Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரையப்பா விளையாட்டு அரங்கம் இந்திய உதவியுடன் அனைத்துலக தரத்துக்கு உயரும்

Featured Replies

போர் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து இலங்கையின் வடபகுதியில் புனரமைப்புப் பணிகளுக்கு உதவிகளை வழங்க இந்தியா தயாராகி உள்ளது. ஏற்கனவே 500 கோடி இந்திய ரூபாவை இந்தப் புனரமைப்புப் பணிகளுக்கு என புதுடில்லி ஒதுக்கி இருந்தது. அதில் என்னென்ன பணிகளை மேற்கொள்வது என்பது தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் இந்த உதவிகள் விரைவாக வழங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கவென 2 ஆயிரத்து 600 தொன் கூரைத் தகடுகளை இந்தியா ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.

இன்னும் 2 ஆயிரத்து 600 தொன் கூரைத் தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. போரின் போது கூரைகள் சேதமான வீடுகளுக்கு அவற்றை மீளப்பொருத்த இவை பயன்படுத்தப்படும்.

வடக்கில் விவசாய நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இந்திய விவசாய ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று வடபகுதிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

விரைவில் வடக்கில் இரண்டு தொடருந்து பாதைகளை அமைப்பதற்கு இந்திய தொடருந்துத் துறை உதவிகளை வழங்க உள்ளது. அவற்றில் ஒரு பாதை தலைமன்னாரையும் மடுத் தேவாலயத்தையும் இணைப்பதாகவும் மற்றொன்று பளை மற்றும் ஓமந்தையை இணைப்பதாகவும் அமைக்கப்படும்.

இவை தவிர மற்றொரு பெரிய தொடருந்து திட்டம் ஒன்றும் இந்தியாவின் உதவியுடன் செயற்படுத்தப்படும் என புதுடில்லியில் அதிகாரிகள் ஊடகங்களிடம் கூறி உள்ளனர்.

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் தங்கி உள்ள புத்தளத்தில் தொழிற் பயிற்சிக் கூடம் ஒன்றும் இந்திய உதவியுடன் அமைக்கப்பட உள்ளது.

பேருந்துகள், பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், விவசாய உபகரணங்கள் என்பவற்றையும் இந்தியா வழங்கி உள்ளது. அத்துடன், வடக்கில் போரால் சேதமடைந்த கல்லூரிகளையும், சேதமடைந்த யாழ். பண்பாட்டு நிலையத்தையும் புனரமைப்பதற்கான முன்மொழிவுகளையும் இந்தியா வழங்கி உள்ளது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கம் இந்தியாவின் உதவியுடன் அனைத்துலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக மாற்றப்படும்.

வன்னிப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் மேலும் பல குழுக்களை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

புதினம்

கரவெட்டியில் மகேஸ்வரியின் பெயரிலும் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க பட போவதாக செய்தி!

  • கருத்துக்கள உறவுகள்

கரவெட்டியில் மகேஸ்வரியின் பெயரிலும் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க பட போவதாக செய்தி!

ஏதோ இப்படியாவது.. மேற்குலக தரத்துக்கு வடக்கு கிழக்கு உயர்ந்து என்றால்.. புலம்பெயர்ந்தவையின்ர தரத்துக்கு வந்திட்டு என்றால் அப்பவாவது அவை ஊர்.. தாயகம் என்று போவினம் எல்லோ..!

இப்ப யாருக்கு தமிழீழம் வேணும். எல்லாருக்கும் புலம்பெயர ஒரு நாடு இருந்தால் சரி. முதலில அந்த நிலையை மாற்றனும்.

அதற்கு தாயகத்தை மேற்குலக தரத்திற்கு உயர்த்திப் போட்டுத்தான் எனி போராட்டத்தை ஆரம்பிக்க வேணும். அப்பதான் புலம்பெயர்ந்தவையையும் அவையிட வாரிசுகளையும் களத்தில் பார்க்கலாம்..!

இல்ல அவை சொகுசா இருந்து கொண்டு தமிழீழக் கனவு கண்டு கொண்டு ஊரில் உள்ள சனங்களை மண்ணெண்ணை விளக்கில இருத்தி வைச்சிட்டு இவை.. மலிவான சாமான்களை வாங்கிக் கட்டிக்கொண்டு ஊருக்குப் போய்.. சோ காட்டிறதுதான் நடக்கும். அதிலும் ஊர் சனம்.. முன்னேறி இவைக்கு நிகரா வந்திட்டுதுகள் என்றால்.. எல்லாரும் சரி சமனாயிடுவினம்..!! வெட்டிப் பெருமை பேசுறதை விட்டிட்டு.. அப்பவாவது எல்லாரும் நாடு தேவை என்றதை உணர்ந்து செயற்பட முன்வரக் கூடும்..!

எதுஎப்படியோ குண்டுகளை வீசி அழிச்சவங்க தானே அதுகளை திருத்த வேணும். தர உயர்த்த வேணும். செய்யட்டன்.

யாழ்ப்பாணம்.. ஒரு சிங்கப்பூராவோ.. மலேசியாவாவோ.. ரொரண்டோவாவோ.. லண்டனாவோ.. ஒஸ்லோவாவோ வந்தால் அது எங்கட மக்களுக்குத்தானே நன்மை..! எனி இப்படித்தான் சிந்திக்க வேணும்..!

தக்கது பிழைக்கும் அல்லது மடியும் என்ற டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஊர் மக்கள் கடைப்பிடிக்கிறதுதான் அவை சிறப்போட வாழ வழிவகுக்கும். சும்மா தமிழீழம் என்றதை பிசாவும்.. மக்கில சிக்கினும் சிப்சும்.. சாப்பிட்டுக் கொண்டு பேசிறவை பேசிக் கொண்டிருக்கட்டும். ஊர் மக்கள் யாழ்ப்பாண வீதிகளில மட்டக்களப்பு வீதிகளில கேஎவ்சி.. மக்டொலாட்ஸ் வர வாழ வேணும். அதுதான் என்ர ஆசை..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.