Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி..

Featured Replies

அனைவரையும் மீண்டும் ஓர் நூல் விமர்சனத்தில் சந்திப்பது மகிழ்ச்சி,

அதிகம் யோசிக்கவேண்டாம்.. மேலுள்ள 'புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி..' என்கின்ற தலைப்பு 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' எனப்படும் பெயரில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்ட நாவலில் வருகின்ற என்னைக்கவர்ந்த ஓர் வசனத்தின் ஒரு பகுதி.

நான் கடந்தமாதம் வடலி வலைத்தளம் ஊடாக வாங்கிய மேற்குறிப்பிட்ட நாவல் நீண்டபயணம் செய்து அண்மையில் வீடுவந்து சேர்ந்தது. கடந்த இரண்டு நாட்களில் நாவலை முழுமையாக படித்து முடித்தேன். முதலில், இந்த நாவலின் ஆசிரியர் பாலச்சந்திரன் அவர்களுக்கும், நாவலை வெளியிட்ட வடலி பதிப்பகத்திற்கும் எனது நன்றிகளும், பாராட்டுக்களும்.

இனி, கரையைத்தேடும் கட்டுமரங்கள் பற்றிய எனது எண்ணப்பகிர்வுகள் இங்கே விரிகின்றன:

IMG3376-1252385506.jpg

எனக்குள் ஏற்பட்ட அனுபவங்கள்:

நாவலை வாசித்துக்கொண்டு இருந்தபோது.. இடையிடையே நூலின் பின்மட்டையில் இருக்கின்ற பாலச்சந்திரன் அவர்களின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டேன். இதுவரை காலமும் அறிந்திராத ஓர் பாலச்சந்திரனை நான் அப்போது உணர்ந்துகொண்டேன், தரிசித்துக்கொண்டேன். இது சும்மா ஓர் கதை என்பதைவிட... வாழ்க்கை என்பதாகி.. எத்தனையோ பல சிந்தனைகளை கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் எனக்குள் விதைத்துவிட்டு சென்று இருக்கின்றது. நாவலை வாசித்துக்கொண்டு சென்றபோது சில இடங்களில் உண்மையில் எனக்கு அழுகை வந்தது, ஆத்திரமும் வந்தது.

நாவலின் விசேடதன்மை:

கதாசிரியர் இரு இடங்களில் சிறுதவறு செய்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏன் என்றால் கமல், சிறீதேவி, எம்.ஜி.ஆர் பற்றிய விடயங்களை புகுத்தி.. ஏறக்குறைய இத்தனையாம் ஆண்டில் நடைபெற்ற கதை என்கின்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டார். அவை தவிர்க்கப்பட்டு இருந்தால்.. மறுபுறத்தில் இந்தக்கதை ஏறக்குறைய 1960 அல்லது அதற்கும் முற்பட்ட காலம் தொடக்கம் 1985வரை என்கின்ற நீண்டகாலப் பகுதியினுள் நடைபெற்று இருக்கக்கூடிய கதை என்று வாசிப்பவர்களால் உணரக்கூடியதாக இருக்கும் என்று சொல்லத்தோன்றுகின்றது. இங்கு நாவலில் நான் கண்டவிடேச தன்மையாக கூறக்கூடியது என்ன என்றால்.. இதுவரை எங்களுக்கு தெரிந்திராத ஓர் தாயகத்தை, தாயகத்து வாழ்க்கையை கதாசிரியர் கண்முன்கொண்டுவந்து காட்டி இருக்கின்றார்.

கதைக்கரு, சொல்லவருகின்ற செய்தி:

ஆடம்பரமான குளிர்பானங்களின் மோகத்தில் அலையக்கூடியவர்களுக்கு கதாசிரியர் தண்ணீர்மீது தாகம் உருவாகும்படி செய்து அதன் மகிமையை உணர்த்தி இருக்கின்றார். அதாவது, வாழ்க்கைக்கு தேவையானது எது? அன்பு? பண்பு? அழகு? இளமை? பணம்? படிப்பு? பதவி? நம்பிக்கை? .. வாழ்க்கை எதன் அடிப்படையில் வாழப்படுகின்றது? வாழ்தல் என்பது என்ன?... எல்லாவற்றுக்குமான விடைகளாக.. கதையின் கரு பின்னப்பட்டு இருக்கின்றது. இந்த நாவலை வெறும் நாவலாக பார்க்காது ஓர் ஆவணப்பதிவு என்றும் கூறலாமோ என்று நினைக்கின்றேன். ஏனெனில், இறந்தகால நிகழ்வுகளின் கால்தடங்களை கதாசிரியர் கடுகளவும் பிசையாது அப்படியே கதையில் அச்சேற்றி இருப்பது தெரிகின்றது.

