இதனை முன்னெடுக்குமாறும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அதேசமயம், அரசியல் நல்லிணக்கம் மற்றும் இலங்கையின் மீள் கட்டுமானம் தொடர்பாக இலங்கை அரசும் அமெரிக்க புலம்பெயர் தமிழர்களிடம் பேச்சு நடத்துவதற்கான வாய்ப்புகளை நாடவேண்டுமென பிளேக்கும் மூரேயும் பரிந்துரை செய்துள்ளனர்.

புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் விரும்புவதாகவும் இருவரும் கூறியுள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தில் புலம்பெயர் தமிழ் சமூகப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து மூரே டிஜிற்றல் வீடியோ கொன்பரன்ஸ் மூலம் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

நன்றி - தினக்குரல் இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.