Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவில் 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள்: கருணாநிதி

Featured Replies

வன்னி வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 250,000 தமிழ் மக்களில் 58,000 பேர் அடுத்த 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என தமிழ்நாட்டில் இருந்து சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று புதன் கிழமை இந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஏனையவர்களும் விரைவாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

58,000 பேரையும் மீளக்குடியமர்த்தும் பணிகள் நாளை தொடங்க உள்ளன எனவும் கருணாநிதி ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய குழு திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு தலைமையில் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தது.

ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று சென்னையை வந்தடைந்தனர். அவர்களை அண்ணா அனைத்துலக வானூர்த்தி நிலையத்தில் வரவேற்றார் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி.

தமது பயணம் குறித்து குழுவினர் முதலமைச்சருக்கு விளக்கினர். பின்னர் பயணம் குறித்த அறிக்கை ஒன்றையும் கையளித்தனர். அதன் பின்னர் முதலமைச்சர் கருணாநிதி ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தார்.

"பருவப் பெயர்ச்சி மழை தொடங்குவதற்கு முன்னர் தமிழர்கள் அவர்களது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று தூதுக் குழுவினர் மகிந்த ராஜபக்சவிடமும் மற்றைய அதிகாரிகளிடமும் வலியுறுத்தி உள்ளனர். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர்கள், அடுத்த 15 நாட்களுக்குள் 58,000 மக்கள் தமது சொந்த வீடுகளுக்கு அனுப்பப்பட உள்ளனர் எனத் தெரிவித்தனர்” என்றார் கருணாநிதி.

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு தூதுக்குழுவினர் சிறிலங்கா அரச தலைவரிடம் தெரிவித்தனர் எனவும் கருணாநிதி குறிப்பிட்டார்.

முகாம்களில் உள்ள பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் விசேட தேவை உள்ளவர்களை அரச சார்பற்ற நிறுவனங்களின் கவனிப்பில் ஒப்படைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் சிறிலங்கா அதிகாரிகள் இந்தியக் குழுவினரிடம் உறுதி அளித்துள்ளனர்.

இந்தியக் குழுவில் மத்தியில் ஆளும் கூட்டணி அரசைத் தலைமை தாங்கும் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.

தாம் சிறிலங்காவில் தங்கியிருந்த சமயத்தில் 8 முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர் என குழுவின் உறுப்பினரான கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமது பயணத்தின் போது தாம் அறிந்தவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தாங்கள் அறிக்கை வழங்க உள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.