Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய இலங்கையில் தமிழர்களின் தலையெழுத்து துவாரகாவுக்கு சிறைவாசம் ‐ கருணாவுக்கு அமைச்சு சுகம் ‐ உதுல் பிரேமரட்ண இணைப்பாளர் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம்‐ GTN ற்கு அனுப்பிய கடிதம்‐

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேராதனை பல்கலைகழகத்தில் கலைப் பிரிவில் 2ம் ஆண்டில் கல்வி பயிலும் ராசையா துவாரகா எனும் மாணவி கடந்த 12ம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பாக அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ண அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்.

அன்று வியாழக்கிழமை, நேரம் மாலை 5.05 பேராதனையின் அழகிய பல்கலைக்கழக வளாகம் பட்டப்படிப்பினை பெறுவதற்காக வந்திருந்த மாணவர்கள் விரிவுரையாளர் மண்டபத்திற்குள் போவதும் வருவதுமாக இருந்தார்கள்.

புவியியல் விரிவுரை மண்டபத்தை விட்டு துவாரகா வெளியே வந்தாள். அடுத்த விரிவுரை மண்டபத்துக்குச் செல்வதற்காக அடியெடுத்து வைத்தாள், பின்னாலிருந்து ஒரு குரல் கடுமையான தொனியில் கட்டளையிட்டது. ஏய் அப்படியே நில் நீண்டகாலத்துக்குப் பின்னர் காதைத் துளைத்த அந்தத் தொனியைக் கேட்ட துவாரகா அச்சம் மேலிட திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள் எங்களோடு வா மீண்டும் அந்த கடுமை அடுத்த வினாடி, ஆணையிட்டவர்கள் வந்த ஜீப் வண்டியில் துவாரகா ஏற்றப்பட்டாள். ஜீப் வண்டி அசுர வேகத்தில் கொழும்பை நோக்கி விரைந்தது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவில் 2ம் ஆண்டு மாணவியொருவர் இவ்வாறு கடத்திச் செல்லப்படுவதைக் கண்ட சக மாணவர்கள் குழப்பமடைந்தனர். அவர்கள் உடனடியாகவே பல்கலைக்கழக உப பீடாதிபதியை சந்தித்து இது குறித்து விசாரித்தபோதும் பலன் கிடைக்கவில்லை. காரணம், யாருமே இது குறித்து அறிந்திருக்கவில்லை. பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று நிர்வாகியினதும் நிலை இதுதான் மாணவர்கள் உடனடியாக பேராதனை போலீஸூக்குச் சென்றனர். CID யினர் அல்லது TID யினர் துவாரகாவை கடத்தியிருக்கக்கூடுமென அவர்கள் கூறினர். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு CIDயினரிடமும் TIDயினரிடமும் விசாரித்தபோது, எவ்வித கைதும் நடைபெறவில்லையெனக் கூறினர். தொடர்ந்து விசாரித்துப் பார்த்தபோது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இது உண்மையிலேயே ஒரு ஆட்கடத்தலாகும். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் ஒருவர் கைது செய்ய தயாராகும் பட்சத்தில், உப வேந்தருக்கும், மாணவர் பேரவைக்கும் கூறிவிட்டு பறை அறிவித்துக் கொண்டு வரவேண்டுமென்று நாங்கள் கூறவரவில்லை. ஆனாலும், இவ்வாறான கைதுகளின்போது கையாளவேண்டிய நடைமுறைகள் இருக்கின்றன.

முதலாவதாக, தாம் எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்பதைப் பற்றி அந்த நபருக்கு அறியத் தரவேண்டும். அது உலகம் ஏற்றுக் கொண்ட மனித உரிமையாகும். அதேபோன்று நிறுவனமொன்றைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்படும்போது, அது குறித்து நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு அறியத்தரவேண்டும். ஆனால் துவாரகா கைது விடயத்தில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. அனைவருமே அச்சத்தினால் ஊமையாக நின்றனர்.

எவ்வாறாயினும், இவ்வாறான கைதுகளின்போது கடைபிடிக்கப்படும் நடைமுறைகளில் தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன. LTTE யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், LTTE ல் இருந்த உறுப்பினர்கள் எனக் குற்றஞ்சாட்டி, தமிழர் என்ற காரணத்தினால் கைது செய்வதை நிறுத்தவேண்டும். சந்தேகநபர்கள் விடயத்தில் முறையான விசாரணை நடத்தாமல் மேற்கொள்ளப்படும் இவ்வாறான கைதுகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். LTTE யிடம் பயிற்சி பெற்றதாகவும், குண்டுகளையும், வெடி பொருட்களையும் கடத்தியதாக பேராதனை வளாகத்திலிருந்து கடத்தப்பட்ட துவாரகா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

துவாரகாவின் சொந்த ஊர் கிளிநொச்சி. (இன்று அவரது குடும்பமே அகதி முகாமில் அல்லல் படுகின்றனர் அவரது குடும்பத்தில் தாய், தந்தையைத் தவிர மூத்த சகோதரியும், இளைய சகோதரியும் சகோரனும் இருக்கின்றனர். அவர் பிறந்த நாள் தொட்டு கிளிநொச்சியில் LTTE யினது காட்டுத் தர்பாரே நடந்தது. LTTE யினது காட்டுத் தர்பாரின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு குடும்பமும் ஒரு உறுப்பினரை LTTE க்கு தாரை வார்க்க வேண்டும்.

