Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் ஒதுங்கியிருந்தா நாட்டை காக்குறது ஆர்?

Featured Replies

நாங்கள் ஒதுங்கியிருந்தா நாட்டை காக்குறது ஆர்?

அவன் ஒரு ஞானி

நாங்கள் ஒதுங்கியிருந்தா நாட்டை காக்குறது ஆர்?

கதிர்கள் அறுத்த வயல்வெளி,தேங்கி நிற்கும் மழைதுளிகளில் தெரிகிறது வானம். நாரைகள் நடைபயில காளைகள் வீறு நடைபோட்டன. கலப்பையும் கையுமாக வயலில் பிரசாத். தம்பி டேய் .. உன்ட தங்கச்சி பெரியபிள்ளையாயிட்டாளாம். வரம்பில் நின்று பசுபதி உரத்து சொன்னார். அப்பிடியா ..? பிரசாத்துக்கு மகிழ்ச்சி. டே...சிவலை நீதான் குழப்படி. நான் வரும் வரை இதிலே நிற்கவேணும். என்ன கறுப்பா பார்க்கிறாய்? நீ நல்ல பெடியன். அண்ண போயிட்டு வாறன். இரு மாடுகளையும் பார்த்து சொல்லிவிட்டு வீடு செல்கிறான். தந்தை குடிகாரன். தாய் இல்லை.ஆனாலும் அம்மாவி்ன் இடத்தை நிரப்ப அங்கே பலர் இருந்தனர். மல்லாவி மலர் அக்கா. மாங்குளம் மணியம் சித்தி,அக்கராயன் அன்னம் ஆச்சி,வன்னேரி வதனம் மாமி, இவர்கள் எல்லோரும் இடம்பெயர்ந்து வந்தவர்கள். பிரசாத்தின் காணியில் குடும்பம் குடும்பமாக கொட்டில் அமைத்து குடி இருக்கின்றனர். பிரசாத் வருகிறான். வேப்பம் குழை வாசலில். தந்தை கள்ளுப்போத்தலோடு முற்றத்தில். அங்கு மாறி இங்கு மாறி வதனம் மாமி ஓடித்திரிகிறாள். கால்முகம் கழுவி வாசற்படி மிதிக்கிறான். பொங்கல் பானை அடுப்பில். அடுப்படியில் அன்னம் ஆச்சி. ஓலைப்பாயில் ஒதுக்குப்புறமாக தங்கச்சி. வெள்ளை துணியால் முக்காடு. பக்கத்தில் வருகிறான். வெற்றிலை பாக்கு நெல்லுடன் ஆயிரத்து ஒரு ரூபா அண்ணனின் கைவிசேடம். தலைதொட்டு ஆசிர்வதித்தவன் சுவரில் மாட்டப்பட்டிருந்த தாயின் படத்தை பார்க்கிறான். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா போல வருமா? நெஞ்சம் நெகிழ்கிறது.

