Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலிய தமிழ் இளைஞர்களின் நடைபயணப் போராட்டம் நாளை முடிவுக்கு வருகின்றது

Featured Replies

வவுனியா தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 300 ஆயிரம் உறவுகளை காக்க அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்டுவரும் 300 கிலோமீற்றர் நடைபயணப் போராட்டம் நாளை அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் உள்ள நாடாளுமன்றம் முன்பாக முடிவுக்கு வரவிருக்கின்றது.

நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள இரு இளைஞர்களும் நாடாளுமன்றப் பகுதியை வந்தடைவார்கள் என்பதால், அந்த வேளையில் அதாவது - முற்பகல் 11:00 மணி தொடக்கம் 2:00 மணிவரை நாடாளுமன்றம் முன் பெரும் திரளாக கூடி எமது உறவுகளை வதை முகாம்களில் இருந்து விடுவிக்க குரல் கொடுப்போம் என்று அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழ் மக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், அவர்கள் அனுபவித்துவரும் பேரவலங்களை அனைத்துலக சமூகத்தவரின் முன்பாக வெளிப்படுத்துவதற்காகவும் சிட்னியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களான சேரன் சிறீபாலன், விஷ்ணு சிவராஜ் ஆகிய இரு இளைஞர்களும் 300 கிலோ மீற்றர் தூரத்துக்கான நடைபயணப் போராட்டம் ஒன்றை கடந்த திங்கட்கிழமை சிட்னி மாநகரில் இருந்து தொடங்கினார்கள்.

கடந்த ஏழு நாட்களாக வெவ்வேறான காலநிலைகளை எதிர்கொண்ட போதிலும் தமது பயணத்தைத் தொடர்ந்த இவர்கள் இன்று ஏழாவது நாள் கன்பரா நகரை அடைந்துள்ளார்கள்.

இன்று இரவு டிக்சன் நூலகத்தில் தங்கும் அவர்கள் நாளை காலை நாடாளுமன்றத்தை நோக்கிய தமது இறுதிப் பயணத்தை தொடங்குவார்கள்.

முற்பகல் 11:00 மணிக்கு இவர்கள் நாடாளுமன்ற வளாகத்தைச் சென்றடைவார்கள்.

இது தொடர்பாக அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

"எட்டு நாட்களாக தொடர்ந்து 300 கிலோ மீற்றர் தொலைவை நடந்து எவ்வளவோ வலிகளை தாங்கிய வண்ணம் உள்ள அந்த இளைஞர்களை பாருங்கள். நாம் நாளைய நாளினை இதற்காக ஒதுக்கி இப்போராட்டத்தில் அந்த இளைஞர்களோடு இணைந்து நாடாளுமன்றம் முன்பாக எமது குரல்களை உரத்து ஒலிக்கச் செய்ய வேண்டும். நாளைய நாள் அங்கு கூடி உங்கள் முழு ஆதரவையும் வழங்குங்கள்.

இதில் கலந்துகொள்ள இருப்பவர்களின் வசதியை முன்னிட்டு சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பேருந்துகள் ஹோம்புஷ் மற்றும் பென்டில் ஹில் பகுதிகளில் இருந்து இருந்து காலை 7:00 மணிக்கு புறப்படவுள்ளன.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு அரவிந்த் 0434 978 085 அல்லது விமல் 0421 243 620 அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்."

இவ்வாறு அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.