எனவே, துவாரகாவின் குடும்பத்திலிருந்தும் ஒரு நபர், அதாவது, அவரது மூத்த சகோதரியோ, தம்பியோ, தங்கையோ, LTTE யின் ஆணைக்கு அடிப்பணிந்திருக்கக்கூடும். சிலவேளை துவாரகா LTTE உறுப்பினரா, இல்லையா என்பது விவாதத்துக்குறியதாகும். LTTE ன் உறுப்பினராகிய பின்னர் அவருக்கு கிழங்கும், வெங்காயமும் கொடுக்க மாட்டார்கள். குண்டுகள் கடத்திச் செல்ல அல்லது தற்கொலை அங்கிகளை கடத்தும் பொறுப்பு அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கக் கூடும் அவற்றை நிறைவேற்றத் தவறினால் அவருடைய தலைவிதி என்னவாகும்? கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். அல்லது முழுக்குடும்பமும் படுகொலை செய்யப்படும். இந்த விடயத்தை நாம் நியாயமாக சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

துவாரகா கிளிநொச்சியில் பிறந்தது அவரது குற்றமா? அதனால், LTTE உறுப்பினராக நேர்ந்தது அவரது குற்றமா? அதனூடாக குண்டுகள் கடத்த நேர்ந்தது அவரது குற்றமா?

அரசாங்கங்கள் இவற்றைக் கவனியாது LTTE யின் உறுப்பினர் என்று கூறி அவரைக் கைது செய்துள்ளது. LTTEயோடு சேர்ந்து செயற்பட்டவர்களைக் கைது செய்வதாயிருந்தால் முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் கருணா அம்மான். ஏன்? LTTE யின் கிழக்குப் பிராந்திய ஆயுதப் பிரிவின் தலைவராக இருந்தவர் கருணா அம்மான். ஆயிரமாயிரம் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொலைகாரன் தான் கருணா அம்மான். 200 போலீஸாரை ஒரேயடியாகக் கொலைப் செய்த பாதகன் இன்று அவர் அரசாங்கத்தின் கழிவறையை சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் சுகமாக இருக்கிறார். குற்றங்கள் இல்லை. வழக்குகள் இல்லை. சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட பதவியில் இருக்கிறார். அமைச்சுப் பதவியின் வரப்பிரசாதங்களையும், வருமானங்களையும் பெறுகிறார் முன்னால் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைப்பதைவிட கூடுதலான பாதுகாப்பு கிடைக்கிறது. தனி பாதுகாப்பு பிரிவொன்றே இருக்கிறது.

ஆனாலும், கருணா அம்மான் போன்றவர்களால் பலவந்தமாக LTTE க்கு சேர்க்கப்பட்டு, துப்பாக்கி முனையில் சயனைட்குப்பி கழுத்தில் தொங்க விடப்பட்ட துவாரகா போன்றவர்கள் இன்று சிறை கூடத்தில். குடும்பத்தில் ஒருவர் கட்டாயமாக LTTE ல் சேரவேண்டுமென்று கருணா அம்மான்கள் தான் ஆணையிட்டார்கள். சேராவிட்டால் குடும்பத்தோடு கைலாசம் அனுப்பியவர்களும் அவர்கள் தான். தாய் தந்தையரின் கதறலுக்கும் கெஞ்சலுக்கும் மத்தியில் கூந்தலை பிடித்து இழுத்துச் சென்று LTTE வதை முகாம்களுக்குள் தள்ளியவர்களும் கருணா அம்மான்கள் தான். அரச பாதுகாப்புப் படைகள் சந்தேகப்படாத வண்ணம், அவர்களை கர்ப்பிணிகளாக்கி வயிற்றுக்கடியில் குண்டைக் கட்டி தெற்கின் இலக்குகளை நோக்கி அனுப்பியவர்களும் இவர்களே.

அப்படியான கருணா அம்மான்கள் இன்று மஹிந்தரின் மடியில் அமைச்சர்களாக இருக்கின்றனர். LTTE ல் சேர்ந்த தமிழ் யுவதிகள் சிறைக்கூடங்களில். இதிலிருக்கும் நியாயம் என்னவென்பதை உங்களிடம் கேட்கிறோம். இப்போதிருக்கும் பிரச்சினை என்னவென்றால், துவாரகா போன்றவர்களை சிறைக்கூடங்களுக்குள் அடைத்துவைப்பது மாத்திரமல்ல, 30 வருடகாலமாக எமது நாட்டை அச்சுறுத்திய தேசியப் பிரச்சினைக்கு உண்மையான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் அதிபயங்கர பாதையில் பயணிப்பது தான்.

பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்பான LTTE யின் பிறப்பு தற்செயலாக நடந்ததல்ல. தமிழர்கள் என்ற காரணத்தால் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட அழுத்தமும், அவர்களது நியாயமான உரிமைகளும் சமவாய்ப்புகளும் மறுக்கப்பட்டமையுமே, பிரிவினைவாத இயக்கமொன்றுக்கான வாசல் திறக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தன. LTTE ன் வளர்ச்சிக்கு இவைகளே காரணமாக இருந்தன. இந்த வரலாற்றுத் தவறுக்காக பல வருடகால யுத்தத்தினால் ஈடுகட்ட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் அவர்களைத் திறந்த வெளி சிறைகளில் அடைத்து வைக்கிறது. அவர்களது சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, கருணா அம்மான்களுக்கும், பிள்ளையான்களுக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழ் இளைஞர் யுவதிகள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. சமாதானம் நிலவுகிறது என்று கூறப்படும் நிலையிலேயே இவ்வாறான அநீதிகள் நடக்கின்றன. இதுதான் சமாதானமென்றால் அதனை உடனடியாக மாற்றியே ஆகவேண்டும்.

http://www.globaltamilnews.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.