IMG3376-1252385596.jpg

கதை சொல்லப்படும் பாங்கு:

கதையின் சுமார் 85% யதார்த்தமாக இருந்தது என்று சொல்லலாம். ஏதோ காரணத்துக்காகவோ அல்லது வழமையான தமிழ்சினிமாவின் தாக்கம் காரணமாகவோ என்னமோ சுமார் 15% பகுதி செயற்கைத்தனமாக இருந்தது என்றும் சொல்லித்தான் ஆகவேண்டும். சிலவேளைகளில் நாவல் என்றுவரும்போது.... தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் போல சில அம்சங்களை தவிர்க்கமுடியாத தன்மை, மற்றும், நாவலுக்கு உரித்தான குணங்களை, தனித்துவங்களை காட்டியாகவேண்டிய அழுத்தம் நாவலாசிரியர்களுக்கு ஏற்படுகின்றதோ என்னமோ..! ஆரம்பம் முதல் இறுதிவரை.. கதை சோர்வில்லாமல் சென்றது என்பதோடு மட்டும் அல்லாது கதை நிறைவடைந்தபின்னரும் பல விவாதங்களை, ஆராய்ச்சிகளை 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' எனது மனதினுள் விதைத்துவிட்டு சென்று இருக்கின்றது.

மொழித்திறன்:

இத்தனை விதம், விதமான சொற்களை இவர் எப்படி லாவகமாகவும், சாதூரியமாகவும் நாவலில் பிரயோகித்து இருக்கின்றார் என்று என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. நீண்டதோர் தாயகத்து சொற்களஞ்சியம் ஒன்றை நாவலில் காணமுடிகின்றது. எத்தனையோ வருடங்களின்பின் தாயகத்தில் நான் முன்பு இருந்தபோது பயன்படுத்திய ஏராளம் சொற்களை நாவலை படித்தபோது என்னால் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள முடிந்தது. இந்த நாவல் ஓர் ஆவணப்பதிவாக கொள்ளப்படமுடியுமோ என்று நான் எண்ணுவதற்கு இங்குள்ள சொற்பதங்கள், சொற்கள் அல்லது கலைச்சொற்களும் பிரதான காரணம் எனக்கூறலாம்.

பேச்சுவழக்கு:

நாவல் உயிர்ப்பாக இருப்பதற்கு, இதை நான் வெறும் நாவல் என்று செயற்கைத்தனமாக பிரித்துப்பார்த்து உணரமுடியாதபடி இருப்பதற்கு கதையில் வரும் பாத்திரங்களின் பேச்சுவழக்கு முக்கிய பங்கை வகித்து இருக்கின்றது. பல பாத்திரங்கள் பேசும்போது ஒன்றைக்கூறி... இறுதியில்... 'அ' என்று முடிப்பார்கள். கதையில் இதை ஒவ்வொரு தடவையும் இரசிக்கக்கூடியதாக இருந்தது.

IMG3376-1252385556.jpg

நாவலின் பெறுமதி:

நான் வடலி வலைத்தளம் ஊடாக 17.90 அமெரிக்க டாலர்களுக்கு புத்தகத்தை பெற்று இருந்தேன். ஆனால்.. புத்தகத்தின் பெறுமதி அதைவிடப் பல்லாயிரம் மடங்குகள் பெரியது என்பதை இப்போது உணர்ந்துகொள்கின்றேன். எங்கள் மனித வாழ்வியலை திரும்பிப்பார்த்து சிந்திக்கவைக்கின்ற, தாயகத்திற்கு விடுமுறையில் சென்று வருகின்ற அனுபவத்தை தருகின்ற 'கரையைத் தேடும் கட்டு மரங்கள்' நாவலை நாவலாக பார்க்கமுடியவில்லை, வாழ்வாகவே உணர்கின்றேன்.

