Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூலநோய் உள்ளவர்களுக்கான மருத்துவ முறைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூலநோய்க்கான மருத்துவம்

மூலநோய் உள்ளவர்களுக்கான மருத்துவ முறைகள்

தெரிந்தவர்கள் தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மூலநோய் எப்படி உண்டாகிறது?

மூலநோய் என்பது நமது மலமானது வெளியாகும் பாதையில் உருவாகின்ற ஒரு பாதிப்பாகும். மலப்பாதையை தமிழில் ஆசன வாய் என்று அழைப்பார்கள். இப்பகுதி ஆனல் குஷன்ஸ் எனப்படும் உள்ளுக்குள் காற்றைக் கட்டுப்படுத்தும் பாகமாக உள்ளது. இச்செயலை ஆசன வாய்ப் பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களை விரிவடையவும் சுருக்கவும் செய்யும் தன்மையினால் இதனை நிகழ்த்துகிறது. இந்த ஆசன வாய் பகுதியில் இருக்கின்ற ஆனல் குஷன்ஸ் என்கின்ற மூன்று சதைப் பகுதிகள் பெருத்து கட்டியாகி விடுவதைத் தான் நாம் மூலம் என்றழைக்கின்றோம்.

இப்படி பலருக்கு மூல நோய் வருவதற்கு என்ன காரணம்? இந்த நோயின் வேதனையில் இன்று பலர் வெளியே சொல்லாமல் தவிக்கின்றார்களே?

பல சிக்கலுக்கு காரணமாக இருக்கின்ற மலச்சிக்கல்தான் இதற்கு அதாவது இந்த மூலநோய்க்கு காரணமாக இருக்கின்றது. இன்று மக்களிடையே நல்ல நார் சத்து மிகுந்த காய்கனி நிரம்பிய உணவுகளை உண்ணுகின்ற பழக்கம் ஒழிந்து வருவதுதான் இந்த மலச்சிக்கலுக்கு எல்லாம் காரணம். மேலும் நாகரிகம் என்று கருதிக் கொண்டு பொது இடங்களுக்கு செல்லுகின்ற இடங்களில் எல்லாம் கண்டதை எல்லாம் உண்ணுகின்ற பழக்கம், பாஸ்ட் புட் என்கின்ற பெயரால் பல வேஸ்ட் புட்களை உண்ணுகின்ற ஒரு கலாச்சாரம் நம் மிடையே மிகுந்து விட்டது. இது எல்லாம் கூட மலச்சிக்கலுக்கு காரணமாகும். இவ்வாறு பல சமயங்களில் மலசிக்கல் உபாதையால் மலம் கழிக்கின்ற போது இவர்களால் மற்றவர்களைப்போல எளிதாக மலம் கழிக்க முடியாமல் போய்விடுகிறது. இவர்கள் கஷடப்பட்டு மலம் கழிக்க முக்குகின்ற போது ஆனல் குஷன்ஸ் பகுதியிலிருக்கின்ற ரத்த நாளங்கள் வெளி வந்து விடும். இதுவே தொடர்கதையானால் அதுவே மூல நோயாகி விடுகின்றது.

இந்த மூலநோய் பாதிப்பு யார் யாருக்கு எல்லாம் வரும்?

பொதுவாக இந்த பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருக்கின்றவர்களுக்கு, உணவில் அதிகம் நார் சத்து உள்ள காய்கறிகளை மிகமிக குறைந்த அளவு மட்டுமே சேர்த்து கொள்கின்ற நபர்களுக்கு, நிறைய எப்போது பார்த்தாலும் நொறுக்கு தீணி திண்ணுகின்ற பழக்கமுள்ளவர்களுக்கு, நிறைய காரமான உணவுகளை உண்ணு கின்றவர்களுக்கு, அளவிற்கு அதிகமாக அசைவ உணவை எப்போதும் தொடர்ந்து ஒரு பிடி பிடிப்பவர்களுக்கும் மூலநோய் பாதிப்பு வரக்கூடும். ஒரு சில சமயங்களில் பருமனாக உள்ளவர்களுக்கும் மூல நோய் பாதிப்பு வரலாம். சில சமயங்களில் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு, குழந்தையை சுமக்கின்ற தால் பாரம் அழுத்தம் காரணமாக மூல நோய் பாதிப்பு வரலாம்.

எப்படி இது மூலநோய் பாதிப்பு தான் என்று அறிந்துகொள்வது?

ஆசன வாயில் மலம் கழிக்கின்றபோது சிலருக்கு ரத்தக் கசிவு இருக்கும். மலம் கழிக்கின்றபோது ரத்த நாளங்கள் வெளியே வந்துவிடலாம். அதனுடன் சளி போன்ற திரவமும் சேர்ந்து கசியலாம். மலம் கழிக்கின்றபோது வலி இருக்கலாம். ஆசனவாய் பகுதியில் அரிப்புக்கூட சிலருக்கு தோன்றலாம். இவற்றை வைத்தே இவர்களுக்கு வந்திருப்பது மூல நோய் என்று எளிதில் கண்டறிந்து விடலாம்.

