Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழத்துக்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு "பிரான்ஸ்"

Featured Replies

மேலதிக தகவல்களை தெரிந்தோர் இங்கு இணைக்க நன்றி :)

  • தொடங்கியவர்

வாக்களிக்கத் தயாராகும் பிரான்சு வாழ் ஈழத்தமிழர்கள்

திகதி: 04.12.2009 // தமிழீழம்

பிரான்சில் டிசம்பர் 12,13 ம் திகதிகளில் நாடு தழுவியரீதியில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீழ் வலியுறுத்தி தமிழரின் தாகத்தை தரணிக்கு கூறவிருக்கிறார்கள்.

தமிழர்களின் ஒரே தீர்வு தனித்தமிழீழம் தான் என்பதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தவும், தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கும் பலம்பொருந்திய உலக சமுதாயத்திற்க்கு வலுச்சேர்க்கவும் ஜனநாயக ரீதியில் நடைபெறும் இத்தேர்தலானது பிரான்சின் சட்டதிட்டத்திற்க்கு அமைவாக அந்தந்த பிராந்தியங்களில் நடைபெறவிருக்கிறது.

டிசெம்பர் 12ம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் இரவு 20.00 மணிவரையும், 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 8.00 மணிமுதல் பி.பகல் 15.00 மணிவரையும் நடைபெறவிருக்கிறது.

இலங்கைத்தீவின் தமிழ்மக்களாகிய நாம் தனித்துவமான தேசியமும், பாரம்பரிய தாயகமும், சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இத்தீவின் வடக்கு கிழக்கு நிலப்பரப்பின் சுதந்திரமும், இறைமையும் கொண்ட தமிழீழ அரசு உருவாக வேண்டும் என நான் விரும்புகின்றேன், என்பதனை இந்த வாக்களித்தல் மூலமாக பிரான்சு வாழ் ஒவ்வொரு தமிழர்களும் தெரிவிக்கவிருக்கிறார்கள்.

மேலதிக தொடர்புகள்:

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு

திரு: 06 15 88 42 21 - பாலா: 06 14 11 46 10

mte.france@gmail.com

சங்கதியில் இருந்து...

வட்டக்கோட்டைத் தீர்மான மீழ் வலியுறுத்தல் எந்த வகையில் முக்கியம் பெறுகின்றது என்பது தொடர்பாக, மக்களிடையே அரசியல் விழிப்பு நிலையை ஏற்படுத்துவதற்கான செயற்பாட்டில். தமிழரிடை இயங்கும் ஒலி, ஒளி ஊடகங்களின் பங்கு போதுமானதா?

  • தொடங்கியவர்

வட்டக்கோட்டைத் தீர்மான மீழ் வலியுறுத்தல் எந்த வகையில் முக்கியம் பெறுகின்றது என்பது தொடர்பாக, மக்களிடையே அரசியல் விழிப்பு நிலையை ஏற்படுத்துவதற்கான செயற்பாட்டில். தமிழரிடை இயங்கும் ஒலி, ஒளி ஊடகங்களின் பங்கு போதுமானதா?

போதுமானதாக இல்லை....

அதுபற்றிய செய்திகளை இன்றுதான் சில இணயங்களில் காணகூடியதாக உள்ளது. :D

மேலும் தகவல் தேவை. தகவல்கள் அறிந்தோர்... அறியாதோருக்கு இந்த தகவல்களை பரிமாறவும் நன்றி

போதுமானதாக இல்லை....

அதுபற்றிய செய்திகளை இன்றுதான் சில இணயங்களில் காணகூடியதாக உள்ளது.

மேலும் தகவல் தேவை. தகவல்கள் அறிந்தோர்... அறியாதோருக்கு இந்த தகவல்களை பரிமாறவும் நன்றி

ஜீ ரி வி நிறுவனம், வடம் பிடிச்சு கரம் கொடுக்கச் சொல்கினம், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீழ் வாக்குப் பதிவுக்கான கருத்துப் பரிமாற்ற நிகழ்சிகளை நடத்துவதாக இல்லை.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ ரி வி நிறுவனம், வடம் பிடிச்சு கரம் கொடுக்கச் சொல்கினம், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீழ் வாக்குப் பதிவுக்கான கருத்துப் பரிமாற்ற நிகழ்சிகளை நடத்துவதாக இல்லை.

வடத்தை முதலில் பிடிச்சாத்தானே தாக்குப்பிடிக்கலாம். பிறகுதானே வட்டுக்கோட்டையெண்டாலென்ன 13வது திருத்தமெண்டாலென்ன பேச முடியும்.

வடத்தை முதலில் பிடிச்சாத்தானே தாக்குப்பிடிக்கலாம். பிறகுதானே வட்டுக்கோட்டையெண்டாலென்ன 13வது திருத்தமெண்டாலென்ன பேச முடியும்.