நூல் அமைப்பு:

நூல் வடிவமைப்பு, அச்சு, எழுத்துக்களின் ஒழுங்கமைப்பு என அனைத்து அம்சங்களும் திருப்திகரமாக இருக்கின்றன. நாற்பத்து மூன்று அத்தியாயங்கள் உள்ள இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் நேர்த்தியாக வகுக்கப்பட்டு உள்ளதோடு, கடல் அலைகளாக ஒன்றுடன் ஒன்று சீராக தொடர்புபட்டு செல்கின்றன. ISBN: 9788190840507

நாவலில் இருந்து:

உங்கள் பார்வைக்காக நாவலில் என்னைக் கவர்ந்த பலவற்றில் எழுந்தமானமாக பொறுக்கப்பட்ட சில நறுக்கல்கள்:

***

மாரியாம்பிள்ளை அட்டகாசமாக சிரித்தவாறே,

'நீங்கள் எல்லாரும்தான் ஏதேதோ கதைச்சீங்களே.. என்ரை நெத்தலி அப்பாவை விட்டிட்டு இருக்குமே..'

என்ற சின்னமகளை அருகில் இருத்தி, தானும் சாப்பிட்டு, மகளுக்கும் 'தீத்தி', இடையிடையே தன் மூத்தமகளின் சமையல் திறனையும் பாராட்டி, மூத்தவன் மனுவலைத் திட்டித்தீர்த்து, சாப்பிடுதலே ஒரு நீண்ட கிரியையாக, ஒருவாறு ஒப்பேறியது.

***

'அப்படியானால் ஏன் நீ என்னுடன் நெருங்கிப் பழகினனீ... நம்பிக்கையைத் தந்தனீ...?' என்று அவன் வெடித்து சிதறி வினாத்தொடுக்கவில்லை.

அப்படிக் கேட்டிருந்தாலும்... ' அண்ணை போலை நினைச்சு உங்களோட பழகினனான்.. நீங்கள் இப்படி நினைப்பீங்களெண்டு...'

இந்த ரீதியில் பதில் வருமென்று அவனுக்கு, அதிகம் படிக்காவிட்டாலும் தெரிந்தே இருந்தது.

***

காதல் என்பது புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி, பலசாலியை உருக்குலைத்து, இப்படியெல்லாம் 'ரசவாதவித்தை' இயற்றும் வல்லமை வாய்ந்ததுதானே!

***

பாலினால், வயதினால், சாதியினால், குலத்தினால், கோத்திரத்தினால், மதத்தினால், சுயநலத்தினால், அன்பினால், நட்பினால்.. உறவுகளினால் என இவ்வாறு பல்வேறு வகைகளில் தனியாகவும், சோடிகளாகவும், குழுக்களாகவும் நாங்கள் கட்டப்பட்டு கட்டுமரங்களாக இருக்கின்றோம். கரையைச் சென்றடைகின்ற கனவுகளோடு.. நன்றி! வணக்கம்! மீண்டும் சந்திப்போம்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி கலைஞன்,

உங்கள் விமர்சனத்தை இன்று பிற்பகல்தான் வாசித்தேன். நீண்ட விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் விமர்சனம் எனக்கு உடன்பாடா.னதே. சில சந்தோசங்களை மனம் எளிதில் நம்புவதில்லை. அதனால் பலமுறை உங்கள் விமர்சனத்தைப் படித்தேன்.

விமர்சனத்துக்கு மேலாக உங்கள்மனத்தின் மென்மையும், மேன்மையும் எனக்கு தெரிகிறது. நன்றி

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்.

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

  • தொடங்கியவர்

நன்றி ஐயா உங்கள் உணர்வுப் பகிர்வுக்கு..

சாவிகள் பல இருக்கலாம். ஆனால்.. தனிப்பட்ட ஒவ்வொரு பூட்டுக்களையும் திறப்பதற்கு.. குறிப்பிட்ட ஓர் சாவியால்தான் முடியும்.

சிலர் கதவுகளை பூட்டிவைத்திருக்கவே விரும்பலாம். சிலர் கதவுகளை திறந்துபார்ப்பதில் அக்கறை இல்லாதவர்களாக இருக்கலாம். சிலர் கதவுகள் திறக்கப்படுவதை எதிர்ப்பவர்களாக இருக்கலாம், அல்லது பயப்படுபவர்களாகக் கூட இருக்கலாம்.

