Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன அண்ணன் குறித்து அம்மா அடைந்த துயரத்தை நான் அறிவேன் அனுரகுமார: அப்பாவி மக்கள் துயருற்றிருக்கிறார்கள் கரு: ஜேர்மனியின் நாசிகால வதைமுகாம்களை ஒத்த முகாம்களில் மக்கள் மங்கள:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன அண்ணன் குறித்து அம்மா அடைந்த துயரத்தை நான் அறிவேன் அனுரகுமார: அப்பாவி மக்கள் துயருற்றிருக்கிறார்கள் கரு: ஜேர்மனியின் நாசிகால வதைமுகாம்களை ஒத்த முகாம்களில் மக்கள் மங்கள:

காணாமல் போன அண்ணன் குறித்து அம்மா அடைந்த துயரத்தை நான் அறிவேன் ‐ அனுரகுமார:

இங்குள்ள அமைச்சர்கள், எம்.பி.க்களால் ஒருநாளாவது அந்த அகதிமுகாமில் வாழ முடியுமா? அல்லது உங்கள் பிள்ளைகளைத்தன்னும் அங்குள்ள சேற்று நீரில் இறங்க விடுவீர்களா?

நீங்கள் இங்கு உங்கள் மனைவிமாருடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள். ஆனால் அங்கு மனைவி ஒருமுகாமில், கணவன் ஒரு முகாமில், பிள்ளை ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்குச் சென்ற உங்கள் குழந்தை வீடு வருவதற்கு ஒரு மணிநேரம் தாமதித்தால் கூட நீங்கள் துடிக்கின்றீர்கள். ஆனால் அங்கே தமது பிள்ளை உயிருடன் இருக்கின்றதா இல்லையா என்பது கூடத் தெரியாமல் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமை உங்களுக்கு ஏற்பட்டால் எப்படியிருக்குமென்பதை சிந்தித்துப் பாருங்கள்.

அகதி முகாமில் உள்ளவர்களில் 10 ஆயிரம் பேரை கைது செய்துள்ளதாக இராணுவத் தளபதி கூறுகின்றார். நீதி அமைச்சோ 15 ஆயிரம் பேரைக் கைது செய்ததாக கூறுகின்றது. உண்மைநிலை என்ன? கைது செய்யப்பட்டவர்களின் பெயர், விபரங்களை சபையில் சமர்ப்பியுங்கள்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கே செல்ல ஏன் அனுமதி மறுக்கின்றீர்கள்? எதை மறைக்க முயற்சிக்கின்றீர்கள்? ஜனாதிபதியின் மகனுக்கு அங்கு செல்ல என்ன உரிமை இருக்கின்றது? மக்கள் பிரதிநிதிகளான எமக்கில்லாத உரிமை அவருக்கு எப்படி வழங்கப்பட்டது?

என்னுடைய அண்ணன் 1989 காலப்பகுதியில் ஜே.வீ.பீ கிளர்ச்சியின் போது காணாமல் போனார். அவர் வீடு திரும்புவார் வருவார் என்ற நம்பிக்கையில் எனது அம்மா ஆலையம்தோறும் வழிபாடு நடத்தித் திரிந்தார். தனது மகன் அங்கு இருக்கிறார் இங்கு இருக்கிறார் என தேடி அலைந்து 15 வருடங்களின் பின்புதான் எனது அண்ணனின் மரணச் சான்றுப் பத்திரத்தை அரசாங்கம் வழங்கியது. இந்த சம்பவத்தால் அம்மா அடைந்த துயரத்தை நான் அறிந்திருக்கிறேன்.

இது போல வடக்கில் எத்தனை பெற்றோர் தமது பிள்ளைகள் இருக்கிறார்களா? இல்லையா என்ற ஏக்கத்துடன் செய்வதறியாது தவிக்கின்றனர். தமது பிள்ளைகள் தொடர்பாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை அந்தப் பெற்றோருக்கு உண்டு. அந்த உரிமை பாதுகாக்கப்படவேண்டும் எனவும் அனுரகுமாரதிஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார்.

கரு ஜயசூரிய:

எங்களுடைய கட்சி இது தொடர்பான அக்கறையோடு செயற்படுகிறது. கடந்த வாரமும் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூட அரசாங்கம் இது குறித்து உடனடியாக தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

துரதிர்டவசமாக அங்கிருந்து கிடைக்கும் அறிக்கைகள் திருப்தி தருவனவாக இல்லை. இது தொடர்பாக மேற்கொண்டு செயற்பட நாம் முகாம்களுக்குச் சென்று பார்வையிட வேண்டும். ஆனால் அதற்கான அனுமதி எமக்கு வழங்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நாட்டின் எப்பாகத்திற்கும் சென்று வர அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தும் எமக்கு உள்ளன. ஆனால் துரதிஸ்டவசமாக மதவாச்சிக்கு அப்பால் செல்வதற்கு எமக்கு அனுமதி இல்லை. குறிப்பாக இம்முகாம்களுக்குச் செல்வதற்கு எமக்கு எத்தகைய அனுமதியும் இல்லை.

