Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா முகாம்களில் மற்றொரு மனிதப் பேரவலம்: கடும் மழையால் முகாம்களிலும் இருக்க முடியாத நிலையில் மக்கள்

Featured Replies

வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக மற்றொரு மனிதப் பேரவலம் தொடங்கியிருக்கின்றது. பெரும் வெள்ளம் மக்கள் வசிக்கும் கூடாரங்களுக்குள் புகுந்துகொண்டிருப்பதால் அதற்குள் இருக்க முடியாத சுமார் ஒரு லட்சம் மக்கள் வெளியே வந்து குழந்தைகள், நோயாளிகளுடன் கொட்டும் மழையில் நனைந்துகொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் மழை தொடர்வதால் முகாம்களில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக உணவும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்துள்ள மக்கள் முகாம்களில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சி செய்ததையடுத்து பெரும் தொகையான தரைப் படையினர் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டு மக்கள் எவரும் முகாம்களில் இருந்து தப்பிச் செல்லாதவாறு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது.

வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வந்த சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் சிறிலங்காப் படையினரால் வவுனியா மெனிக் பாமில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாம்களில் முன்பகுதியில் உள்ள முகாம்கள் ஓரளவுக்குப் பராமரிக்கப்படுகின்ற போதிலும் பின்பகுதியில் உள்ள முகாம்கள் மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதால் கடும் மழையைத் தாக்குப் பிடிக்க முடியாதிருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பொழிவதால் இந்த முகாம்களுக்குள் பெரும் வெள்ளம் புகுந்துகொண்டிருப்பதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இந்த கூடாரங்களுக்குள் இருந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தமது கைக்குழந்தைகளுடன் முகாம்களில் இருந்து வெளியே வந்து கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

தம்மை இங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் உரிய அதிகாரிகள் அதனையிட்டு எவ்வித அக்கறையும் செலுத்தாமல் இருப்பதையடுத்து முகாம்களில் பெரும் பதற்ற நிலை உருவாகியிருக்கின்றது.

அகதிகளில் சிலர் பாதுகாப்புக்காக நிற்கும் படையினருடன் முரண்பட்டுக்கொண்டு வெளியே தப்பிச் செல்வதற்கு முயற்சித்த போதிலும் படையினர் அதற்கு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் முகாமில் உள்ளவர்கள் தப்பிச் செல்வதற்கு முற்படலாம் என்பதால் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய தரைப் படையினரும் காவல்துறையினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தப்பிச் செல்வதற்கு யாராவது முயற்சித்தால் அவர்கள் சுடப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய மழை அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்தால் இந்த அவலநிலை மேலும் மோசமடையலாம் என வவுனியாவில் இருந்து தொடர்புகொண்ட தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இரவு வேளையில் மழை, குளிர் ஆகியவற்றுக்கு மத்தியில் மக்கள் தவித்துக்கொண்டிருப்பதால் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதனையிட்டு எவ்வித கவனத்தையும் செலுத்தாத அரசு மக்கள் அங்கிருந்து தப்பி வெளியே சென்றுவிடாமல் தடுப்பதிலேயே கவனமாக உள்ளது.

இதேவேளையில் வவுனியாவில் இருந்து தொடர்புகொண்ட மற்று ஒருவர் தொடரும் மழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக முகாமில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

வெறும் வெளியாகவுள்ள பகுதிகளில் வைத்தே முகாமில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு சமைக்கப்படுவதாகத் தெரிவிக்கும் அவர், மழை காரணமாக அதனைச் செய்ய முடியாது இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் முகாம் பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலைதான் காணப்படுவதாக வவுனியா வாசிகள் தெரிவித்தனர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.