Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் அரசியல் தஞ்சம்! - ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவின் வன்கூவர் தீவுக் கடலில் படகுடன் பிடிபட்ட 76 இலங்கைத் தமிழர்களை தொடர்ச்சியான தடுப்புக் காவலில் வைக்குமாறு கனடிய குடிவரவு மறுமதிப்பீட்டு சபை உறுப்பினர் லியான் கிங் உத்தரவிட்டுள்ளார். குடியேற்றவாசிகள் அங்கு வந்து சேர்ந்த விதம் பற்றிய விவரங்கள் தெளிவற்றவையாக இருப்பதால் அவர்களைப் பற்றிய சோதனையை பூர்த்தி செய்ய நேரம் நேரம் போதவில்லை என்று தெரிவித்து கனடிய குடிவரவு அமைச்சரின் பிரதிநிதி ஒருவர் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

76 இலங்கையர்களில் இரண்டு பேர் மீதான விசாரணைகள் பகிரங்கமாக நடைபெறும் என்றும் கிங் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஆண்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ அடையாளம் காணும் வகையிலான தகவல்கள் வெளியிடப்படுவதை தடைசெய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இரண்டு ஆண்களும் கனடாவில் அகதி அந்தஸ்து கோருவதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இந்த தடுப்புக் காவல் மறுபரிசீலனை செய்யப்படுவதை மட்டும் அவதானிப்பதற்கு ஊடகம் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஏனைய 74 பேர் மீதான விசாரணைகளை பார்க்க பொது மக்கள் அனுமதிக்கப்பட வேண்டுமாயின் ஊடகம் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு இலங்கையர்கள் மீதான விசாரணைகளை பகிரங்கமாக நடத்த வேண்டுமென ஊடகம் விடுத்துள்ள கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களது வழக்கறிஞர்கள், இருவரும் அடையாளம் காணப்பட்டால் அவர்களது குடும்பத்தினர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம் என்று தமது கட்சிக்காரர்கள் அஞ்சுவதாக தெரிவித்திருந்தனர்.

குடிவரவு வழக்கறிஞர் லாறி ஸ்மீற்ஸ் ஊடகங்களின் கோரிக்கையை தாம் கொள்கையளவில் ஆதரிப்பதானாலும் அதனை தாம் எதிர்க்க வேண்டுமெனக் கூறினார்.

தமது கட்சிக்காரரின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் மேலும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்று அவர் அஞ்சுவதாகவும் வழக்கறிஞர் கூறினார்.

விசாரணைகள் பகிரங்கமாக நடைபெறுமானால் தங்கள் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படலாம் என்று தமது கட்சிக்காரர்கள் அஞ்சுவதாகவும் அவர் கூறினார். தங்களைப் பொறுத்த வரையில், அந்தரங்க விசாரணையே நடத்தப்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.ஆனால், வெளியீட்டுத் தடை விதிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினக்கு தீர்வு காணலாம் என்று கிங் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை வன்கூவர் கடலில் கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவையினரால் கைப்பற்றப்பட்ட ஓசன் லேடி கப்பலில் இருந்த இலங்கையை சேர்ந்த 76 புகலிட கோரிக்கையாளர்களில் இந்த இருவரும் அடங்குவர்.

விசாரணைகளை அவதானிக்க தடை விதிப்பது பத்திரிகை சுதந்திரத்தை மீறும் செயலாகும் என்று தெரிவித்த நான்கு ஊடகங்கள் 48 மணிநேர விசாரணைகளை பகிரங்கமாக நடத்துமாறு கோரியுள்ளன.

தொலைநோக்க மகாநாட்டில் புகலிட கோரிக்கை மீதான விசாரணைகள் நடைபெற்றன. விசாரணைகள் தொடர்ந்து நேற்றும் நடைபெற இருந்தன. இந்த விடயம் சட்டவிரோத ஆட்கடத்தலுடன் சம்பந்தப்பட்டது என்று தாம் கருதுவதாக குடிவரவு அமைச்சர் ஜேசன் கேனே தெரிவித்துள்ளார்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு கனடாவும் ஏனைய நாடுகளும் இணைந்து முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆபத்தான படகுகளில் ஏறி, ஆயிரக்கணக்கான டொலர் பணத்தை கொடுத்து, கடல்களைத் தாண்டி சட்ட விரோதமாக கனடாவுக்கு வருவதை ஊக்குவிக்கக் கூடாது என்று அமைச்சர் கெனே பேட்டி ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.

கனடிய தமிழ் காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை விடுத்த பகிரங்க வேண்டுகோள் ஒன்றில், புகலிடக் கோரிக்கையாளர்களது விடயத்தில் நேர்மையாகவும் சட்டரீதியாகவும் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

கனடிய தமிழ் காங்கிரஸில் பணியாற்றும் ரொறொன்ரொ வழக்கறிஞர் கெ, ஆனந்தசங்கரி, 76 பேரில் எவரையும் தம்மால் பார்க்கவோ பேசவோ முடியவில்லை என்று தெரிவித்தார். ஆனால் தமிழ் மக்கள் தப்பியோடும் இலங்கையின் நிலைமை பற்றி சுருக்கமான விளக்கத்தை தாம் கொடுத்ததாக அவர் கூறினார்.

21 வருடங்களுக்கு முன்னர் 19 வயதில் இலங்கையிலிருந்து தப்பியோடிய றோய் ரத்னவேல் கையில் பணம் எதுவுமின்றி ஆங்கிலம் ஒரு வார்த்தையும் பேச முடியாதவராக கனடா வந்து சேர்ந்தார். தமக்கு 16 வயதாக இருந்த போது ஒரு தமிழ் இளைஞர் என்ற ஒரே காரணத்திற்காக தாம் சித்திரவதை செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையிலும் அடைத்து வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர் கனடா வந்து சேர்ந்து இரண்டு நாட்களில் அவரது தகப்பனார், தாயாரின் முன்னிலையல் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்திருந்தால் அடுத்து தாமும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார் என்று அவர் கூறினார்.

ஆனால், இன்று ரத்னவேல் கனடாவில் வெற்றிகரமாக வியாபாரம் செய்து வருகிறார்.

இதேவேளை, கனடாவில் இலங்கையர்களே அதிக அளவில் புகலிடம் பெற்றுவருகிறார்கள். கடந்த 9 மாதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகலிடக் கோ,க்கைகளில் 93 சதவீதமானவை இலங்கை அகதிகள் சமர்ப்பித்த கோரிக்கைகளாகும்.

இந்த வருடம் ஜனவரி மாதத்திற்கும் செப்டெம்பர் மாதத்திற்கும் இடையே பரிசீலனை செய்யப்பட்ட 804 விண்ணப்பங்களில் 26 விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டன என்று கனடிய குடிவரவு, அகதிகள் சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

மேலதிக செய்திகளுக்கு...

Edited by forlov

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.