Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துகிறது காணொலி: மனித உரிமைகள் காப்பகம்

Featured Replies

அத்துடன் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அது கேட்டுள்ளது.

தமிழர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்படும் காணொலிக் காட்சிகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து மனித உரிமைகள் காப்பகம் ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

இது தொடர்பில் காப்பகம் விடுத்த அறிக்கை விவரம் வருமாறு:

இலங்கை போரின்போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய போர்க் குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, ஊடகங்களில் வெளியிடப்பட்ட கைதிகள் சிலரை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் காப்பகம் தெரிவித்துள்ளது.

ஆடைகள் களையப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு நிலத்தில் இருத்தப்பட்ட இரு ஆண்கள் சிறிலங்கா படையினரின் சீருடையில் காணப்படுபவர்களால் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் மிக நெருக்கமாக நின்று சுட்டுக்கொல்லப்படுவதை அந்தக் காணொலிக் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

அதற்கு அருகிலேயே வேறு எட்டு உடலங்களும் கிடக்கின்றன. ஒன்று தவிர்ந்த மற்றைய எல்லாவற்றிலும் ஆடைகள் களையப்பட்டுள்ளன. பல்லின குழுக்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய, ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் கருத்துப்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சிறிலங்கா தரைப்படையைச் சேர்ந்த ஒருவரால் அவரது செல்லிடப்பேசி மூலம் இந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தக் காணொலியின் நம்பக்கத் தன்மையை மனித உரிமைகள் காப்பகம் இன்னும் உறுதிப்படுத்தாத போதும், அதன் நம்பகத் தன்மையைச் சீர்குலைக்கக் கூடிய எதனையும் அக்காணொலியில் காணவில்லை என சுயாதீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒப்பீட்டளவில் பார்க்கையில், கைதிகள் படுகொலை செய்யப்பட்டதான இந்தச் சம்பவம் 1949 ஜெனீவா பிரகடனத்தின் பிரிவு 3 இற்கு முற்றிலும் முரணானது என்பதுடன் போர்க் குற்றமும் ஆகும்.

அந்த இரத்தம், கண்கள் கட்டப்பட்ட நிலை, சேறுபடிந்த இந்த அட்டூழியம் என்பன, குற்றங்கள் ஏதுமின்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முன்னெடுக்கப்பட்டது என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவிக்கும் கருத்தை அர்த்தமற்றதாக்குகின்றது - என்றார் ஸ்டீவ் கிரவ்சோ. இவர் மனித உரிமைகள் காப்பகத்தின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இயக்குநர்.

கடந்த ஒரு வருட கால மோதல்களின் போது நிகழ்ந்த இந்தச் சம்பவம் மற்றும் ஏனைய போர்க் குற்றங்கள் குறித்த ஆழமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனைத்துலக விசாரணை தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த மே மாதத்தில் முடிவடைந்த, 25 ஆண்டு கால நீண்ட உள்நாட்டுப் போரின் போது அரச படையினராலும் விடுதலைப் புலிகளாலும் எண்ணுக்கணக்கற்ற போர்ச் சட்ட மீறல்கள் புரியப்பட்டுள்ளன என்பதை மனித உரிமைகள் காப்பகம் அறிக்கைப்படுத்தியிருக்கிறத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.