Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுப்பு வதைபுரி முகாம் தமிழர்கள் சொந்த நிலத்தில் குடியமர்த்தும் 'திறப்பு' போராட்டம் பிரித்தானியாவில் தொடங்கியது

Featured Replies

தடுப்பு வதைபுரி முகாம் தமிழர்கள் சொந்த நிலத்தில் குடியமர்த்தும் 'திறப்பு' போராட்டம் பிரித்தானியாவில் தொடங்கியது

[செவ்வாய்க்கிழமை, 25 ஓகஸ்ட் 2009, 06:40 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

சிறிலங்காப் படையிரின் தடுப்பு வதைபுரி முகாம்களின் இரும்புப்பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்து மீண்டும் தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தும் வரை பாரிய முனைப்புடன் தொடர் போராட்டமாக "வதைபுரி முகாம்களை திறந்துவிடு" என்ற 'திறப்பு' போராட்டம் பிரித்தானியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இன்னமும் முள்வேலியின் பின்னால் லட்சக்கணக்கான எமது உறவுகள் புலத்தினைப் பார்த்தவண்ணம் உள்ளனர்.

பாரிய படுகொலைகளுக்கு உள்ளாகி மருந்து இன்றி, உணவு இன்றி வாழ்ந்து பின்னர் முகாம்களுக்குள் அடைபட்டுள்ளனர்.

கொட்டும் மழையைத் தொடர்ந்து பெருக்கெடுத்துள்ள பெருவெள்ளம் 'மெனிக்' பாமில் உள்ள 2, 3, மற்றும் 4 ஆவது பிரிவு முகாம்களுக்குள் நிரம்பியுள்ளதால் அந்த முகாம்களில் இருந்த சுமார் ஒரு லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறி வெற்று நிலப்பரப்பில் இருப்பதாகவும், சிலர் வெளியே இடவசதி இல்லாமையால் முகாம்களுக்குள்ளேயே தொடர்ந்தும் வெள்ளத்துக்குள் அடைபட்டுள்ளனர்.

பெருவெள்ளம் வேகமாக அடித்துச் சென்றதால் முகாம்களில் உள்ளவர்களுக்காக என அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மலசலகூடங்கள் பலவும் சேதமடைந்துள்ளதுடன், அதற்குள் இருந்த கழிவுகள் வெள்ளத்துடன் மக்கள் வசிக்கும் கூடாரங்களுக்குள் புகுந்து இருப்பதாகவும் இதனால் பெரும் சுகாதாரக் கேடுகள் ஏற்படலாம் எனவும் மனிதநேய அமைப்புக்கள் பலவும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.

சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த எம் மக்களுக்கு இயல்பு நிலை வாழ்க்கையை ஏற்படுத்தித் தரவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும்.

பிரித்தானிய மக்களுக்கு ஈழத் தமிழரின் இன்றைய அவல நிலை குறித்து விளக்கும் முகமாகவும், சிறிலங்காவின் தமிழ் இனச் சுத்திகரிப்பை அம்பலப்படுத்துவதற்காகவும் இன்று திங்கட்கிழமை தொடக்கம் பலமுனைகளில், சாதாரண மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனிதநேய ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் என பல தளங்களிலும் ஒரு குரலாக, ஒரே குறிக்கோளுடன் ஓங்கி ஒலிக்க இருக்கிறது திறப்பு போராட்டம். இதற்கான பூர்வாங்க வேலைகள் பூர்த்தியாகி உள்ளது.

பிரித்தானியாவின் பல நகரங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட உள்ள இந்த கவனயீர்ப்புப் போராட்டம் தாயக தமிழ் மக்கள் அவலம் பற்றிய விளக்கத்தை கொடுப்பதுடன், ஒவ்வொருவருடைய கையிலும் ஒரு 'திறப்பு' கொடுக்கப்படும்.

"Unlock the concentration camps in Sri Lanka" என்ற வாசகத்துடன் கொடுக்கப்படும் இந்த திறப்பு எமது மக்களின் வதைபுரி முகாம் வாழ்வை நினைவுபடுத்தி, அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபடுவதற்கு உதவும்.

இப்போராட்டத்தை உலகம் முழுக்க விரிவாக்குவதற்கு உலகத்தமிழர், மற்றும் மனிதநேய ஆர்வலர்களின் உதவியை வேண்டி நிற்கிறோம்.

உலகத் தமிழர்களின் ஒற்றுமையை உடைப்பதற்காக செயற்படும் சிறிலங்கா அரசையும், தமிழர்களின் போராட்டத்தை சிதைப்பதற்காக சேர்ந்து இயங்கும் சக்திகளையும் கண்டறிந்து, அவர்களின் சதிவலையில் வீழ்ந்து விடாது இருக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

இதேவேளையில் எமது மக்களின் அடிமை விலங்கு உடையும் வரை சகல கதவுகளும் தட்டப்படும் என்பதையும் வதை முகாம்களின் இரும்புப்பிடியில் இருந்து சொந்த நிலத்தில் கடைசித் தமிழனை குடியமர்த்தும் வரை திறப்பு போராட்டம் தொடரும் என பிரித்தானிய தமிழர் பேரவை உறுதி எடுக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

unlock_camps.jpg

Edited by senthil5000

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.