மூலநோய் பாதிப்பு ஒருவருக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதலில் எல்லோரும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அடுத்து காரம் அதிகம் உள்ள உணவை அடிக்கடி அதிகம் உண்ணக் கூடாது. தங்கள் உணவில் நார்சத்து உள்ள பழங்கள் காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும். போதுமான அளவிற்கு மட்டுமே அசைவ உணவுகளை உண்ண வேண்டும். தினமும் இரண்டு வேளை மலம் கழிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். மலத்தை அடக்கி வைப்பதை பழக்கமாக்கிக் கொள்ள கூடாது. எக்காரணத்தை கொண்டும் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனி பிரியர்கள் இந்த பழக்கத்தை கைவிட்டு விட வேண்டும்.

மூலநோய்க்கு புதிய நவீன மருத்துவ முறையில் என்ன சிகிச்சை உள்ளது?

மூலநோய்க்கு புதிய நவீன மருத்துவ கண்டுபிடிப்பாக வந்திருக்கின்ற லேசர் சிகிச்சையின் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்போதைக்கு இதுதான் மிகமிக நவீன சிகிச்சையாகும். இந்த சிகிச்சை செய்து கொண்ட பிறகு மறுபடியும் இவர்களுக்கு மூலநோய் பாதிப்பு வராது என்று உறுதி அளிக்க முடியும்.

நீரிழிவு நோயாளருள் மூலநோய் எவ்வாறு ஏற்படுகின்றது? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவின்மையால், பலர் மூல நோயுடன் வாழ்கின்றனர். அதனால் அவதியுறுகின்றனர். மூலத்தால் இரத்தம் போய்க்கொண்டு இருக்கிறது. (கோட்டெக்ஸ்) இரத்தம் உறிஞ்சும் அணையை உபயோகித்து சமாளிக்கிறோம் என மூலநோய்வாய்ப்பட்ட ஆண்களும் கூறுகிறார்கள். தொடர்ச்சியாக இரத்தம் போவதை அனுமதித்தால் அது இரத்தசோகைக்கு இட்டுச்செல்லும். இரத்தப்படிவுகள் உள்ள இடங்களில் கிருமிகள் பெருக்கமடையும். சிறிதளவு இரத்தம்தான் வெளிப்படுகிறது என ஒரே இரத்தம் உறிஞ்சணையை நெடுநேரம் பயன்படுத்தினால், அதில் கிருமிகள் பெருகவும் வேறு தோல்நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மூல நோய்க்கு மலச்சிக்கல் பிரதான காரணமாகும். கீரைக்கு விசிறப்படும் சில இரசாயனப் பூச்சிநாசினிகளும் மலச்சிக்கலை ஏற்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகிறது. தோட்டத்தில் கீரைகள் பயிரிடப்பட்டிருக்கும்போது கடுவன் நாய்கள் அவற்றின்மீது சிறுநீர் கழித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. இத்தகைய மாசுபட்ட கீரைகளை இனம் காண்பதற்காக கீரையை மணந்து பார்த்த பின்னரே சமைக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது மருந்து மணம் அல்லது நாயின் சிறுநீர் மணம் வீசினால் அந்தக் கீரையைப் பயன்படுத்தாது தவிர்க்க வேண்டும். மூலநோய் 1ஆம் கட்டம். 2ஆம் கட்டம், 3ஆம் கட்டம். என வெவ்வேறு கட்டங்களாகப் பிரித்து நோக்கப்படும். 1ஆம் கட்டம் - வெளித்தள்ளப்படும் மூலம், தானாகவே திரும்பி உட்செல்லும் நிலை. 2ஆம் கட்டம் - வெளித்தள்ளப்படும் மூலம் தானாகவே திரும்பி உட்செல்லாது. ஆனால் தள்ளிவிட்டால் உட்செல்லும் நிலை. 3ஆம் கட்டம் - வெளித்தள்ளப்படும் மூலம், தள்ளிவிட்டாலும் உட்செல்லாது வெளியே நிற்கும் நிலை. மூலநோய்க்கு ஆரம்பத்திலேயே வைத்திய ஆலோசனை பெறல் நலம் பயக்கும். மூலத்தில் ஊசி ஏற்றிக் குணப்படுத்தவும் வாய்ப் உண்டு.

குடலில் அலர்ஜி உண்டாகி அவை மூலத்தை தாக்கி மூலநோய் ஏற்படும். இதற்கு சிலர் அறுவை சிகிச்சை கூட செய்துகொள்வார்கள். இந்த நிலை மாற பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கறுப்பி,நுனாவிலான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.