Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த அழுத்தம் கொடுங்கள்: இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தும் மனித உரிமை ஆர்வலர்கள்

Featured Replies

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படுவதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தெற்காசியாவின் அக்கறை உள்ள குடிமக்கள் மன்றத்தின் (Concerned Citizens Forum of South Asia) பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சரை நேற்று வியாழக்கிழமை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிய மன்றத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து நீண்ட நேரம் விவாதித்தது.

தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான மதிப்புக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு இந்த தெற்கு ஆசியாவின் அக்கறை உள்ள குடிமக்கள் மன்றம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இச்சந்திப்பின் போது, போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை சிறிலங்கா அரசு எப்படி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கும் படிமுறைச் செயற்திட்டம் (Road map) ஒன்றையும் மன்றத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கையளித்தனர்.

மிக முக்கியமான, அவசரமான இந்த மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தனது செல்வாக்கை அமைச்சர் பயன்படுத்த வேண்டும் என்றும் பருவமழை தொடங்குவதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பிரதிநிதிகள் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கோரினர்.

பருவமழை ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வாழும் பெரிய முகாமில் மனிதப் பேரவலம் ஏற்படும் என்று தெற்காசியாவின் அக்கறையுள்ள குடிமக்கள் பிரதிநிகள் குழு கருதுகின்றது.

அத்துடன், தெற்று நோய்கள் பரவும் அவலம் இருப்பதையும் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முகாம்களில் பெரும் எண்ணிக்கையான காயமடைந்தவர்களும் ஊனமுற்றவர்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிலளித்த அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சிறிலங்காவுக்கு வழங்குவதாக ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 500 கோடி இந்தி ரூபாய்களுக்கு மேலதிகமாக நிதி உதவிகளை வழங்கவும் பிரதமர் மன்மோகன் சிங் தயாராக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

அதேசமயம், உதவிகள் அனைத்தும் சிறிலங்கா அரசின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் போய்விடக்கூடாது என்றும் உதவி விநியோகங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் குழுவினர் தெரிவித்த கவலையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

சிறிலங்காவின் தற்போதைய உண்மை நிலைவரம் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் இருந்து விரிவான அறிக்கை ஒன்றைத்தான் விரைவில் கேட்டுப்பெறுவார் என உறுதியளித்த அமைச்சர், அதன் அடிப்படையில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குழுவினருக்குத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட ஏனைய முக்கிய விபரங்கள் வருமாறு:

இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் அல்லது அவர்கள் விரும்பும் இடங்களில் 180 நாட்களுக்குள் மீளக்குடியமர்தப்படுவார்கள் என்று சிறிலங்கா அரசு அளித்த உறுதிமொழி.

இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் உதவிகளுக்காக இந்திய அரசு வழங்கும் 500 கோடி இந்திய ரூபாய் உதவிகள் மனிதாபிமான அமைப்புக்கள் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்பதுடன் சுயாதீன அமைப்புக்களின் மூலம் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும்.

வெவ்வேறு முகாம்களில் பிரித்து வைக்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றிணைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக தமது பெற்றோரிடம் இருந்து பிரிந்திருக்கும் குழந்தைகள் விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும்.

இலங்கையின் வடபகுதியில் ஊக்கத் தொகைகளுடன் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் சனத்தொகைப் பரம்பல், பண்பாட்டு, இனத்துவ அடையாளங்கள் என்பவற்றில் மாறுதல்களைக் கொண்டுவருவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களின் மீதான படைத்துறைக் கட்டுப்பாடுகளை அகற்றி அவற்றின் நிர்வாகத்தை பொதுமக்கள் அதிகாரிகளிடம் கையளிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் குழு கோரிக்கை வைத்தது.

இடம்பெயர்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மனித உரிமை அமைப்புக்கள், அனைத்துலக உதவி அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் அந்த மக்களை அணுகுவதற்கு கட்டுப்பாடற்ற அனுமதியை சிறிலங்கா அரசு வழங்குவதற்கு அமைச்சர் தனது செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் குழு கேட்டுக்கொண்டது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வழியேற்படுத்தும் வகையில் கரையோரப் பகுதி மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள மீன்பிடிக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் அமைச்சர் சிறிலங்கா அரசு மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

சந்திப்பில் அமைச்சரிடம் வழங்கப்பட்ட வழிகாட்டி வரைபடம் உள்ளிட்ட மனுவில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர, கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கத் தலைவர் ஜெயமாலா, பெங்களூர் பல்கலைக்கழகம் ஒன்றின் உளம் சார்ந்த சமூகப் பணிகள் துறைத் தலைவர் சேர்ந்த பேராசிரியர் கே.சேகர், பெங்களூரில் உள்ள இந்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளிப் பேராசிரியரும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளுக்கான தூதரக அகதிகள் சட்டப் பிரிவுத் தலைவர் வி.விஜயகுமார், குவெம்பு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் இ.ஜெ.புட்டியா, பெங்களூர் பல்கலைக்கழக அரசியல் அறிவியல்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஜி.கிருஷ்ணன் ஆகியோர் உட்படப் பலர் கையெழுத்திட்டுள்ளனர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.