Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா ஏதிலிகள் தடுப்பு முகாமில் மக்களுக்கு சுதந்திரமான நடமாட்டம் இல்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா ஏதிலிகள் தடுப்பு முகாமில் மக்களுக்கு சுதந்திரமான நடமாட்டம் இல்லை - பிரான்ஸ் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு

வவுனியாத் தடுப்பு முகாங்களில் 2 இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடமாடுவதற்கு சுதந்திரம் இல்லை என பிரான்ஸ் எல்லைகளற்ற மருத்து அமைப்பின் (எம்.எஸ்.எவ்) நெதர்லாந்து பிரிவின் பொதுப் பணிப்பாளர் ஹான்ஸ் வான்டி வீர்ட் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு இணையம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்"

வவுனியாத் தடுப்பு முகாங்களில் 2 இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடமாடுவதற்கு சுதந்திரம் இல்லை. இந்த மக்களால் முகாமை விட்டு வெளியே செல்ல முடியாது. தொலைபேசிகளைக் கூட அவர்கள் வைத்திருக்க முடியாது.

ஒவ்வொரு ஏதிலிகள் முகாங்களின் நிலவரங்களும் வேறுபட்டவை. முகாங்களில் அளவு வேறுபட்டவை. குடிநீர்ப்பிரச்சினை உள்ளது. உணவுப் பங்கீட்டில் தாமதம் ஏற்படுகின்றது.

அங்குள்ள மக்களின் எண்ணிக்கையில் பார்க்கும் போது, அங்கு கடமையாற்றும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்களின் எண்ணிக்கை போதுமானதன்று.

நோயாளர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் தீர்மானத்தை எடுப்பவர்களாக காவலில் உள்ள படையினரே உள்ளனர்.

மருத்துமனையில் சிகிற்சை பெற்று முகாமிற்குள் அனுப்பி வைக்கப்படுவோர் பராமரிப்பு இல்லாம் உள்ளனர். இங்கு காயமடைந்தவர்களும், ஊனமானவர்களும் உள்ளனர்.

குறித்த முகாமில் உள்ளவர்கள் உறவினர்களை இழந்து இயல்பு வாழ்வை துலைத்தே காணப்படுகின்றனர்.

முகாம் நெருக்கடியால் மனிதாபிமான அமைப்புகளால் வழங்கப்படும் உணவு அல்லது ஏனைய தேவைகளுக்கு அவர்கள் அலைந்து திரிகின்றனர்.

பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாம் கவலையில் பெற்றோர்கள் உள்ளனர்.

நடமாடும் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே முகாம்களில் உள்ள மக்களுக்கு எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு சேவையாற்றுகின்றது.

மழைகாலம் ஆரம்பமானால் முகாம்களிலுள்ளோரின் நிலைமை மிக மோசமாக அமையும்.

11 முகாம்களில் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கும் கர்ப்பிணித் தாய்மாருக்கும் முதியவர்களுக்கும் அதிக போஷாக்குள்ள கஞ்சியை எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வழங்கி வருகிறது.

நாள் ஒன்றுக்கு 23 ஆயிரத்திற்கும் அதிகமான உணவை வழங்குகிறது. அதனைவிட 150 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையையும் நடத்தி வருகிறது.

காயமடைந்த ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கு நாம் சிகிச்சையளித்துள்ளோம். ஆடைகள். துவாய்கள், தண்ணீர்ப் போத்தல்கள், பணம், பாய், தலையணை என்பவற்றையும் நாம் வழங்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி - பதிவு இணையம்

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேற்றுமொழி, வேற்று இனம், வேறுதளம் ஆனால் உண்மையை சொல்கின்றனர். ஆனால் தமிழமைப்புகள்............ கட்சிகள்........... சிங்களத்துக்கு வக்காளத்து வாங்கும் கொடுமை. எத்துணை கயமைத்தனமானது. சீ! தமிழராக இருந்து துரோகமிழைப்போர் இனியாவது சிங்களம் போடும் *** உண்டு பிழைப்பு நடாத்தும் நிலைமாற வேண்டும்.

வேற்றுமொழி, வேற்று இனம், வேறுதளம் ஆனால் உண்மையை சொல்கின்றனர். ஆனால் தமிழமைப்புகள்............ கட்சிகள்........... சிங்களத்துக்கு வக்காளத்து வாங்கும் கொடுமை. எத்துணை கயமைத்தனமானது. சீ! தமிழராக இருந்து துரோகமிழைப்போர் இனியாவது சிங்களம் போடும் *** உண்டு பிழைப்பு நடாத்தும் நிலைமாற வேண்டும்.

இதை விட கொடுமைகள் யாழ்ப்பாணதில் நடக்கிறது.

சிங்களவனுக்கும்

சிங்களத்திக்கும்

பலர் பல்லிழித்து பல கடமைகள் செய்கின்றனர். படித்த பல்கலைகழக பேராசிரியர் முதல், வைத்தியர்கள் ஈறாகா (மன்னிக்கவும் அளவானவர்கள் மட்டும் தொப்பியை போடவும்)

டக்ளஸ், ஆனந்த சங்கரியை விடவும் பல புள்ளிகள் உள்ள்னர்.

ஆனால் சிங்களவனின் திட்டம் இதுதான்

தமிழர்களை இலங்கையில் இருந்து இல்லாமல் செய்வதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.