Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞரிற்கு தோள்கொடுக்க சென்ற தொண்டமான்

Featured Replies

மலையக தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானவர்கள் தமிழ் நாடு சென்று அங்கு மகிந்தவின் செயற்பாடுகளை நியாப்படுத்தியதோடு அதற்கு ஆதாரமாக தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து பார்த்தததையும் ஆதாரமாக்கி உறுதிப்படுத்தி உள்ளார். அதாவது தடுப்பு முகாம் தொடர்பில் இன்னமும் 2 லட்சம் மக்கள் அங்கு இருக்கின்றார்கள் என்றும் அவர்கள் பருவ மழை காலத்தில் சிரமபட போகின்றனர் என பத்திரிகையாளர் கேட்டதற்கு தொண்டமான் அவர்கள் பதிலளிக்கும் போது கண்ணிவெடி அகற்றிய சான்று வந்தால் உடனடியாகவே மக்களை அனுப்ப முடியும் என மகிந்த பாணியில் கூறியுள்ளார்.

தவிர தான் தமிழர் என்றும் தடுப்பு முகாம் களுக்கு தான் நேரடியாக சென்று பார்த்ததாகவும் கூறினார். தொடந்து இலங்கை அரசு பத்திரிகையாளரை முகாம்களுக்கு அனுப்பவில்லையே பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு தொண்டமான் அவர்கள் “ ஏன் இல்லை கலைஞர் தொலைகாட்சியினை இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளதே அது வெளி நாட்டு ஊடகம் தானே எனவும் கூறியுள்ளார். மொத்தத்தில் கலைஞர் அவர்கள் இலங்கைக்கு நாடாளுமன்ற குழுவினை அனுப்பி உண்மைகளை அறிந்து கொண்டுள்ளார். அதுவே உண்மை என கலைஞருக்கும் மகிந்தவுக்கும் சான்று கொடுத்துள்ளார் தொண்டமான்.http://www.eelanatham.net/news/important

எல்லோரும் தமிழனின் அழிவில் பணம் சம்பாதிக்கத்தான் பார்கிறார்கள் :lol:

எல்லோரும் தமிழனின் அழிவில் பணம் சம்பாதிக்கத்தான் பார்கிறார்கள் :lol:

24ஆம் தேதி துக்கிலிடப்பட்டு இரண்டு நாட்களாகத் தொங்கவிடப்பட்டிருந்த மருதிருவர்களின் உடல்கள் 27ஆம் தேதி கீழிறக்கப்பட்டது. அவர்களது தலைகள் துண்டிக்கப்பட்டு இன்று குருபூசை நடக்கிற காளையார்கோவில் கோவிலின் முன்பாக உள்ள சிறிய அறைக்குள் அடக்கம் செய்யப்பட்டது.

சற்று நேரம் நினைத்தாலுமே நெஞ்சைக் கீறிவிடுகிற இந்தத் துயரத்திற்கு அந்த மாவீரர்களை தள்ளிவிடக் காரணமாக இருந்தது இரண்டு விசயங்கள்.

மருதிருவர்களின் விடுதலைப் போராட்டத் தன்மான உணர்வு.

ஆங்கிலேய அடிவருடி புதுக்கோட்டைத் தொண்டைமான் கும்பலின் துரோகம். (ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதத்தில் சின்னமருதுவை நாய் எனத் திட்டுகிறான் துரோகி தொண்டைமான்.)

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும் அவனுக்கு. ஏழைமக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கும்பினியாரை எதிர்த்துப் போராடவேண்டும் என முழங்கியவன் அவன். உடம்பில் ஐரோப்பியரத்தம் ஓடாதவர்கள் எனது பேச்சைக் கேட்பார்களாக என்று அழைத்தான். ஆங்கிலேயருக்கு சேவகம் செய்பவர்கள் ஈனப்பிறவிகள் என்றான். கும்பினி ஆட்சி நமது நாட்டைப் பஞ்சத்திலும், பசியிலும் தள்ளிவிடும் என எச்சரித்தான். கும்பினியை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே விரட்டியடிக்க சாதி மத பேதமின்றி ஒன்றுதிரள வேண்டும் என அறைகூவினான்.

கி.பி 1801- அக்டோபர் மாதம் 24ஆம்தேதி பகல்பொழுது – இன்றைய சிவகங்கை மாவட்டம், திருப்பத்துர் நகரின் பேருந்து நிலையம், எதிர்புறம் நினைவுச்சின்னம் அமைந்துள்ள முச்சந்தியில் பெரியமருதுவும், அவரது தம்பி சின்னமருது என்று அழைக்கப்படுகிற சின்னப்பாண்டியனும் துக்கிலிடப்பட்டார்கள்.

அவர்களோடு சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட அவரது உறவினர்களான நுற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். அன்றும் அதன் பின்னரும் பிரிட்டிஷாரால் கொலை செய்யப்பட்டவர்கள் மட்டும் சுமார் ஐநுறுபேர்களுக்கும் மேல் இருக்கும். தமிழக வரலாற்றில் அதற்கு முன்னரும், பின்னரும் நடந்திராத ஒரு கொடூர நிகழ்ச்சி அது.

நன்றி வினவு இணையம்

200 வருடங்களுக்கு முதல் நடந்தவை.இன்று எமது மண்னில் முள்ளிவாய்க்கால் துரோகம் ....

வீடு கொழுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுத்துக்கொடுக்கும் மந்திகள் தானே உதுகளிடம் வேற எதை எதிர்பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.