இது தொடர்பாக உச்சநீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. நாட்டின் ஒரு பகுதிக்குச் செல்வதற்கும் அந்த மக்களின் நிலைமையைப் பார்வையிடுவதற்கும் எமக்கு அனுமதி வழங்கப்படும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம்.

அரசாங்கம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் பலிகள் என்றே கருதுகிறது. இதன் காரணமாக களையெடுக்கும் நடவடிக்கைகளை அது மேற்கொள்கிறது. ஆனால், இந்த விடயங்களோடு சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் மிகவும் துன்பமுறுகிறார்கள்.

அதேவேளை எங்களுக்குத் தெரியும் இந்த எல்லாப் பிரதேசங்களிலும் கண்ணி வெடி புதைக்கப்பட்டிருக்கவி;ல்லை என்று. கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்காத பிரதேசங்களில் அவர்களுடைய வீடுகள் பாதிக்கப்படாதிருக்கும் இடங்களில் இந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட வேண்டும்.

அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. 180 நாட்களுக்கு மேலாக இந்தமக்கள் தடுத்து வைக்கப்படப் போகிறார்கள் என்பது தான் பிந்திய செய்தி.

ஜேர்மனியின் நாசிகால வதைமுகாம்களை ஒத்த முகாம்களில் மக்கள் ‐ மங்கள சமரவீர:

வடக்கைச் சேர்ந்த மூன்று இலட்சம் அளவிலான மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர் என்ற கோதாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போரின் இறுதிக்கட்டத்தில் இறுதி இரண்ட மாதங்களுள் மோதல் பிரதேசங்களிலிருந்து வெளியேறி வந்தவர்களாவர்.

இந்த மக்கள் ஜேர்மனியின் நாசிகால வதைமுகாம்களை ஒத்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளன.

இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என அழைக்கப்படும் இம்முகாம்கள் முட்கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்டு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள முகாம்களாக இருக்கின்றன. 1990இல் இதேபோன்றதொரு முகாமாக பூசா முகாம் இருந்தது.

இப்போது இந்த முகாம்கள் அனைத்தும் அந்த நிலையிலேயே இருக்கின்றன. அங்குள்ள மக்கள் அனைவுரும் தொடர்ச்சியாக துன்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். நடமாடும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை என அடிப்படை உரிமைகள் அனைத்தையும் இழந்த நிலையிலேயே இந்த மக்கள் இருக்கின்றனர்.

அந்த மக்களுடைய நிலைமைகளை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எங்களுக்கு இல்லை. அந்த வாய்ப்பு எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்மக்கள் தாங்கள் எந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பகிறார்களோ அங்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த மக்களுடைய வீடுகள் போரின் போது சிசிலமாக்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் அவர்களுடைய உறவினர் வீடுகளுக்காவது செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய விருப்பப்படி அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று குடியமர அனுமதிக்கப்படல் வேண்டும். அவர்களுக்கு ஆகக்குறைந்த சுகாதார வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

அதேவேளை எதிர்பார்த்ததற்கு ஒரு மாதம் முன்னதாகவே பருவமழை ஆரம்பித்தால் அந்த முகாம்களின் நிலை மிக மோசமாக ஆகிவிட்டது. அந்த மக்கள் அவலமான நிலையை எதிர்கொள்கிறார்கள். இதன்காரணமாக பெருமளவு நோய்கள் பரவ வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக அந்த மக்கள் எவ்வளவு விரைவாக முகாம்களிலிருந்து வெளியேற வழியிருக்கிறதோ அவ்வளவு விரைவாக வெளியேற்றப்பட வேண்டும்.

ஏறத்தாழ இருபதாயிரம் புலி உறுப்பினர்கள் இந்த முகாம்களில் இருப்பதாக அரசாங்கம் சொல்கிறது. ஆனால் இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் மக்களும் எந்தக் காரணமும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த குற்றம் எல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தில் பிறந்ததும் வாழ்ந்ததும் தான்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் அவ்வாறு முகாம்களில் இருப்பதானால் அவர்களை கடத்துவது காணாமல் போகச் செய்வது என்பதற்குப் பதிலாக சட்டத்தின் மூலமாகத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து அவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வழியேற்படுத்துவது தான்.

சர்வதேச சமூகத்திற்குச் சில கடப்பாடுகள் இருக்கின்றன. சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கம் என்ற வகையில் சர்வதேச சட்டங்களையும் கடப்பாடுகளையும் பின்பற் வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. நாகரீகமடைந்த சமூகம் என்ற வகையில் அதனைப் பின்பற்ற வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.

ஆகவே நாங்கள் வெறுமனே இதனை உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறி விட்டு விட முடியாது. நாட்டின் ஒரு பகுதி மக்கள் நெருக்குவாரத்துக்குள் உள்ளாக்கப்படும் போது அது குறித்து கேள்வி கேட்கும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு. அவர்கள் அது தொடர்பாகப் பேசும் உரிமையைக் கொண்டுள்ளார்கள்.

http://www.globaltamilnews.net/tamil_news....13598&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.