Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல்

புதுடில்லி: டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், அத்துமீறி நுழைந்த புதிய தமிழகம் கட்சியினர் அங்கு கல்வீசி தாக்கியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.

தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியினர், நேற்று டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இதன்பின், மதியம் 2.30 அளவில், டில்லி சாணக் கியபுரி பகுதியில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்திற்கு வாகனங்களில் வந்த அந்தக் கட்சியினரில் ஒரு பிரிவினர், அங்கு கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத் துச் சேதப்படுத்தினர்.

அப்போது இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இவர்கள் நடத்திய கல்வீச்சில் தூதரக அலுவலகத்தின் கண்ணாடிகள் சில சேதம் அடைந்தன. ஒரு சில நிமிடங்களில், தாங்கள் வந்த வாகனங்களில் ஏறிச் சென்றனர். அதற்குப் பின் தான் போலீசார் வந்தனர். தூதரக அலுவலகத்திற்குள் புகுந்து, தன் கட்சியினர் தாக்குதல் நடத்திய போது, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, வெளியே ஒரு காரில் இருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சில தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவம் துரதிருஷ்டமானது. அதற் காக, கடும் வருத்தம் தெரிவிக்கிறோம்' என, வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார். "போலீசார் அங்கு குவிக் கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.

நன்றி: தினமலர்

Edited by Danguvaar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

del1.jpg

del2.jpg

படங்கள்: தினத்தந்தி

  • கருத்துக்கள உறவுகள்

"தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவம் துரதிருஷ்டமானது. அதற் காக, கடும் வருத்தம் தெரிவிக்கிறோம்' என, வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார். "போலீசார் அங்கு குவிக் கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.

தமிழனாய் இருந்து தமிழனை எதிர்க்கும் கோஷ்டிகளுக்கு இந்த செய்தி இனிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்பக்கோரி புதிய தமிழகம், தவ்ஹீத் ஜமா-அத் தில்லியில் ஆர்ப்பாட்டம் சிறீலங்கா தூதரகம் மீது தாக்குதல்

ஈழத் தமிழர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப ஏற்பாடு செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமா-அத் சார்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, இந்திய தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

ஈழத்தில் முள்வேலி முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களை சொந்த வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும், தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் சுட்டுக் கொல்வதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அவர்கள் முயற்சி செய்தனர். போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

இவ் ஆர்ப்பாட்டம் முடிந்த சிறிது நேரத்தில் டெல்லியிலுள்ள சிறீலங்கா தூதரகம் தாக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா தூதரகத்தை சிலர் தாக்கிய பொழுது புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி வெளியில் மகிழுந்தில் உட்கார்ந்திருந்ததாக அங்கிருந்த சிலர் கூறியுள்ளார்கள்.

http://www.meenagam.org/?p=12323

.

சிறீலங்கா தூதரகத்தை சிலர் தாக்கிய பொழுது புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி வெளியில் மகிழுந்தில் உட்கார்ந்திருந்ததாக அங்கிருந்த சிலர் கூறியுள்ளார்கள்.

http://www.meenagam.org/?p=12323

பொலிஸ் கைது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பில அவர் காரில் இருந்து இருப்பார்,ஆனால் பொலிஸ் கைது செய்யவில்லை போல கிடக்குது

கைது செய்யிருந்தால் அதை வைத்து அரசியல் நடத்தலாம் என்று நினைத்து இருக்கலாம் எல்லாம் பிழைத்து போய்விட்டது.

பெட்டர் ரை நெக்ஸ்ட் டைம்

அவராவது ஈழத்தமிழனுக்காக குரல் கொடுத்தார் ,நீர் என்ன செய்தனீர் புலத்து புண்ணாக்கு என்று யாராவது கேட்க நினத்தால் தனிமடலில் கேட்கவும் நிர்வாகத்துக்கு வேலை குறைவாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளியுறவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் பார்க்க வேண்டிய அரிய காணொளிகளை சீனா அண்மைய 60 வருட புரட்சி நாளில் வெளியிட்டிருக்கிறது. வயித்தில புளியைக் கரைத்தாலும் கட்டாயம் பார்க்க வேணும். அதில ஒரு சாம்பிள்...

http://www.youtube.com/watch?v=S3P2oBA5O8M...feature=related

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை தலைவி யோனியா ......

உங்கடை சாம்பிளை பாத்து மயங்கிற ஆள் இல்லை . க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா தலையைச் சுத்துதே இந்தியாவில காகம் பறக்கிறமாதிரி அவன் பிளேன்களைப் பறக்க விடுறான்.அந்த ரொக்கட்டில ஒன்றிரண்டை இந்தியாப் பக்கமா வச்சு வேலை செய்யுதா என்று சாம்பிளுக்கு செக் பண்ணிப் பார்த்;திருக்கலாம். இந்தியனுக்கு வயித்தைக் கலக்கியிருக்கும்.அமெரிக்காவ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.