* * *

பிரசாத் நில்லு நானும் வாறன். வழி மறித்த பசுபதி ஏறுகிறார் ஈருளியில். அவன் வேகமாக ஓட்டத்தொடங்கினான். கள்ளுத்தவறணை கடந்தது தம்பி..தம்பி..நிறுத்தடா.உனக்கு ஞாபகம் வரும் எண்டு நினைச்சன் வர இல்ல ஈருளி நின்றது. பிடரி சொரிந்தவாறு பிரசாத்தின் சட்டைபையை பார்க்கிறார். அண்ண..இதுதான் வேண்டாம் எண்டுறது. சாமத்திய வீட்டை சாட்டி வாங்கினியள்.அந்த கொண்டாட்டமும் முடிஞ்சுது. தம்பி..தம்பி என்னடா..?பதினொண்டுதானே கழிஞ்சது முப்பத்தொண்டு முடிய இல்லைதானே.அதுவரைக்கும் என்னோட சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளுமன். ச்ச..உயிரை வாங்கிறியள் அண்ண...இந்தாங்கோ நூறு ரூபா. எடுத்து அவரிடம் கொடுத்தான். சரி கண்ணா போயிட்டு வா செல்லம். சொன்ன பசுபதி தவறணை பக்கம் திரும்புகிறார்.பிரசாத்தின் ஈருருளி சூரியின் ஈருருளி திருத்தும் கடையை நோக்குகிறது.அங்கே அவர் துருப்பிடித்த சில்லுக்கு மண்ணெண்னை தடவிக்கொண்டிருந்தார். பிரசாத் இறங்காமல் வீதியில் நின்ற படியே என்ட சயிக்கிளும் கழவி பூட்டவேணும். எப்ப கொண்டு வரலாம். சூரிக்கு கதை சொன்னபடி அவரது வீட்டையும் காணியையும் அலசுகிறான். சோபா விழுந்த தென்னோலைகளை அடுக்கி கொண்ட நின்றாள். ஈருருளி மணிச்சத்தம். நிமிர்ந்து பார்க்கிறாள்.நேற்று குடுத்து விட்ட கடிதம் கிடைச்சதே..?பிரசாத் கைகளால் பேசினான். அவளுக்கு விளங்கவில்லை. அரை லூசு பொழுதுபட மாட்டுபட்டியடிக்கு வாறன். வா கதைப்பம். அவள் மீண்டும் என்ன..? என்று கையால் கேட்டாள். அந்த வேலிக்கரைக்கு போ.. நான் அதால வாறன். அவனது கைகளும் வாயும் மெளனமாக போராடியதை சூரி கண்டு விட்டார். என்ன தம்பி உங்க ஆரோட கதைக்கிறீர். அது வந்து .... தென்னையில் சோமு. பசுபதி அண்ண கள்ளுக்கு வாறதா சொல்லிவிட சொன்னவர் அதுதான்...பிரசாத் மழுப்பினான். அப்ப நாளைக்கு சையிக்கிள் கொண்டு வாறன். ஈருருளி இறக்கை விரி்த்தது.

* * *

அண்ண பயிரை பார்த்தியளே. சும்மா கலகலக்குது.வளர்பிறைக்கு தங்கச்சிமார் தலைகுனிவினம். பிரசாத் தனது வயலைப்பார்த்து பெருமிதம் அடைந்தான். பசுபதி விடுவாரா என்ன ? அட போடா. என்ட பெடிச்சியள்தான் முதல் வெட்கப்படுவாள்கள்...அவரும் அதற்கு மேலாக. இருவரும் பேசிக்கொள்ள இடையில் நின்ற காளைகள் இரண்டும் தலையசைத்து ஆமா போட்டன. சிவலை ஒற்றை காலை தூக்கி அடிப்பதும் பிரசாத்தை பார்ப்பதுமாக நின்றது. சரி கதையை முடிப்பம். சிவலைக்கு பொறுமை இல்லை. கிடுகும் ஏத்தவேணும். பிரசாத் வண்டில் ஏறத்தயாராகினான். ஓமடா தம்பி நானும் கூட வாறன் பசுபதியும் ஏறிக்கொண்டார். காளைகள் இரண்டும் கால்களை எட்டி எட்டி வைத்தன. சலங்கை சத்தம் சரமாரி. பிரதான வீதியில் வண்டில ஏறுகிறது. தீர்த்த மாட செல்வது போல திரள்திரளாக மக்கள். ஆடு மாடுகளும் தமது சொந்த பந்தங்களுடன். மாட்டு வண்டில்கள்,ஈருருளிகள் ஆமை வேகத்தில் ஊர்ந்தன. இடையிடையே பாரவூர்திகள் உறுமின. பக்தர்கள்தான் நேர்த்திக்கடனுக்கு தூக்கு காவடி எடுப்பார்கள்.கோழிகளுமா ? பாவம் உழவு இயந்திரங்களில் தலை கீழாக தூங்கியபடி

கூடவே அதன் கூடுகளும்.கோணாவில்,பூனகரி,மு

  • கருத்துக்கள உறவுகள்

//பள்ளியில் படிக்காத பாடம் அனைத்தும் காலம் அவனுக்கு கற்று கொடுத்து விட்டது. இப்போ அவன் ஒரு ஞானி.//

பிரசாத் ஞானியாக களமுனையும் துயரமும் அகதி வாழ்வும் களத்தை பதிவாக்கிய கதையிலிருந்து பலரது ஞாபகங்கள் உயிர்க்கின்றன உமை. இணைப்புக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.