எனக்கு என்னமோ.. எனக்குள் அடைக்கப்பட்டுள்ள பல கதவுகளில் ஒரு கதவை திறப்பதற்கு நீங்கள் உருவாக்கிய சாவியாகிய கடலைத்தேடும் கட்டுமரங்கள் உதவி இருக்கின்றது.

நீங்கள் உருவாக்கிய இந்த விஷேட சாவி மற்றவர்களுக்கு பயன்படுமா என்று எனக்கு தெரியாது. அவர்களினுள் அடைந்துபோயுள்ள... திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ள பல கதவுகளின் ஏதாவது ஒரு பூட்டை திறப்பதற்கு உங்கள் சாவி பயன்படுமா என்று எனக்கு தெரியாது. ஆனால்.. எனக்குள் இருந்த ஓர் கதவு திறக்கப்பட்டு இருக்கிறது.

தலையிடியும், காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்வார்கள். தனக்கு தனக்கு என்று வராதவரை எல்லாமே விமர்சனங்களாகவே இருக்கும்.

அடுத்தவன் வீட்டில் ஒருவிடயம் நடைபெறும்போது அது எங்களுக்கு ஓர் கதையாகவோ.. பகிடியாகவோ.. பார்த்துப் பரிதாபப்படும் ஓர் விடயமாகவோ இருக்கலாம். ஆனால்.. எங்கள் வீட்டினுள் அதேவிடயம் நுழைந்துவிட்டால்.. நாங்கள் உசாராகி விடுவோம் இல்லையா..?

இந்த நாவலிலும்.. அவ்வாறே.. நான் பொழுதுபோக்காக வெறும் கதையை பார்க்கவில்லை. வாழ்க்கையை பார்க்கின்றேன். எங்கள் மனித வாழ்வு பற்றிய எத்தனையோ பல எண்ணங்கள் சுழன்று அடித்துச் செல்கின்றன.

நாங்கள் மிகவும் செயற்கைத்தனமான ஓர் உலகத்திலே இருக்கின்றோம். எங்கள் ஒவ்வொரு அசைவுகளுமே போலியானதாக இருக்கின்றன. தன்தன் மனச்சாட்சி என்பதைவிட பிறர் அபிப்பிராயங்களிற்கு கீழ்ப்படிந்த செயல்களே வாழ்கையை வழிநடாத்துகின்றன. எங்களுக்காக வாழுகின்றோம் என்று பெயரளவில் சொன்னாலும்.. உண்மையில் வாழ்தல் என்பது மற்றவர்களை திருப்திப்படுத்தும் அடிப்படையிலேயே நடைபெறுகின்றது..

இவ்வாறான சூழலில்.. கரையைத்தேடும் கட்டுமரங்கள் எப்படி எங்கள் வாழ்வுடன் தொடர்புபட்டு செல்கின்றது என்பதை என்னால் இப்போது கூறமுடியாது. பிறிதொருபொழுது சமயம், சூழ்நிலை வாய்த்தால் கூறுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஐயா உங்கள் உணர்வுப் பகிர்வுக்கு..

சாவிகள் பல இருக்கலாம். ஆனால்.. தனிப்பட்ட ஒவ்வொரு பூட்டுக்களையும் திறப்பதற்கு.. குறிப்பிட்ட ஓர் சாவியால்தான் முடியும்.

சிலர் கதவுகளை பூட்டிவைத்திருக்கவே விரும்பலாம். சிலர் கதவுகளை திறந்துபார்ப்பதில் அக்கறை இல்லாதவர்களாக இருக்கலாம். சிலர் கதவுகள் திறக்கப்படுவதை எதிர்ப்பவர்களாக இருக்கலாம், அல்லது பயப்படுபவர்களாகக் கூட இருக்கலாம்.

எனக்கு என்னமோ.. எனக்குள் அடைக்கப்பட்டுள்ள பல கதவுகளில் ஒரு கதவை திறப்பதற்கு நீங்கள் உருவாக்கிய சாவியாகிய கடலைத்தேடும் கட்டுமரங்கள் உதவி இருக்கின்றது.

