Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றமைக்காக விசாரணை - ஜே.வி.பி கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட 2 ஆம் ஆண்டு மாணவி பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்டதனை ஜே.வி.பி வன்மையாக கண்டிக்கிறது. அந்த மாணவி பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றமைக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படுவாராயின் மஹிந்த ராஜபக்ஷவினால் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காகவும் அவரை விசாரணைக்கு உட்படுத்தல்வேண்டும் என்று ஜே.வி.பி. கோரியுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது 1988 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் பிறந்து பேராதனை பல்கலைகழகத்தில் கலைப்பீடத்தில் 2 ஆம் ஆண்டில் கல்விபயிலும் இராசையா திவாரகா என்ற மாணவி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார் இந்தச் சம்பவத்தை ஜே.வி.பி வன்மையாகக் கண்டிக்கின்றது. பிரபாகரனின் முத்திரை குத்தப்பட்டு வழங்கப்பட்ட சான்றிதழ் இருந்ததை அடுத்து அந்த மாணவியை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றோம். அவ்வாறாயின் அகில இலங்கை விளையாட்டுப்போட்டியில் வெற்றியீட்டியமைக்காக அன்றைய பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவினால் அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது தொடர்பிலும் விசாரிக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளின் இரண்டாவது தளபதி இன்று அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்றார். கருணாவும் மேஜர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தையும் சுதந்திரக்கட்சி மாநாட்டில் கைகோர்த்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் கிளிநொச்சியில் பிறந்து அங்கேயே வளர்ந்து பிரபாகரனின் நிர்வாகத்தின் கீழ் இருந்தமைக்காக ஓர் விளையாட்டு வீராங்கனை கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடக்கவிருந்த விளையாட்டுப்போட்டியில் அவர் பங்குபற்றவிருக்கின்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் கல்விபயிலவில்லை, பேராதனையிலேயே பயின்றுள்ளார் அது தவறானது அல்ல.

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்ததன் சான்றாக அவரை சகல துறைகளிலும் திறமைமிக்கவளாக உலகிற்கு காண்பிக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்களின் மூலமாக புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக்கூடாது.

புலிப் பயங்கரவாதத்தின் சவப்பெட்டிக்கு யுத்தின் மூலமாக இறுதி ஆணி அடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் பிரிவினைவாதக் கொள்கையைப் பரப்ப வேண்டாம். கிளிநொச்சியில் பிறந்தால் அங்குதான் வாழவேண்டும் பிரபாகரனின் நிர்வாகத்தில் தான் இருக்கவேண்டும் அது தவறல்ல.

புலிகளுக்கு ஆட்களை திரட்டிய கருணாவிற்கு வழங்கப்படுகின்ற மனித உரிமைகள் கூட அங்கு வாழ்ந்த சாதாரண பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை.

அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்காது இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இனங்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பலாம்.

மஹிந்த உடைத்தால் மண் குடம், மாணவி உடைத்தால் பொற்குடமா? செய்திப் பார்வை காண

Edited by forlov

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவியின் கைது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜே.வி.பி, பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றதற்காக அந்த மாணவி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளாரென்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தங்கப்பதக்கம் பெற்றதற்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மீள்குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஜே.வி.பி. எம்.பி.யான சுனில் ஹந்துன்நெத்தியே இவ்வாறு வலியுறுத்தினார். கிளிநொச்சி, கல்மடுப் பகுதியைச் சேர்ந்தவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட கலைப்பீட மாணவியுமான இராசையா துவாரகா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இந்த மாணவி சிறந்த விளையாட்டு வீராங்கனை.

ஓட்டப் போட்டியில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த விளையாட்டுப் போட்டியில் அவர் பங்குபெறவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது பயங்கரவாத தடுப்புப் பிரிவில் வைத்து இம்மாணவி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இவர் கிளிநொச்சியில் வாழ்ந்த காலத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் வெற்றிபெற்றார். இதன்போது பிரபாகரனின் கையொப்பமுடனான சான்றிதழ் ஒன்று இவருக்கு வழங்கப்பட்டது தொடர்பாகவே விசாரணையில் கேட்கப்படுவதாக அறிகின்றோம்.

இது ஒரு அநீதியான விடயம். அகில இலங்கை ரீதியில் வெற்றி பெற்றதற்காக பிரபாகரனின் கையெழுத்துடனான சான்றிதழைப் பெற்ற இந்த மாணவி அப்போது பிரதமராகவிருந்த மகிந்த ராஜபக்ஷவின் கைகளினால் நேரடியாகவே தங்கப்பதக்கம் பெற்றவர். பிரபாகரனின் கையெழுத்துடனான சான்றிதழைப் பெற்றதற்காக அம்மாணவியிடம் விசாரணை நடத்தப்படுமானால் பிரதமராகவிருந்த மகிந்த ராஜபக்ஷவிடம் தங்கப்பதக்கம் பெற்றது தொடர்பிலும் விசாரிக்க வேண்டும். இம்மாணவி கிளிநொச்சியில் பிறந்தது குற்றமா? அல்லது பிரபாகரனின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தது குற்றமா? அப்படியானால் பிரபாகரனுக்கு அடுத்த தலைவராகவிருந்த கருணா இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராகவும் அமைச்சராகவும் உள்ளாரே? இந்தக் கருணா எத்தனை இளம் பெண்களை பலாத்காரமாக இயக்கத்துக்கு இணைத்துள்ளார். இன்னொருவர் முதலமைச்சராகவுள்ளார். இவர்கள் எல்லாம் எப்படி குற்றமற்றவர்களானார்கள்? கருணா இன்று அனுருத்த ரத்வத்தைக்கு கைலாகு கொடுத்து சிரித்து உரையாடுகின்றார்.

ஆனால், கிளிநொச்சியில் பிறந்ததற்காகவும் பிரபாகரனின் ஆட்சியின் கீழ் இருந்ததற்காவும் ஒரு சிறந்த மாணவி, சிறந்த வீராங்கனை இன்று பயங்கரவாத தடுப்புப் பிரிவில் வைத்து விசாரிக்கப்படுகின்றார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கூட இந்த மாணவி தொடர்பில் நற்சான்றிதழ் வழங்குகின்றனர். இந்த மாணவியின் திறமையை உலகுக்கு எடுத்துக்காட்டாமல் கைதுசெய்து தடுத்துவைக்கின்றனர்.

ஏன் இவ்வாறான தவறைச் செய்கின்றீர்கள்? புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு மீண்டும் தவறான முன்னுதாரணத்தைக் கொடுத்துவிடக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளை இனியாவது கைவிட வேண்டியது அவசியம்.

Tamilseithekal

Edited by yarlpriya

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.