தனியார் நிறுவனத்திற்கு வடம் பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாக தெரியவில்லையா?

Edited by kalaivani

  • தொடங்கியவர்

"பிரான்ஸ் தழுவிய வாக்கெடுப்பு" - கருத்து கணிப்பு தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு நேரடி ஒளிபரப்பு

திகதி: 04.12.2009 // தமிழீழம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தனித்தமிழீழ அரசிற்கான மீள்வலியுறுத்தலுக்கான கருத்துக் கணிப்பு எதிர்வரும் 12ம் 13ம் திகதிகளில் பிரான்சில் நடைபெற உள்ளதை முன்னிட்டு இக்கருத்துக் கணிப்பு தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு நேரடி ஒளிபரப்பு தமிழ்கதிர் (www.tamilkathir.com) இணையத்தில் எதிர்வரும் 07.12.2009 திங்கட்கிழமை இரவு 20.00 மணிக்கு இடம்பெற உள்ளது.

இவ் நேரடி ஒளிபரப்பில் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:

06 15 88 42 21 அல்லது 06 14 11 46 10

www.tamilkathir.com

  • தொடங்கியவர்

தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

திகதி: 06.12.2009 // தமிழீழம்

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் விருப்பம் மட்டுமே என்று உண்மைக்கு புறம்பாக கூறி, நியாயமானதும், ஈழத்தமிழரின் மிக நீண்ட காலப்போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய தமிழர்களின் சுதந்திரத்தையும், இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவருவதாக தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

1977ல் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு இலங்கையில் தமிழ் மக்கள் வழங்கிய தமது ஏகோபித்த தீர்ப்பினை மீள் உறுதிப்படுத்தும் கருத்துக் கணிப்பு வாக்களிப்பு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 12ம்,13ம் திகதிகளில் பிரான்சு தழுவிய ரீதியில் நடைபெறப்போவதை அறிந்திருப்பீர்கள்.

இன்னும் அறியாதோருக்கு இத்தால் அறியவும் தருகின்றோம். ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் விருப்பம் மட்டுமே என்று உண்மைக்கு புறம்பாக கூறி, நியாயமானதும், ஈழத்தமிழரின் மிக நீண்ட காலப்போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய தமிழர்களின் சுதந்திரத்தையும், இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவருவதாகவும், உண்மைக்கு புறம்பான மாறுபட்ட செய்திகளும் கருத்துக்களையும் பரவலடையச்செய்வதோடு ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடன் செயற்பாடுகளும், இந்த வரலாற்றுக் கடமைக்கு ஒத்துழையாமையும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வகையில் தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான எமது சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி தமிழ் மக்களின் பெரு விருப்பும் அதுவே என்பதை உலகிற்கு தெளிவாக பறைசாற்றும் நிகழ்வாக அமையும்.

இந்த வழிமொழிவு இன்று ஈழத்தமிழர்களின் தேசிய அரசியற் போக்கை தீர்மானிக்கும் காலத்தின் தேவைகருதிய முன்னெடுப்பாகும். எனவே இந்த அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுத்து வெற்றியடையச் செய்யவேண்டிய மிகபெரிய பொறுப்பு ஈழத்தமிழ் மக்களுக்கும், தமிழ்பேசும் மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயல்படுகின்ற அனைத்து அமைப்புகளுக்கும் தலையான கடமையாகவும் உள்ளது.

ஆகையினால் இவ் அமைப்புகள் காலத்தின் தேவையையை, கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும். இந்தவகையில் இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் எமது முழுமையான பங்களிப்பை, அர்பணிப்புடன் விட்டுக்கொடுப்புடனும் தொடர்ந்து செயற்படுத்துவோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sangathi

  • தொடங்கியவர்

நன்றி :lol:

post-1503-12603018783493_thumb.jpg

post-1503-12603018932719_thumb.jpg

  • தொடங்கியவர்

தமிழரின் தாகமாம் தமிழீழத்தை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானக் கருத்துக் கணிப்பு எதிர்வரும் 12ம் 13ம் திகதிகளில் பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் நடைபெறவிருக்கிறது.

எனவே அனைத்து மக்களும் தவறாது சென்று வரலாற்றுக் கடமையைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் நீங்கள் எந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களாயினும் உங்கள் அருகாமையில் வேறு பிராந்தியத்திற்குரிய வாக்குச்சாவடி இருக்குமாயின் நீங்கள் அங்கு சென்றும் உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.

http://www.puthinamnews.com/?p=3027

  • தொடங்கியவர்

http://www.tamilkathir.com/news/2191/57//d

தமிழ் இளையோர் பாடல்...... France

Edited by Netfriend

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.