தம்பி கலைஞன்,

உங்கள் கருத்துக்கு நன்றி. எல்லோருடைய மளக்கதவுகளையும் தட்டுவதற்கு ஒரு எழுத்தாளன் ஆசைப்படலாம். அது பயன் அளிக்காமல் போகலாம். எங்கோ ஒரு மனக்கதவு திறப்பதற்கு காரணமாக அல்லது உதவியாக இருந்தாலே போதுமானது என்று நினைக்கிறேன். நாம் வாழ்ந்த ஒரு காலத்தை எழுத்தில் பதிவு செய்யும்போது மீண்டும் அக்காலத்தில் வாழும் அனுபவத்தைப்பெறுகிறோம். என்று முன்னுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதுவே என் நோக்கமும். கூட.

நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

நன்றி ஐயா. காலம் வசப்படுமாய் இருந்தால் தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆவலாய் இருக்கின்றோம். வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க ஆர்வத்துடன் இருக்கின்றோம்.

  • 2 weeks later...

எனது தந்தையாரும் கரையை தேடும் கட்டுமரங்கள் நாவலை வாசித்து இருந்தார். அவரிடம் நாவல் எப்படி இருந்தது என்று கேட்டன்.

தனக்கு எழுத்துக்கள், வசனங்கள் பிடிக்கவில்லை என்று சொன்னார். இது எந்தக்காலத்தில நடந்த கதையாக நீங்கள் உணருகீறீங்கள் என்று கேட்டபோது 1930 சொச்சம் பழசுமாதிரி இருப்பதாக சொன்னார். அத்துடன் கதையில் கூறப்படும் விசயங்கள் இப்படி நடப்பது வழமைதான் என்றும் சொன்னார்.

இரண்டு தலைமுறைகளுக்கு இடையில் எனக்கும் எனது தந்தையாருக்கும் இடையில் உணர்வுகளில் நாவல் சம்மந்தமான விமர்சனத்தில் பாரிய வேறுபாடு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன்பிறகு நான் அவருக்கு கதை ஏன் எனக்கு பிடித்தது... மற்றும் நாவல் சம்மந்தமான பல விசயங்கள் பற்றி அவருடன் உரையாடினேன்.

கலைஞன் தமிழ் கலைஞன் என்பவர் யார்? நீங்கள்தானா?

இதே விமர்சனம் தமிழ் கலைஞன் என்ற பெயரில் வேறொரு

இணையத்தளத்தில் கண்டேன் ஆதலால்தான் கேட்கிறேன்

தமிழ் கலைஞன் எனும் பெயரில் அடியேன் முகநூலில் இருக்கின்றேன். சோழியன் மாமா அந்தப்பெயரில் தமிழமுதத்தில் இணைத்து இருந்தார். இன்று கரையைத் தேடும் கட்டுமரங்கள் வெளியீட்டுவிழா விளம்பரத்தை முகநூலில் கண்டேன். பார்க்காதவர்களிற்காக..

தமிழ் கலைஞன் எனும் பெயரில் அடியேன் முகநூலில் இருக்கின்றேன். சோழியன் மாமா அந்தப்பெயரில் தமிழமுதத்தில் இணைத்து இருந்தார். இன்று கரையைத் தேடும் கட்டுமரங்கள் வெளியீட்டுவிழா விளம்பரத்தை முகநூலில் கண்டேன். பார்க்காதவர்களிற்காக..

கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றியும், அவரது நாவலான "கரையைத்தெடும் கட்டுமரங்கள்" பற்றியும் கரவைக்குரல் இவ்வாறுகூறுகிறது.

http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_27.html

கரையைத் தேடும் கட்டுமரங்கள் புத்தக வெளியீட்டு விழா கனடாவில் நாளை சனிக்கிழமை மாலை 5.30இற்கு இடம்பெறுகின்றது என்று அறியமுடிகின்றது. யாழ் கள உறவுகளும் வெளியீட்டு விழாவில் கலந்து எங்கள் கலைஞருக்கு ஆதரவு கொடுக்கலாம்.

இடம்: Agincourt Community Centre

31,Glen Watford Drive,

Scarborough,Ontario

Midland & Sheppard(On Sheppard)

வடலி வெளியீட்டகத்தின் இதர வெளியீடுகளையும் நாளை அங்கு பெற்றுக்கொள்ளலாம் என்றும் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிளை இந்த புத்தகம்தானே..?

kamal%20with%20my%20book.jpg

இந்த இணைப்பில் உள்ளது

http://1.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/SsM5...ith+my+book.jpg

