Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படடிருப்பது இந்திய அரசுக்கு கேவலமாக இல்லையா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படடிருப்பது இந்திய அரசுக்கு கேவலமாக இல்லையா?

ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது போதாதென்று சர்வதேச எல்லையிலும், இந்திய கடல் எல்லையிலும் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களையும் சிங்கள கடற்படை அடித்து உதைத்து, நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வது இந்திய அரசுக்கு கேவலமல்லவா என்று வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து வைகோ பேசுகையில்,

தமிழர்களின் உரிமை காவு கொடுக்கப்படுகிறது. பல முனைகளில் இருந்து தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு மதிக்கவில்லை. மேலும் இந்திய மீனவர்களை பாதுகாக்க தவறி விட்டது.

மத்திய அரசை பொறுத்தவரை தமிழகத்திற்கு தொடர்ந்து தீங்கிழைத்து வருகிறது. ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க துணை போனது. இப்போது இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படை தாக்கி கொலை செய்வதற்கும் துணை போகிறது. இதை பார்க்கும் போது மத்திய அரசு என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு நாட்டுப் பிரஜையை இன்னொரு நாடு தாக்கினால் அந்த நாடு, தன்னுடைய நாட்டு பிரஜையை தாக்கிய நாட்டை எச்சரிக்கை செய்யும்; கண்டனம் தெரிவிக்கும்; பின்னர் அந்த நாட்டுடனான ராஜீய உறவையே துண்டித்துக்கொள்ளும்.

ஆனால் ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தினமும் தாக்கப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இது இந்திய அரசுக்கு கேவலமாக இல்லையா?கேட்டால் நம்முடைய மீனவர்கள் கடல் எல்லையை தாண்டிச் சென்றதால் தாக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

சர்வதேச எல்லையிலும், இந்திய கடல் எல்லையிலும் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களையே சிங்கள கடற்படை அடித்து உதைத்து, நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வது கேவலமல்லவா?

இந்த கொடுமைகளை கண்டிக்க இந்திய அரசுக்கு திராணியில்லை. கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் தமிழக மீனவர்கள் மீது தினமும் தாக்குதல் நடக்கிறது. இதனை தமிழக மீனவர்கள் அப்படியே பொறுத்துக் கொண்டு இருக்கமாட்டார்கள்.

இந்த விஷயத்தில் மத்திய அரசின் போக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கே தீங்காக அமையும். சிறிலங்கா அரசு அங்குள்ள தமிழர்களை அழிப்பதற்கு இந்திய அரசு தந்த ஆயுதங்கள் தான் பயன்பட்டன.

அவர்களுக்கு துணையாக சீனாவும், பாகிஸ்தானும் செயல்பட்டது. இன்று அந்த நாடுகள் சிறிலங்காவிலே தளம் அமைத்துவிட்டன. அண்மையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்கள கடற்படையில் சீனர்களும் இருந்து இருக்கிறார்கள். இது இந்தியாவுக்கு பேராபத்தை விளைவிக்கும்.

இதனால் எதிர்காலத்தில் தென்பகுதியில் இருந்தும் இந்தியாவுக்கு ஒரு அபாயம் உருவாகி வருகிறது என்பதை மத்திய அரசு உணரத் தவறிவிட்டது.

மும்பையில் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை கண்டு இந்தியாவே கொதித்தது. பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று மத்திய அரசு எச்சரித்தது. அதில் எந்த தவறும் இல்லை.

அதே போல சிறிலங்காவின் அரசாங்க படையே தமிழக மீனவர்கள் மீது தினமும் தாக்குதல் நடத்தி வருகிறதே. இதற்கு மத்திய அரசின் நடவடிக்கை என்ன?

இந்த செயலை பொறுத்தவரை சிங்களர்களின் கைக்கூலி அரசாகவே மத்தியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் அரசு செயல்பட்டு வருகிறது.இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தது போதாதென்று இங்குள்ள தமிழர்களையும் கொல்வதற்கு சிங்கள ராஜபக்சே அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் துணை நிற்கிறது.

இதன் விளைவாக இந்திய ஒருமை பாட்டுக்கே எதிர்காலத்தில் ஆபத்து நேரலாம். இந்திய இறையாண்மைக்கு நீங்களே ஆபத்தை தேடிக் கொள்ளாதீர்கள்.எனவே தான் மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகளை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்றார்.

http://www.meenagam.org/?p=12034

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைவாசிகளுக்கே கேவலமாப் படவில்லையாம்..! பிறகெப்படி இந்திய அரசுக்கு இருக்கும்? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.