Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியர்கள் தொல்லை-வெங்கி ராமகிருஷ்ணன் வருத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ramakrishnan.jpg

ந்தியாவிலிருந்து வரும் இ}மெயில்கள் தமக்கு பெரும் தொல்லையாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி ஊடகங்களில் வெளிவரும் தவறான தகவல்கள் வருத்தமளிப்பதாகவும் ரசாயனத்துறைக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவிலிருந்து எனக்கு ஏராளமானோர் இ-மெயில் அனுப்புகின்றனர். இதனால் எனது சக ஊழியர்கள் மற்றும் ரசாயனத்துறை தொடர்பான சர்வதேச இதழ்களில் இருந்து வரும் முக்கியத் தகவல்களை படிக்க சிரமமாக உள்ளது. திடீரென வரத் தொடங்கியுள்ள இத்தகைய இ-மெயில்களை அழிக்கவே எனக்கு தினமும் சில மணி நேரம் செலவாகிறது.

எனக்கு நோபல் பரிசு கிடைத்தது அவர்களுக்கு பெருமை என்பது சரிதான். அதற்காக என்னை ஏன் தொல்லை செய்கிறார்கள்.

பல வருடங்களாக என்னுடன் தொடர்பு கொள்ளத் தவறியவர்கள் கூட திடீரென தொடர்பு கொண்டு வருகின்றனர். இது எனக்கு விசித்திரமாக தெரிகிறது.

மேலும், ஊடகங்களிலும் என்னைப் பற்றி சில தவறான தகவல்கள் வெளியாகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு ஆசிரியர்களாக இருந்ததாக சிலர் கூறியிருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. அவர்கள் யார் என்றே எனக்கு தெரியாது. நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கவே இல்லை.

மேலும், எனக்கு 3 வயதாக இருக்கும்போதே நாங்கள் சிதம்பரத்தை விட்டு இடம்பெயர்ந்துவிட்டோம்.

எனக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பதன் மூலம் மக்கள் அறிவியலில் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி தான். ஆனால், தனிப்பட்ட முறையில் நான் முக்கியமில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். நான் இந்திய வம்சாவளியில் வந்தவன் என்பதும் குறைந்த முக்கியத்துவம் தரப்பட வேண்டிய செய்தியே. நாம் அனைவரும் மனிதர்கள். இதில் நாம் பிறக்கும் நாடு என்பது வெறும் சாதாரண நிகழ்வே.

இந்தியாவில் ஒரு வேலைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதும் தவறான தகவலே. நான் எனது தற்போதைய கேம்பிரிட்ஜ் ஆய்வகப் பணியை விட்டு விலகும் எண்ணமில்லை. இது எனக்கு திருப்திகரமாக உள்ளது. எனக்கு வேலை அளிப்பது தொடர்பாக இந்தியாவிருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. மேலும், அப்படியே வாய்ப்பு வந்தாலும் நான் உடனடியாக மறுத்துவிடுவேன்.

கேம்பிரிட்ஜ் பணியில் தொடர எனக்கு பல தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான காரணங்கள் உள்ளன. தற்போதைய வேலையை விட வேறொரு வேலையில் பணியாற்றுவதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

இவ்வாறு வெங்கி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

dinamani.com

Edited by கறுப்பன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களின் Pseudo-patriotism ஆல் வந்த வினைதான் இது..! இப்பிடிச் சொல்லிப்போட்டாரெண்டு இனி இவரின்ர பிராணனை வாங்கப் போறாங்கள்..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியர்களின் Pseudo-patriotism ஆல் வந்த வினைதான் இது..! இப்பிடிச் சொல்லிப்போட்டாரெண்டு இனி இவரின்ர பிராணனை வாங்கப் போறாங்கள்..! :(

டங்கு இதிலை நிழலி அண்ணாவின் பங்கும் இருக்கு...

அவரும் ஈ_மெயில் அனுப்பினவராம் :rolleyes

நிழலி

Advanced Member

Group:கருத்துக்கள உறவுகள்

Posts:1,533

Joined:30-January 08

Gender:Male

Location:Canada

Interests:நக்கல் நையாண்டி செய்வது, ஒப்பாரி வைப்பது, தண்ணி அடிப்பது, மற்றவரில் பிழை கண்டு பிடிப்பது, அரட்டை அடிப்பது, பெண்களிடம் வழிவது......

Posted 07 October 2009 - 06:39 PM

சக மனிதன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் மிகவும் சந்தோசப்படுகின்றேன் என ஒரு மின்னஞ்சலை அவருக்கு தட்டி விட்டுள்ளேன். அவருக்கு பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமா இல்லையா என்பதற்கப்பால், ஒரு தமிழனை வாழ்த்திய திருப்தி கிடைத்தது

அவரின் மின்னஞ்சல்

ramak@mrc-lmb.cam.ac.uk

Edited by ஜீவா

இந்தியர்களின் தேசபக்தி மெச்சத் தகுந்தது. குஜராத்தில் தங்களுடன் ஒரே மண்ணில் சேர்ந்து வாழ்ந்த முஸ்லிம் கர்ப்பிணித் தாயின் வயிற்றை கத்தியால் வெட்டி அந்தக் குழந்தையை துடிக்கத்துடிக்க கூறுபோட்ட தேசபக்தியாளர்கள், இன்னுமொரு மாநில முஸ்லிமான அப்துல் கலாம் என்பவரை தலையில் வைத்துக் கூத்தாடினார்கள்.

ராமகிருஷ்னனின் நிராகரிப்பு வரவேற்கத் தக்கது. அவர் இந்தக் கூற்றை ஒரு இந்தியனாகச் சொல்லவில்லை ஒரு அமெரிக்கனாகவே சொல்லியுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. இந்திய தேசபக்தியாளர்களுக்கு நல்லதொரு சாட்டையடி. :(

டங்கு இதிலை நிழலி அண்ணாவின் பங்கும் இருக்கு...

அவரும் ஈ_மெயில் அனுப்பினவராம் :rolleyes

நிழலி

அடப் பாவிங்களா.... உதெல்லாமா நினைவில் வைத்திருப்பது........... ஹி ஹி ஹி... இந்த செய்தியை வாசிக்கும் போதே, என்னைப் பற்றி எனக்கே சிரிப்பு வந்தது......... :(

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப் பாவிங்களா.... உதெல்லாமா நினைவில் வைத்திருப்பது........... ஹி ஹி ஹி... இந்த செய்தியை வாசிக்கும் போதே, என்னைப் பற்றி எனக்கே சிரிப்பு வந்தது......... :lol:

நிழலி அண்ணா எல்லாரையும் எல்லாரும் கவனிச்சிட்டு தான் இருக்கிறார்கள் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.