Edited by காவடி

  • தொடங்கியவர்

பிரதர், உங்கடை கேள்வி.. உது ஏதோ டபிள் மீனிங்கில கேட்பது போல இருக்கிது. கமலகாசன் அவர்கள் தெனாலி படத்தில் நடிக்கும்போது ஈழத்து தமிழில் கதைப்பதற்கு கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் ஒலிப்பதிவுகள் மூலமே பயிற்சி பெற்றதாக அப்துல் ஹமீத் அவர்கள் நூல் முகவுரையில் குறிப்பிட்டு இருந்தார். எனவே கமலகாசன் கே.எஸ் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லைத்தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆச்சரியமேதும் இல்லையே.. நானும் அந்தபடத்தை இங்கு போடுகிற எண்ணத்திலேயே கேட்டேன். நன்றி

  • தொடங்கியவர்

நன்றி,

IMG3376-1254587881.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி,

எல்லோருக்கும் வணக்கம்.

எனது நாவலான " கரையைத்தேடும் கட்டுமரங்கள்" வெணியீட்டு விழா சென்ற வாரத்தில் நன்றாகவே நடந்தேறியது.

அதே நாள் இன்னும் மூன்று புத்தகவெளியீட்டு விழாக்கள் அண்மையிலேயே நடந்தன. பார்வையாளர்கள் திணறிப்போய்விட்டார்கள். வடலிவெளியீடுகள் (இளங்கவியின் கவிதைநூல் உட்பட)விற்பனைக்கு வைக்கப்பட்டன.

கள உறவு கவிஞனின்விமர்சனத்தைப்பற்றி என்னுரையில் குறிப்பிட்டேன்.. அவர்வந்தாரோ தெரியவில்லை. வல்வைசாகிறா வந்திருந்தார். அவர் கருத்தை அறிய விருப்பமாக இருக்கிறது.படங்கள் முடியுமானால் இணைக்கிறேன். நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலச்சந்திரன் அண்ணாவுக்கு

கனடாவில் உங்கள் புத்தக வெளியீட்டு விழா நடக்கப்போவதை நீங்கள் பல வாரங்களுக்கு முதல் யாழில் அறியத்தந்ததை தெரிந்திருந்தாலும் நீங்கள் எனது புத்தகமும் அங்கே கண்காட்சிக்கு வைக்கப்பட்டதைச் சொன்ன பிற்பாடுதான் எனக்குத் தெரியும் அண்ணா.... மிக்க சந்தோசம் அண்ணா...

உங்களுக்கு தனிமடல் போட்டுள்ளேன்.... நான் அங்கே வரமுடியாத காரணத்தையும் உங்களுக்குத் தெரிவித்துளேன்.... நீங்கள் எவ்வளவு பெரிய அத்துடன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்... ஆனால் எனக்கோ இதுதான் எனது முதல் கவிதைத் தொகுப்பு... உங்களது புத்தக வெளியீட்டு விழாவில் எனது புத்தகமும் வைக்கப்பட்டதுவே எனக்குப் பெருமைதானே அண்ணா.... தகவல் அறியத்தந்ததற்கு மிக்க நன்றிகள்....

எல்லோருக்கும் வணக்கம்.

எனது நாவலான " கரையைத்தேடும் கட்டுமரங்கள்" வெணியீட்டு விழா சென்ற வாரத்தில் நன்றாகவே நடந்தேறியது.

அதே நாள் இன்னும் மூன்று புத்தகவெளியீட்டு விழாக்கள் அண்மையிலேயே நடந்தன. பார்வையாளர்கள் திணறிப்போய்விட்டார்கள். வடலிவெளியீடுகள் (இளங்கவியின் கவிதைநூல் உட்பட)விற்பனைக்கு வைக்கப்பட்டன. கள உறவு கவிஞனின்விமர்சனத்தைப்பற்றி என்னுரையில் குறிப்பிட்டேன்.. அவர்வந்தாரோ தெரியவில்லை. வல்வைசாகிறா வந்திருந்தார். அவர் கருத்தை அறிய விருப்பமாக இருக்கிறது.படங்கள் முடியுமானால் இணைக்கிறேன். நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

சகாரா அக்கா தான் நிகழ்வில் கலந்துகொண்டதாய் சொல்லி இருந்தா. சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் என்னால் வருகை தரமுடியவில்லை. சமயம் வரும்போது உங்களை சந்திக்கின்றேன். நிகழ்வின் காணொளி இருந்தால் இணைத்துவிடுங்கள். நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிகழ்வின் காணொளி இருந்தால் இணைத்துவிடுங்கள். நன்றி!

