Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்கள் மீதான அடக்குமுறை சிறிலங்கா மக்களின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்: மன்னிப்புச் சபை

Featured Replies

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், இரக்கமற்ற அடக்குமுறை மற்றும் செய்திகளை வெளியிடுவதற்கு அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் என்பன சிறிலங்கா மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போரால் இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் மதிப்பையும் இவை கேள்விக்கு உரியதாக்கி உள்ளன என மன்னிப்புச் சபை கூறுகின்றது.

இது தொடர்பில் மன்னிப்புச் சபை இன்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:

விடுதலைப் புலிகளுடன் இறுதியாக நடந்த சண்டை பற்றிய செய்திகள் வெளிவராமல் சிறிலங்கா அரசு செயற்திறனுடன் தடுத்துவிட்டது. இந்தப் போரில் இருதரப்பினரும் பொதுமக்கள் மீது கனரக பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது போர்க் குற்றம் என குற்றம் சாட்டப்படுகிறது.

லட்சக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் செல்வதற்கு சிறிலங்கா அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றது. அந்த மக்களது போர் அனுபவங்கள் பற்றியும் முகாம்களில் அவர்களது வாழ்க்கை நிலை பற்றியும் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை.

அதேசமயம், சர்சைக்குரிய செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீது முன் எப்போதும் இல்லாத அளவில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் ஊடகவியலாளர்கள் மத்தியில் பயத்தையும் சுய தணிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமை மக்களின் தகவல் அறியும் உரிமையை இல்லாது ஒழித்துள்ளது.

2004 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்காவில் பல ஊடகங்களில் பணியாற்றிய முப்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்காவின் ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

போர்ச் செய்திகளை வெளியிட்டமைக்காக மேலும் பலர் கடத்தப்பட்டுள்ளனர், அச்சுறுத்தப்பட்டுள்ளனர் அல்லது துன்புறுத்தப்பட்டுள்ளனர். செய்தித்தாள் அலுவலகங்கள் மூடி முத்திரையிடப்பட்டுள்ளன. அச்சு இயந்திரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

போர் முடிந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் சிறிலங்கா ஊடகவியலாளர்கள் இன்னும் கொலை, கடத்தல், தணிக்கை மற்றும் அடக்குமுறை என்பவற்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

இத்தகைய கொடுமைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்களே. அதேபோன்று சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் குற்றங்களின் சூத்திரதாரிகள் கைது செய்யப்படவும் இல்லை. இதுவரை தண்டிக்கப்படவும் இல்லை.

ஊடகவியலாளர்களுக்கும் ஊடகப் பணியாளர்களுக்கும் தகவல் அறியும் உரிமை இருக்கின்றது என்பதை அரசு ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை என்று சிறிலங்கா ஊடகவியலாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆனாலும் முரண்பாடுகள் மற்றும் பிணக்குகள் குறித்து செய்திகளை, தகவல்களை அறிந்து கொள்ளும் வழிவகைகளை பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

2006 ஆம் ஆண்டு முதல் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை அரசு இறுக்கி வந்துள்ளது எனக் கூறும் சுனந்த தேசப்பிரிய, அரசால் வெளியிடப்பட்ட பல அறிக்கைகள் போரில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் அனுமதி இன்றி ஊடகவியலாளர்கள் செய்தி வெளியிடுவது அவர்கள் தங்களைத் தாங்களே ஆபத்துக்கு மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானது எனவும் அவர் விளக்கினார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.