Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்த்தும் வரவும் விதிப்படி உணர்வோம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவும் வாழ்த்தும் மலர்வும் விதிப்படி உணர்வோம்

ஈழமென்போர்க்கு மலரும் நாளை எதிர்பார்க்கும்

சூழலாம் தமிழர்க்கு மகிழ்வு கிட்டும் -பிரபாகரனை

நெஞ்சில் நினைப்பார்க்கு நினைப்பது கைகூடும்

தம்வாழ்வு சிறப்போங்க வாழ்த்தும் அவரை.

தமிழர் இடர் தீர சமரும் புரிந்த

தமிழர் தலைவனடி நெஞ்சே வாழ்த்து

தமிழர்க்கு என்றும் தனிநாடு உண்டு

தாழ்ந்தவர் மேலோர் பேதங்கள் நீங்கி

சிந்தையியில் என்றும் குறிக்கோள் ஒன்றாய்

முந்தையோர் நினைவில் மூழ்கிடும் உறவால்

தந்தையாய் வேலுப் பிள்ளையின் கருவால்

வந்தவ தரித்தார் பிரபா கரனும்

ஆழ்வது கடமை அதையறிந் தவரும்

பாழ்படு சிங்களம் எதிர்த்தவர் சமர்க்களம்

புகுந்தவர் படைகள் முழங்கிய போரால்

எதிரிகள் பலரும் எதிர்க்களம் மாண்டது

அறிவீர் அறியீர் என்பது வேண்டாம்

குறியது ஈழத் தாயக மீட்பால்

சொல்லும் செயலும் சிந்தனை யெல்லாம்

தன்வசம் இருத்திய அணகலன் தளபதி

அனைத்து தமிழ்படை வீரர்கள் சூழ

விரைந்திடு தாக்குதல் பலவும் புரிந்தவர்

காரணம் யாதெனில் தமிழ்க் குடியிங்கே

தனித்தவரா ட்சிசெய்திட வென்றும்

மாற்றான் கைகளில் வாழ்ந்திடல் கூடா

எமக்கொரு தேசம் எடுத்திட உழைத்தே

மாண்டவர் பலராய் மாவீரர் வித்தாய்

ஈண்டவர் கண்களில் விழிநீர் சொரியவும்

ஆண்ட பரம்பரை ஆழ்வதில் தவறிலை

என்பதை யுணர்ந்து அவரவர் தேற்றி

அணைத்துத் தேற்றிய உறவுகள் ஒன்றாய்

வாழ்ந்தவர் பலவாய் வல்லமை யுணர்ந்து

எண்ணிய கடமையில் எதிலும் குறைவிலாத்

தலைமையை ஏற்றவர் எதரிகள் கூட்டுப்

படைதனை அழித்திட நினைந்து அவசர

டிசும் டிசும் சுடுசுடு எனவொரு சத்தம்

அடிஅடி சிங்கள ராணுவம் ஒளிய

முப்படைத் தாக்கல் முனைந்தவர் ஆங்கே

அங்கனம் தாக்குதல் நடத்திய அவர்க்கு

தளபதி மற்றும் முக்கிய வீரரும்

கடுகவே வந்து கரும்புலித் தாக்கலும்

நடத்திய அவர்க்கு நஞ்சுக் குண்டுடைக்

கொடுத்து உதவிய கூலிப் படையொடு

இளகிய தன்மை இயம்பிடு அரசியல்

பிரமுகர் பலரின் வேண்டுதல் பணிந்து

தம்மின மக்கள் தவித்திடல் வேண்டா

எம்மொழி காக்க ஏற்றவர் போரை

நிறுத்தவே இயைந்து நீதியை நிறுத்த

இதுவெனத் தருணம் என்றே யெதிரிகள்

தாக்கி யளிந்திட தவித்த தலைவரை

நாடுவிட்டேக நயந்தவர் உரையால்

நந்திக் கடலில் நடுவிலே வைத்தே

அழிந்ததாய் உடலைக் காட்டிய அவர்க்கு

உண்மை உரைப்பதாய் ஒளிப் பதிவாக்கி

காட்டிய போதும் கனிமொழி கூற்று

கசப்பெனத் தெரிந்தும் கயவர்கள் திட்டம்

வஞ்சனை வார்த்தையால் வருடியே விட்டவர்

நெஞ்சத் திரையில் நெடுநாள் தலைவன்

துஞ்ச வில்லையே துயருற வேண்டாம்

ஆஞ்சநேய பலத்துடன் அறநெறி காப்பார்

என்பது உறுதி என்றவெம் நெஞ்சம்

நாளைய தினத்தில் பெருமெதிர் பார்ப்பை

வேளை யறிந்து வேண்டா தவரும்

தொலைக் காட்சி முன்பே யிருப்பது

அந்நாள் தனிலே காணும் காட்சியை

எந்நாள் வருமோ என்ற ஏக்கமாய்

உத்தமத் தலைவனை ஒருதினம் நினைந்து

தமிழ்கவி அதிகம் பாடிய நானும்

இத்தின மதிலே இதயம் நெகிழ்ந்து

சித்தம் உருகி வாழ்துவ தல்லால்

வேறொன் றறியேன் வெந்த புண்ணானேன்

வாழ்த்தும் வரவும் விதிப்படி யுணர்ந்தோம்

வாழ்கவே நெடுநாள் உம்புகழ் ஓங்க

வாழ்க வாழ்க தேசம் வாழ்த்திட

வாழ்க வாழ்க தனியீழங் காக்க

வாழ்க வாழ்க எதிரிகள் நடுங்க

மலரும் தேசம் மகிழ்வுடன் காண

உறுதி உறுதி யென்பது உண்மையே

உறுதி உறுதி உண்மைகள் ஓங்கவே

வரணும் வரணும் பிரபா கரனே

வரணும் வரணும் வையகஞ் சிலிர்க்க

வரணும் வரணும் வரலாற் றுடனே....................

அளவையூரான் பிரபாகர கவசம் முற்றும்

Edited by கவிக்குமரன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.