கலைஞன்

சாதாரணமாக படங்களை இணைப்பதுகூட எனக்கு சிரமமாகவிருக்கிறது. உங்கள் ஈமெயிலுக்கு படங்களை அனுப்புகிறேன். இணைக்கமுடியுமா?

இளங்கவி.

உங்கள் ஈமெயிலுக்கு நன்றி. நேரடியாக பதில் அனுப்புகிறேன்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

post-7026-12555667774776_thumb.jpg

post-7026-12555673362104_thumb.jpg

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

நன்றி ஐயா, உங்கள் படங்கள் மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றன. நான் அவற்றை இங்கு இணைக்கின்றேன். அத்துடன், புகைப்படத் தொகுப்பு கரும்பு வலைத்தளத்திலும் இணைக்கப்பட்டு இருக்கின்றன. மேலதிக படங்களை அனுப்பி வைத்தால் அவற்றையும் இணைக்கலாம்.

படத்தில் உங்களுக்கு அருகில் மாலையுடன் நிற்கின்ற நீலநிற புடவை கட்டி இருக்கற அம்மாவை எங்கையோ கண்டமாதிரி இருக்கிது. :lol:

கரும்பில் படத்தொகுப்பு:http://karumpu.com/archives/380

கரும்பில் Slideshow: http://karumpu.com/archives/380?show=slide

digi-ks-karai-124.jpg

digi-ks-karai-115.jpg

digi-ks-karai-080.jpg

digi-ks-karai-077.jpg

digi-ks-karai-076.jpg

digi-ks-karai-074.jpg

digi-ks-karai-073.jpg

digi-ks-karai-070.jpg

மிகுதி:

digi-ks-karai-065.jpg

digi-ks-karai-062.jpg

Edited by மாப்பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

கரையைத் தேடும் கட்டுமரங்கள்' புத்தக வெளியிடு மற்றும் படங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

படத்தில் இருப்பவர்களைத்தான் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகுதி:

கலைஞன்,

படங்களை அழகாக இணைத்திருக்கிறீர்கள். நன்றி. படத்தில் உள்ளவர்களின் விபரம் தரவில்லை. தருகிறேன். சேர்க்கமுடியுமானால் சேர்த்து விடுங்கள்.

மற்றது எனக்கு அருகில் நிற்கும் நீலப்புடவைகட்டிய அம்மா, திருமதி பாலச்சந்திரன்தான்.

நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரையைத் தேடும் கட்டுமரங்கள்' புத்தக வெளியிடு மற்றும் படங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

படத்தில் இருப்பவர்களைத்தான் தெரியவில்லை.

சகோதரி,

உதவிசெய்யத்தான் கலைஞன் இருக்கிறாரே. விபரம் தருவோம்.. நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

உங்கள் தகவல்களிற்கு நன்றி ஐயா. கரும்பு படத்தொகுப்பில் விபரங்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு தனிப்படத்தையும் சொடுக்கும்போது அவற்றை பார்க்கலாம். உங்கள் தாயாரையும் படத்தில் கண்டது சந்தோசம்.

கறுப்பி, சகாரா அக்காவும் ஒரு படத்தில சின்னதாய் இருக்கறா. யாராவது முடியுமானால் கண்டுபிடிச்சு சொல்லுங்கோ.

விபரங்களுடன் புகைப்படதொகுப்பு: http://karumpu.com/archives/380

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் தகவல்களிற்கு நன்றி ஐயா. கரும்பு படத்தொகுப்பில் விபரங்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு தனிப்படத்தையும் சொடுக்கும்போது அவற்றை பார்க்கலாம். உங்கள் தாயாரையும் படத்தில் கண்டது சந்தோசம்.

கறுப்பி, சகாரா அக்காவும் ஒரு படத்தில சின்னதாய் இருக்கறா. யாராவது முடியுமானால் கண்டுபிடிச்சு சொல்லுங்கோ.

விபரங்களுடன் புகைப்படதொகுப்பு: http://karumpu.com/archives/380

நன்றி கலைஞன்,

சிரமம் தந்துவிட்டேன் போலிருக்கிறது.வல்வை சகாராவை படத்தில் கண்டுபிடிப்பவர்க்கு பரிசு கொடுப்போமா?

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.